NFTECHQ

Friday, 30 December 2016

மாவட்டச் செயற்குழு


29.12.2016 அன்று அந்தியூரில் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத் துவக்கி வைத்தார்.

மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படு பொருள் பற்றி எடுத்துரைத்து இன்றைய சூழல் குறித்து உரையாற்றினார்.

மாவட்ட மாநாட்டுக்குப் பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு. இதில் இதுநாள் வரையான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுக் கணக்கை முன்னாள் பொருளாளர் தோழர் ராஜேந்திரன்   பொருளர் தோழர் மெளனகுருசாமியிடம் வழங்கினார்.

கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் ஊழியர் பிரச்னைகள் மற்றும் அமைப்பின் வளர்ர்ச்சி குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் மருத்துவச் சிகிச்சை குறித்த பிரச்னைதான் பிரதானமாக இருந்தது.

கேபிள், ட்ராப் வயர், இன்ஸ்ட்ரூமெண்ட் பற்றாக்குறை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

ஹங்க்கமா பிரச்னையால் தொலைபேசி இணைப்புகள் சரண்டர் ஆகும் நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

பிரச்னைகளை உரிய மட்டத்தில் விவாதித்து தீர்வு காண  முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்டச் செயலர் தனது தொகுப்ப்ரையில் தெரிவித்தார்.

செயற்குழுவைச் சிறப்பாக நடத்த உதவிட்ட அந்தியூர் தோழர்களுக்கு பாராட்டுக்கள்

No comments:

Post a Comment