NFTECHQ

Wednesday 13 May 2015

சத்தியமங்கலம் கிளை மாநாடு

12.05.2015 அன்று சத்தியமங்கலம் கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருமண மண்டபத்தில் கிளை மாநாட்டை அற்புதமான ஏற்பாடுகளுடன் அருமையாக நடத்திட்ட சத்த கிளைத் தோழர்களை பாராட்டுகிறோம்.வாழ்த்துகிறோம்.
இயக்கம் விடுக்கும் போராட்ட அறைகூவல்களை
100 சதவிகிதம் நிறைவேற்றும் பெருமை மிக்க கிளையின்  மாநாடு.
கிளைத்தலைவர் தோழர் ராமகிரிஷ்ணன் தலைமை ஏற்றார்.தோழர் நல்லுசாமியின் உண்ர்வுபூர்வமான முழக்கங்களுடன்
மரபின் படி தேசியக் கொடியை தோழர் குல்சார் அகமது
ஏற்றி வைத்தார். சங்கக் கொடியை தோழர் காசிலிங்கம் ஏற்றி வைத்தார்.
மாவ்ட்ட செயலர் தோழர் லாசர் சிறப்பான துவக்கவுரை ஆற்றினார்.
கோட்ட அதிகாரி திரு அண்ணாதுரை,
துணைக்கோட்ட அதிகாரிகள் திரு பழனியப்பன், திரு நாகராஜ், தோழர் முருகேசன் (BSNLEU) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
செழுமையான் ஆண்டறிக்கை, நேர்மையான வரவு செலவுக் கணக்கு ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டன. தோழர்கள் காசிலிங்க்கம் (TM),  சுப்ரமணி (STSO), ராமகிருஷ்ணன்(TM ) ஆகியோர முறையே தலைவர் செயலர்,பொருளர் பதிவிகளுக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிக்ளை வாழ்த்தியும் இரணடு நாட்கள் வேலைநிறுத்த்ம் அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து குமார் உரையாற்றினார்.
அறிவு, ஆற்றல், திறமை, நேர்மை, பொறுமை இவற்றைத் தன்னகத்தே கொண்ட தோழர் சுப்ரமணி மீண்டும் கிளைச்செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
கிளையின் செயல்பாடு சிறக்க மாவ்வட்டச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment