இனி என்று காண்போம்
இனிய தோழனின்
இன்முகத்தை
பாசக்கார தோழன் பங்காரே
பழகுவதற்கு இனிய தோழன் பங்காரே
பற்றின் ஊற்றுக்கண் தோழன் பங்காரே
கட்டுப்பாட்டின் களஞ்சியமாம் தோழன்
பங்காரே
விசுவாசத்தின் விளைநிலமாம் தோழன் பங்காரே
கொள்கையின் இமயமாம் தோழன் பங்காரே
அலுவலகப் பணியானாலும்
இயக்கங்களின் பணியானாலும்
அர்ப்பணிப்போடு ஆற்றி முடிக்கும்
அருமைத் தோழன் பங்காரே
கொல்லிமலை வாசத்தை ஏற்ற உன்னை
கொல்லிமலை மண் உன்னை
தனக்குள் இவ்வளவு அவசரமாக
தாங்கிக் கொள்ள விரும்பய்து ஏண்
அந்த மண்ணின் மீது உனக்கு அவ்வளவு
பாசமா
அந்த மண்ணுக்கு உன் மீது அவ்வளவு
பாசமா
மறையும் வயதை நீ அடைய வில்லையே
மரணம் இயற்கைதான்
இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய வயதல்லாவா
தோழன் பங்காரே
உன் பாசவலைக்குள் விழுந்த எங்களை
இறுதியாக ஒரு முறை உன் இன்முகத்தை காண முடியாத சூழ்லில் மறைந்த தோழன் பங்காரே
இது ஒன்று மட்டுமே நீ அறியாமல் செய்த
தவறு.
அந்தத் தவறு கூட இயற்கையின் தவறுதான்.
அன்புத்தோழனே
உன் மறைவுக்கு மாவட்டச் சங்கத்தின்
சார்பாக செவ்வணக்கத்துடன் கூடிய அஞ்சலி.
தோழன் பங்காருவின் குடும்பத்தாருக்கு
அழ்ந்த இரங்கல்..
No comments:
Post a Comment