NFTECHQ

Tuesday, 14 March 2017

பிரிட்ஜோ

இளம் வயதில்
இன்னுயிரை இழந்தான்.
ஏழு நாட்கள்
ஏ சி பெட்டியில் இருந்தான்.
நேற்று மண்ணோடு கலந்தான்
மீன்களோடு வளர்ந்தான்.
மீன்களோடு வாழ்ந்தான்.
நஞ்சுள்ளம் கொண்ட
வஞ்ச்சகர்களால்
வாழ்வை இழந்தான்.
இவனின் இறப்பில்
ஆள்வோருக்கும் பங்குண்டு.
இயற்கைக்கு மனிதன் விளைத்த
இன்னலால் உருவான
பருவநிலை மாற்றத்துக்கும் பங்குண்டு.
பவளப் பாறைகள் அழிந்ததும்
மரணத்தின் ஒரு காரணியே.
இத்தகைய கொடுமையான இழப்பு

இத்தோடு நிற்கட்டும்

No comments:

Post a Comment