மே தின வாழ்த்துக்கள்
உழைப்பாளிகள் வாழ்வில் ஒரு உன்னத
விடியலை உருவாக்கிய தினம் மே 1 .
சிலரின் உயிர்த்தியாகமும்,
பலரின் உதிரத் தியாகமும் உழைப்பு,
ஓய்வு, உறக்கம் இவை ஒவ்வொம்றூக்கும் எட்டு மணி நேரம் என வரையறுத்துத் தந்தன.
தனியார்மயம் தலைதூக்கிய பின்னர் எட்டுமணி
நேர வேலை என்பது காலாவதியாகி விட்டது.
12 மணி நேரம், 14 மணி நேரம் என உழைப்பு
நேரம் மாறிவிட்டது.
இத்தகைய நிலைகள் மாற இன்னும் போராட
வேண்டிய நிலை உள்ளது.
வேலையின்மை ஒரு புறம் சுரண்டல்
மறுபுறம் என சமுதாய அவலம் தொடர்கிறது.
மே தினத் தியாகிகளின் வழியில் சமரசம்
இன்றி போராடுவதே மேதினத் தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment