ஈரோடு மாவட்ட சிறப்பு செயற்குழு அந்தியூர் குருநாதசாமி வனத்தில் இயற்கை
சுழலில் நடைபெற்றது. தோழர்
கே.ராஜமாணிக்கம் தலமை ஏற்று எதிர் வரும் சரிபார்ப்பு தேர்தல் தொடர்பான பணிகள் பற்றி
விரிவாக விளக்கினார். மாநில துணைச்
செயலர் தோழர் யாசின் வரும் தேர்தலில் NFTE சங்கம் வெற்றி பெற்று முதன்மைச் சங்கமாக
ஆக்கிட ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி பட்டியலிட்டார். ஆய்படுபொருளை அறிமுகம் செய்து நடைபெற்ற தேர்தல் தொடர்பான பணிகள்,
கடமைகள் பற்றி விளக்கினார்.
கிளைச்
செயலர்கள் தோழர்கள் தங்கமணி, செந்தில், பத்மநாபன், நாகராஜன், வெங்கடேசன், சுப்பிரமணி,
முருகசாமி, மகேந்திரன், ஆறுமுகம், கிருபாகரன், பால்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
தோழர்கள் லாசர், ஆறுமுகம், ராஜேந்திரன், புண்ணியகோட்டி, ராமன், குலோத்துங்கராயன், ஈஸ்வரன்,
ஜெயராமன், மெளனகுருசாமி, ரங்கநாதன் ஆகியோர் தேர்தல் பணிகள் பற்றி தங்கள் கருத்துக்களை
முன் வைத்தனர்.
அறிக்கைகள், நோட்டீஸ்கள், பேனர்கள் கிளைகளுக்கு வழங்கப்பட்டன. முன்னணி
தோழர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
தோழர்
மாலி வரும் தேர்தலின் சிறப்பு, வாக்கு எண்ணிக்கையை உயர்த்துவதற்கான உத்திகள் பற்றி
விளக்கினார்.
தொடர்ந்து கூடுதல் வாக்குகள் பெற்று வருவது ஈரோட்டின் சிறப்பு. இம்முறை
மாவட்டத்தில் முதன்மை சங்கமாக வெற்றி பெற அனைவரும் சபதம் ஏற்றனர்.
செயற்குழுவிற்கான
சிறப்பான ஏற்பாடுகள் செய்த அந்தியூர் கிளைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment