NFTECHQ

Monday 27 January 2014

இளைஞர்களுக்கு வாய்ப்பு



தற்பொழுது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எந்த அமைப்பும் இதற்கு விதி விலக்காக இல்லை.

நமது துறையில் பொறியியல் படிப்பு முடித்து, ஒரு கடினமான தேர்வு எழுதி, பயிற்சி முடித்து ஆயிரக் கணக்கான இளம் தோழர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தோழர்களுக்கு பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் போன்றவற்றில் தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன. தங்களது பிரச்சனைக்கு  தீர்வு வரவில்லையே என்ற ஏக்கம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இளைஞர்களின் திறமை, ஆற்றல், அறிவு இவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் நிறுவனமே வாழும். வளரும். நிலைத்து நிற்கும்.

இளைஞர்களின் திறமை, ஆற்றல், அறிவு இவற்றை 
மதிப்பதும்அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்வதும் ஒரு நல்ல நிர்வாகத்தின் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமது நிர்வாகம் தவறி விட்டது. இந்நிலையில் பொறுப்புள்ள, சமூக நோக்கமுள்ள தொழிற்சங்கம் இப்பிரச்னையில்  நமது சங்கம் அக்கறை கொண்டு செயல்பட்டது. இப்பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதுவே நிறுவனத்துக்கும், அந்த இளம் தோழர்களுக்கும், நமது சங்கத்துக்கும் நலலது.

காலத்தே சில பிரச்னைகளை தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.

No comments:

Post a Comment