ஏர்டெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியரைச்
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் BE (EEE) படித்த பொறியியல்
பட்டதாரி அவரது பணியிடம் சென்னை. தொலைபேசி பழுதுகளைச் சரி செய்வது அவரது பணி.
பணிக்காலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை. 12 மணி நேரப் பணி. ஒரு பழுது 24 மணி நேரத்திற்கு
மேல் சரி செய்யப்படவில்லையெனில் அதனால் நிறுவனத்துக்கு ஏற்படும் சராசரி வருமான இழப்பை
அந்த ஊழியர் ஈடு செய்ய வேண்டுமாம்.
அவருக்கு தொழில் உண்டு
தொழிற்சங்கம் கிடையாது
அவரது மாதச்
சம்பளம் ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு.
இது வரை 23 முறை நிர்வாகம்
அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.
வேலை நேரம் மேலும்
ஒரு மணி நேரம் கூடவுள்ளதாம். சம்பள்ம் கூடுமா என்ற கேள்விக்கு அவரால் பதில் பதில்
கூற இயலவில்லை.
BSNL நிறுவனத்தில்
ஏதேனும் பணி கிடைக்க வாய்ப்பு உண்டா என அவர் கேட்டார். மெளனத்தைத் தவிர வேறு என்ன
பதில் தர இயலும்?
என்று மடியும்
இந்த சுரண்டல் அவலம்?
No comments:
Post a Comment