NFTECHQ

Sunday, 25 December 2016

குற்றமும்

தண்டனையும்

நாட்ட்டையும்,
நாட்டின் வளங்களையும்,
அதிகாரத்தைப்
பயன்படுத்தி அள்ளி அள்ளிக்
கொள்ளையடிப்போர் பலர்.

அவர் தம் பெரிய மற்றும் சின்ன வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனைகள்
நடப்பது வழக்கம்மான ஒன்று.

வருமானவரித்துறை,
மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் மிக நுணுக்கமாக தங்கள் நுண்ணறிவைப் பயன்படுத்தி
கயவர்களின் இடங்களில்
சோதனை செய்கின்றனர்.
இது மிகவும் சரியான,
தேவையான நடவடிக்கையே.

ஆனால்.....
சாதாரண ஊழியர்கள் தவறு செய்தால்
தண்டனைகள் பாய்கின்றன.

மிகப்பெரிய, மிகச்சிறிய அதிகாரிகள்
குற்றம் புரிந்தால்,
சோதனைகள் நடந்தால் பரபரப்பான செய்திகள்
ஏராளமாக உலா வருகின்றன.

அதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ யாம் அறியோம்.

மழையில் நனைந்த பட்டாசின் கதையாகி விடுகிறது.

தனியாகவோ, கூட்டாகவோ ஏதோ
செய்து தப்பித்து விடுகிர்கள்.

நமது நிறுவனத்தில் கூட இப்படிப்பட்ட
நிகழ்வுகளைப் பார்த்து இருக்கிறோம்.

தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற நிலை என்பது உறுதியானால் மட்டுமே குற்றங்கள்
இல்லாத நிலை உருவாகும்.

இல்லையெனில் சில நாட்களுக்கு ஊடகங்களில் பரபர செய்திகள் கிடைப்பது மட்டுமே மிஞ்சும்.

அது மட்டுமல்ல மக்கள் வைத்திருக்கும்
கொஞ்ச நம்பிக்கையும் நாசமாய்ப் போகும்.

No comments:

Post a Comment