மாவட்டச் செயற்குழு 28.06.2014 அன்று ஈரோட்டில் நடைபெற்றது.
செழுமையான, ஆக்கபூர்வமான விவாதங்களோடு நல்ல ஆலோசனைகளும்
தந்திட்ட செயற்குழுவாக அமைந்தது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும்
விழாவினை இந்த ஆண்டும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கான பணிகளை விரைந்து
முடித்திட வேண்டும்.
சேலம் மாநிலச் செயற்குழுவில் மாநிலச் செயலர் பணிக்குழு (WORKS
COMMITTEE) குறித்து பயிலரங்கம் ஒன்றை ஈரோட்டில் நடத்தித் தர விடுத்த
வேண்டுகோளை ஏற்று அதைச் சிறப்பாக நடத்திட வேண்டும்.
நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சேவைக்கும் தடையாக உள்ள
சிக்கல்கள் குறித்து பொது மேலாளரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும்.
கிளை மாநாடுகள் நடத்திட வேண்டிய கிளைகள் கிளை மாநாட்டை
நடத்திட வேண்டும் என்பதன் அவசியத்தை விளக்கி அதற்கான காலமும் நிர்ணயம்
செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டச் சங்கத்தின் இணைய தளத்தை மாவட்டத் தலைவர்
குமார் பராமரிக்க வேண்டும்.
`இந்த ஆண்டு போனசைப் பெற்றிட மத்திய சங்கம் உறுதியான நடவடிக்கைகள்
எடுத்திட வேண்டும் என மாவட்டச் செயற்குழு வலியுறுத்தியது.
No comments:
Post a Comment