NFTECHQ

Friday 11 January 2013


 அவர்? . . . . .இவர்?

இவர் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கல்லூரி நாட்களிலேயே அரசியல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 'இந்தியன் போஸ்ட்' என்ற தொழிற்சங்க பத்திரிக்கையில் 'அவர்' எழுதிய கட்டுரை இவருக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. 1946 டிசம்பர் அக்கோலாவில் நடைபெற்ற அஞ்சல் ஊழியர் அகில இந்திய மாநாட்டில் இவரும் அவரும் சந்தித்தனர்.  இவர் அவரை விட வயதில் இரண்டு வயது மூத்தவர். அக்கோலவில் துவங்கியது இருவரின் நட்பும் தோழமையும். 1965 இல் ஒரு வாய்ப்பில் இவரை  'அவர்' தேசீய தபால் தந்தி தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலராக ஒருமனதாக தேர்வுபெற வைத்தார். 1978 இல் இவர் பணி ஓய்வு பெற்றார். சம்மேளன பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து விடைபெற்றார். சம்மேளன பொதுச் செயலராக 'அவர்' ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தனது அன்பிற்குரிய தலைவரால் தலைவரானவர் இவர் தோழர் D.ஞானையா. 'அவர்' நமது அன்பிற்குரிய  மாபெரும் தலைவர் ஓம்.பிரகாஷ் குப்தா.  

No comments:

Post a Comment