01.01.2014 முதல் 5 சதம்
பஞ்சப்படி உயரும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதா?
மாதச் சம்பளத்தின் அளவு கூடும் என்பது மகிழ்ச்சி தரும் என்பது உண்மைதான்.
ஆனால் விலைவாசி இந்த அளவுக்கு
உயர்கிறது என்பது மிகவும் கவலைக்குரியதாகும். விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும்
சாதாரண ஏழை எளிய மக்களின் வேதனைக்கு என்ன விடிவு?
உற்பத்தி செய்வோர் தங்கள்
உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற் லாபம் கிடைப்பதில்லை என வருந்துகின்றனர். விவசாயிகளும்
விவசாயத் தொழிலாளிகளும் படும் துயரம் எல்லை தாண்டியதால் தற்கொலைகளும் நிகழ்கின்றன.. ஆனால் நுகர்வோர் விலைவாசி
உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். இடையில் சிலரது கொள்ளை லாபம் அடிக்கும் செயல்கள்
முறியடிக்கப்பட்டால் விலைவாசி உயர்வு
கட்டுப்படும்.
No comments:
Post a Comment