NFTECHQ

Saturday, 24 December 2016

பெரியார் நினைவு தினம்

டிசம்பர் 24

தொலைபேசி குறித்து பெரியார்


இங்கிருந்து கொண்டே பட்டினத்துக்கு டெலிபோன் (தொலை பேசி) மூலம் பேசலாம். இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து வடகோடி இமயமலை அடி வாரத்தில் உள்ளவரிடம் பேசலாம். ஆங்கில நாட்டுடன் பேசலாம்.

இவைகள் என்ன? மாயமா! மந்திரமா! மாயா ஜாலமா! அல்லது யாராவது நடுவில் இருந்துகொண்டு தவம் செய்கிறார்களா? மந்திரம் ஜெபிக்கிறார்களா? ஒன்றுமே இல்லை! அவைகள் (மந்திரம், தவம்) அத்தனையும் பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கவே இவ்வித அற்புதங்கள் தோன்றி இருக்கின்றன. எல்லாம் பகுத்தறிவு சக்திதான். இவைகள் அத்தனையும் பகுத்தறிவால் உண்டானவை. இப்படி மனிதன் பகுத்தறிவின் தன்மையால் மிக முன்னேற்றமடைந்து கொண்டு போகிறான். இந்த நிலைமை இன்னும் எவ்வளவு தூரத்தில் போய் முடியுமோ தெரியவில்லை. அவ்வளவு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது."


எம்.ஜி.ஆர்
நினைவு தினம்

டிசம்பர் 24

ஏழை மக்களின் உணர்வுகளையும்
அவர்களின் தேவைகளைகளையும்
புரிந்து அறிந்து அரசியல் நடத்தியவர்.


Friday, 23 December 2016

உலக விவசாயிகள் தினம்
டிசம்பர் 23
வயிற்றுக்குச் சோறிட்டு
வாழ்வுக்கு வழி செய்யும்

விவசாயிகளை
நன்றியோடு
வணங்குவோம்.

சேற்றில் கைவத்து
சோற்றுக்கு வழி செய்யும்
விவசாயி இன்று
விஷ மருந்துப் பாட்டில்களில் கைவைத்து
விலைமத்திப்பில்லா தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் விபரீதங்கள்  விவரிக்க முடியாத சோதனையாகி விட்டது.

விவசாயிகளின் வாழ்க்கையில்

விளையாடுவோர் உருப்பட முடியாது.
தயவு செய்து
தவறாமல் வாசிக்கவும்

தலைமைச் செயலாளருடன் ஒரு சந்திப்பு!

உள்ளாட்சிகள் தொடருக்காகக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு முன்பாக தலைமைச் செயலாளரைச் சந்தித்துவிடுங்கள் என்றார் பேராசிரியர் பழனிதுரை. அலைபேசி எண்ணையும் அளித்தார். 'பேசக்கூடத் தேவையில்லை. நேராக தலைமைச் செயலகத்துக்குச் சென்றுவிடுங்கள்' என்றார்.
அலைபேசியில் அழைத்தேன். முதல் மணியோசையிலேயே எடுத்தார். 'தாரளமாக வாருங்கள்' என்றார். எப்போது என்றதற்கு, 'எப்போது வேண்டுமானாலும்' என்றார்.
மறுநாள் காலை தலைமைச் செயலகத்தில் காவலர்களை எதிர்கொண்டோம்.
'தி இந்து' என்று தொடங்கியபோதே இடைமறித்து, எனது பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சொன்னவர்கள், தலைமைச் செயலாளர் அறைக்கு அனுப்பி வைத்தார்கள். 9 மணிக்கு ஒருவர் வந்தார். காவலாளிகள் சல்யூட் அடித்த பின்பே அவர் தலைமைச் செயலாளர் என்று புரிந்தது. அழைப்பு வந்தது.
பேட்டி என்றதும், 'என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்' என்றார். பேட்டியாகத் தொடங்கியது, உரையாடலாக நீண்டது. ஒருகட்டத்தில் அது விவாதமானது. கேள்விகளை கவனத்துடன் எதிர்கொண்டார். தீர்க்கமாகப் பதிலளித்தார். மாநிலத்தின் உச்ச பொறுப்பிலிருக்கும் ஓர் உயர் அதிகாரியுடனான சம்பிரதாய சந்திப்பாக அமையவில்லை அது. நிபந்தனைகளற்ற நட்புடனான சந்திப்பைப் போல அமைந்தது அது. ஊழல் தொடர்பான பேச்சு வந்தபோது, ஊழலைக் கடுமையாக விமர்சித்தார். 'யார் செய்தாலும் தவறுதான். அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி' என்றவர் சில விஷயங்களைக் குறிப்பிட்டார். லேசான அதிர்ச்சியுடன் 'இதையும் பிரசுரிக்கலாமா?' என்று கேட்டபோது, 'உண்மையை பிரசுரிப்பதில் என்ன சங்கடம்?' என்றார்.
சுமார் இரண்டு மணி நேரம். அறைக்கதவு திறந்தே கிடந்தது. இடையிடையே அலுவலர்கள் வந்து சென்றார்கள். என்னிடம் பொறுத்துக்கொள்ளும்படி சைகையில் தெரிவித்துவிட்டு, கோப்புகளில் கையெழுத்திட்டார். பலவற்றை திருத்தமிட்டுத் திருப்பி அனுப்பினார். ஆசிரியர்கள் வந்தார்கள். விவசாயிகள் வந்தார்கள். அழுக்கு வேட்டி, தோளில் துண்டுடன் சிலர் பேசிவிட்டுச் சென்றார்கள்.
வந்தவர்கள் எவரிடமும் பயமில்லை, பவ்யமில்லை, குனியவில்லை. குழையவில்லை, கைகட்டி வாய் பொத்திப் பேசவில்லை. உயரதிகாரியின் பேச்சை மறுத்துப் பேசும் ஜனநாயகம் அங்கே இருந்தது. நியாயமான மறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வும் அங்கே இருந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் சலிக்காமல் பதில் அளித்தார். சந்திக்க வந்தவர்கள் எவரும் எங்கேயும் காத்திருக்கவில்லை. உதவியாளர்களிடம் நேரம் கேட்டு முன்பதிவு செய்யவில்லை. சிலர் அந்த அறைக்குள் இருக்கும் இருக்கையில் நன்றாக சாய்ந்து, கால்நீட்டி அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிச் சென்றார்கள்.
அரசு உயர் அதிகாரிகளுக்காக பங்களாக்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் தலைமைச் செயலாளருக்கான பங்களா பெரியது; நவீனமானது. ஆனால், இவர் நகரின் நெரிசலான பகுதியிலிருக்கும் தனது சிறிய ஓட்டு வீட்டிலிருந்தே தினசரி அலுவலகம் வந்து செல்கிறார். அந்த வீடும் அவர் வாங்கியதில்லை. அவரது பெற்றோர் வாங்கியது. மரியாதை நிமித்தம், சம்பிரதாய நிமித்தம் என்பதற்கெல்லாம் அங்கே இடமில்லை. தார்மிகம் தர்மம் மட்டுமே கோலோச்சுகிறது. ஏனெனில் அது கேரளம். ஆனால், நான் சந்தித்த அதிகாரி விஜயானந்த் ஒரு தமிழர். குமரி மாவட்டம், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்தவர்!

- டி.எல்.சஞ்சீவிகுமார் தமிழ் இந்து 23.12.2016

Wednesday, 21 December 2016

தகவலுக்காக

செப்டம்பர் 2016 கணக்குப்படி
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட
அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை  1761

அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் 6


அங்கீகாரம் பெற்ற மாநிலக்கட்சிகள் 48.

நன்கொடை

 

ரூ.20,000-த்துக்கும் மேலான நன்கொடைகளில் தேசிய கட்சிகள் பெற்ற தொகை ரூ.102 கோடி: பாஜக முதலிடம்  



ரூ.20,000த்துக்கும் மேலான நன்கொடைகள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்ற நிலையில் இத்தகைய நன்கொடைத் தொகைகள் தேசியக் கட்சிகளுக்கு ரூ.102 கோடி வரை வந்துள்ளதாக ஜனநாயகச் சீர்த்திருத்த கூட்டமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை இணைந்து வெளீயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இத்தொகையில் பாஜக ரூ.76.85 கோடி வரை நன்கொடை பெற்றுள்ளது, அதாவது 613 நன்கொடைகள் மூலம் இந்தத் தொகை பாஜக-வுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 918 நன்கொடையாளர்கள் மூலம் ரூ.20.42 கோடி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 

ரூ.20,000த்துக்கும் குறைவான நன்கொடைகள் ஆய்வுகளுக்குள் வராது. இதனையடுத்தே ரூ.2000த்துக்கும் மேலான பெயரில்லாத நன்கொடையினை மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
 

இந்த அறிக்கை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த கணக்கு விவரங்களின்படி சேகரிக்கப்பட்டதாகும். 2015-16-ல் ரூ.20,000த்துக்கும் அதிகமாக நன்கொடை பெறாத கட்சி பகுஜன் சமாஜ் கட்சியாகும்.
 

2014-15அ-ஐ ஒப்பிடும்போது 2015-16-ல் நன்கொடைகள் 84% குறைந்துள்ளது, அதாவது தொகைரீதியாக ரூ.528 கோடி குறைந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 

2014-15-ல் பாஜக பெற்ற நன்கொடை மதிப்பு ரூ.437.35 கோடி, இது 2015-16-ல் ரூ.76.85 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கிடையே பாஜக-வின் நன்கொடை 156% அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியின் நன்கொடை தொகை இதே காலக்கட்டத்துக்கிடையில் 137% அதிகரித்தது.
 

இந்த அறிக்கையில் நன்கொடை பற்றி பூர்த்தியடையாத தகவல்களையும் அரசியல் கட்சிகள் அளித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
 

இவ்வகையில் காங்கிரஸ் கட்சி பெற்ற ரூ.8.11 கோடி நன்கொடையை வழங்கியவர்களின் பான் எண்கள் இல்லை. பாஜக தான் பெற்ற 2.19 கோடிக்கான நன்கொடையை வழங்கியவர்களின் பான் எண்களை தரவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday, 19 December 2016

மாற்றல் கொள்கையில்
 ஒரு மாற்றம்

பி எஸ் என் எல் ஊழியர் மாற்றல் கொள்கையில் கீழ்க்கண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஒரு ஊழியர் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ, இன்னொரு மாநிகத்த்திற்கோ அதிகபட்சமாகஐந்து வருடங்கள் மாற்றல் பெறலாம்.

Sunday, 18 December 2016

கூலித் தொழிலாளியும்

ஒரு கோடி ரூபாயும்


மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில், கூலி தொழிலாளி ஒருவர் கணக்கில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து நவம்பர் 17 ஆம் வரை உங்கள் வங்கி கணக்கில்  ரூ.1,00,10,000 டெபாசிட் ஆகியுள்ளது. பான் கார்டும் சமர்பிக்கபடவில்லை. எனவே வருமான வரித்துறையிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதிர்ச்சியடைந்த தொழிலாளி பதறிப் போய் வங்கிக்கு சென்று புகார் அளிளித்துள்ளார். ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், நவம்பர் மாதம் அவர் டெபாசிட் செய்த ரூ.10,000 தொகையை தவறாக  ரூ.1,00,10,000 என தவறாக பதிவிட்டுள்ளனர். இதுவே பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளது.

Friday, 16 December 2016

அஞ்சலி

கறுப்புப் பணத்தை இழுக்க,
கள்ளப்பனத்தை ஒழிக்க,
ஊழல் லஞ்சத்தை வேரறுக்க,
தீவிரவாதத்தை அழிக்க
500  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று நவம்பர் 8 அன்று அறிவித்தார் பிரதமர் மோடி.

இதன் விளைவாக
பணம் பெற வங்கிகளிலும்
ஏடிஎம் வாசல்களிலும்
வரிசையில்
காத்துக் கிடந்த் போது நூற்றுக்கணக்கான் இந்தியர்கள்  தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

"நாட்டு மக்கள் அனைவருமே இராணுவ வீரர்களைப் போல் கறுப்பப்ன ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ளனர்"  என்கிறார் பிரதமர்.


பிரதமர் சொல்லும் போரில் உயிரிழந்த அந்த நூற்றுக்கணக்கான இந்திய தேசத்து மக்களுக்கு நமது அஞ்ச்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

Thursday, 15 December 2016

நல்வினை
ஆற்றிய நல்ல உள்ளங்களுக்கு
நன்றி நன்றி நன்றி

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும்
அதிகாரிகள் மற்றும்
ஊழியர்களில்
91 சதவிகிதம் பேர்
15.12.2016 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுமையும் இந்த வீச்சு இருக்கும்.

நிறுவனத்தின் நலன் காக்க போராடிய அனைவரையும் உளமாரப் பாராட்டுகிறோம்.

தலைவர்களின் அறைகூவலை ஏற்று போராடிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

போராடியவர்களின் உணர்வுகளப்  புரிந்து

தலைவர்கள் தக்க நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, 13 December 2016

15.12.2016
ஒரு நாள்
வேலைநிறுத்தம்
மத்திய அரசே

பி எஸ் என் எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 65000 செல் டவர்களைப் பிரித்து ஒரு துணை நிறுவனத்தைத் துவக்காதே.

இந்தத் திட்டத்தைக் கைவிடு

என வலியுறுத்தி

15.12.2016 அன்று
ஒரு நாள் வேலை நிறுத்தம்

அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் சங்கங்கள்
அனைத்தும் இந்த் வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன.

நிறுவனத்தின் நலன் காக்கவும்
ஊழியர் ந்லன் காக்க்கவும்
இந்த வேலைநிறுத்தத்தில்

அனைவரும் தவறாது பங்க்கேற்க வேண்டுகிறோம்.
நபிகள் நாயகம்
பிறந்த நாள்


அன்பு
கருனை
சகோதரத்துவம்
மனிதநேயம்
இவற்றை உலக மக்களுக்குப் போதித்த
நபிகள் நாயகம்
பிறந்த நாள் இன்று.




பி.எஸ்.என்.எல்

செல்லிடப்பேசி சேவைகள் பாதிப்பு கை கொடுத்த பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி சேவை

By DIN  |   Published on : 13th December 2016 03:42 AM  |
"வர்தா' புயல் காரணமாக, சென்னையில் திங்கள்கிழமை செல்லிடப்பேசி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.ஆனாலும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி பலருக்கு கை கொடுத்தது.
தரைவழி தொலைபேசியில் இருந்து மற்றொரு தரைவழி தொலைபேசிக்கு பேசி விவரங்களைத் தெரிவிக்கவும், மின்சார விநியோகம் இருந்த பகுதிகளில் இணையதள வழியே தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பி.எஸ்.என்.எல். சேவை பெரிதும் பயன்பட்டது.
கடந்த ஆண்டைப் போன்று, இந்த ஆண்டு மழை பெய்தாலும் செல்லிடப்பேசி சேவைகள் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், வர்தா புயல் காரணமாக சென்னையில் திங்கள்கிழமையன்று பெரும் சூறாவளி காற்று வீசியது.
புயல் கரையைக் கடந்த நேரத்தில் கடுமையாக காற்று வீசிய காரணத்தால், செல்லிடப்பேசி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.பிற்பகல் 3 மணியில் இருந்து தனியார் செல்லிடப்பேசி சேவைகள் முற்றாக முடங்கின.
கைகொடுத்த தரைவழி சேவை: தனியார் செல்லிடப்பேசி சேவைகள் முடங்கினாலும், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவை தொடர்ந்து கொண்டே இருந்தது.
பி.எஸ்.என்.எல். இணைப்பு கொண்ட தரைவழி தொலைபேசியில் இருந்து மற்றொரு தரை வழி தொலைபேசிக்கு பேசவும், செல்லிடப்பேசிக்கு பேசவும் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. இதனால், தரைவழி இணைப்பு கொண்ட தொலைபேசிகளுக்கு திங்கள்கிழமையன்று பெரும் வரவேற்பு இருந்தது.


நன்றி தினமணி

Saturday, 10 December 2016

டிசம்பர் 11

மகாகவி பிறந்த நாள்

விதியே, விதியே, தமிழச் சாதியை    
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? 
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் 
தன்மையும் தனது தருமமும் மாயாது 
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் 
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?                                    தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று 
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச் 
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? 
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? 
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?                        
வாழ்த்துக்கள்
11.12.2016 அன்று நடைபெறவுள்ள
JTO தேர்வில் பங்கேற்கும்
தோழர்கள்  தோழியர்களுக்கு

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

Friday, 9 December 2016

இன்று சர்வதேச

ஊழல் ஒழிப்பு தினம்

 2003- ம் ஆண்டு முதல் அக்டோபர் 31- ம் நாள் ஐநா சபையால் டிசம்பர் 9 நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கவும், இதுகுறித்து மக்களுக்கு  விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.


நமது கருத்து
ஊழலை ஒழிக்கவே ஒரு நடவடிக்கையை அறிவித்து ஒரு மாதம் ஆகி விட்டது.

விளைவென்ன?
சாதாரன ஏழை எளிய நடுத்தர மக்கள் புதிய நோட்டுக்களைப் பெற வங்கிகளிலும் ATM களிலும் தவியாத் தவித்து அல்லல் படுகின்றனர்.
ஆனால் ஒரு சிலரிடம் மட்டும் லட்சங்களாகவும் கோடிகளாகவும்
கொட்டிக் கிடக்கின்றன.

தனியார் வங்கிகளின் முறைகேடும், அவற்றை அதரிக்கும் ரிசர்வ் வங்க்கியுமே இப்படிப்பட்ட அவலத்திற்குக் காரணம்.


ஊழல் எப்படி ஒழியும்? 

Thursday, 8 December 2016

மாதம் ரூபாய்
149ல்
எல்லையற்ற இலவச லோக்கல் மற்றும் வெளியூர் அழைப்புகள்
பிஎஸ்எண் எல் தலைமை அறிவிப்பு
State-owned telecom operator Bharat Sanchar Nigam Ltd (BSNL) will soon provide its subscribers unlimited local and national voice calls to any network for Rs 149 a month.
The monthly tariff plan which also includes 300 MB of data, is expected to be launched on January 1, 2017, readying BSNL to compete with Reliance Jio, reported The Economic Times.
"We are working on a plan to allow unlimited voice calls to mobile subscribers at any network across India at Rs 149 a month," BSNL chairman Anupam Shrivastava told ET, adding that the plan would also include 300 MB of data.
"Jio has come up with disruptive strategy and we are ready to match whatever tariff is being offered by our competitors," Shrivastava said.
×

While other private telcos too have started offering unlimited voice calling, these are part of higher-valued plans. 
Shrivastava said BSNL's strategy is aimed at not only retaining existing customers but also enhancing subscriber base in the wake of Jio's tactical pricing, competitive tariffs by Bharti Airtel, Vodafone India and Idea Cellular.

Tuesday, 6 December 2016

அம்மா..  அம்மா..



அம்மா.. அம்மா..
அலையின் சீற்றம் போல்
தமிழகம் முழுவதும்
ஒலிக்கும் குரல்.

ஆணாதிக்க சமுதாயத்தில்
அதுவும் அரசியலில்
பெண்ணாய்
சாதித்த சரித்திரப் பெண்மணி.

நெருக்கடிகள் நெருக்கியபோதும்
நிமிர்ந்து நின்ற  வென்ற வீராங்கனை

துணிச்சல் இவரின் தனிக்குணம்
முடிவெடுப்பதில் உறுதி
எடுத்த முடிவில் உறுதி
முடிவு தவறென்றால் திருத்திக் கொள்ளும் குணம்

உடைந்த இயகத்தை
ஒன்றுபடுத்திக் காட்ட முடியும்
என்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்

மாண்புமிகு ஜெயலலிதா
     அவர்களின் மறைவுக்கு

நமது அஞ்சலி.


விடை பெறுகிறார்
டிசம்பர் 6


அன்ணல்
அம்பேத்கார்
நினைவு தினம்.

இன்றைக்கும்
என்றைக்கும்
அம்பேத்கார் தேவைப்படுகிறார்.

Thursday, 1 December 2016

அஞ்சலி
இந்திய நாட்டில்
பொதுவுடைமை இயக்கத்தின்
மூத்த தலைவர்
அருமைத் தோழர்
நல்லக்கண்ணு அவர்களின் துணைவியார்

ரஞ்சிதம் அம்மாள்
இன்று  காலமானர்.

தோழர் நல்லகண்ணுஅவர்கள்
சமூகத்தில் நல்ல மதிப்பு பெற துணை நின் றவர்.

அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.

தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்லைக்  காணிக்கையாக்குகிறோம்.

இன்குலாப்

இன்குலாப் ஜிந்தாபாத்

இச் சொற்களைக் கேட்கும்போதும்

உச்சரிக்கும் போதும்

நமது உடலில் ஏற்படும்

சிலிர்ப்பு தனித்தன்மை பெற்றது.


அந்தச் சொல்லையே தன் பெயராகக் கொண்ட முற்போக்குக் கவிஞர் இன்குலாப் இன்று  காலமானார்.

கவிஞர்,
பேராசிரியர்,
பொதுவுடமைச் சிந்தனையாளர்,
எழுத்தாளர்
என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழந்தவர் இன்குலாப்.
இவரின் இயற்பெயர் சாகுல் அமீது. புரட்சி என்ற பொருள்தரும் இன்குலாப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், போராட்டங்களை மையப்படுத்தியே இவரது படைப்புகள் இருந்தன.
அவரது மறைவுக்கு நமது அஞ்சலி