NFTECHQ

Friday, 20 January 2017

எழுந்தது காண்

இளைஞர் படை

ஜல்லிக்கட்டு போராட்டக்களம் மனதுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் உருவாக்கியுள்ளது.

ஆள்வோரின் அக்கறையற்ற அவலநிலையால் சாதாரண ஏழை எளிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிமிகு போராட்டம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு  போராட்டம் எனத் துவங்கி  அவர்கள் மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பேசுகின்றனர்.

விவசாயம், குடிநீர்ப் பிரச்னை, அந்நிய நாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள்  , உலகமயமாக்கலின் சதி, பணமதிப்பு நீக்கம் என பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர்கள் தெளிவாகப் பேசுகின்றனர்.

மத்தியிலும், மாநிலத்திலும்ஆள்வோருக்கு  இது ஒரு எச்சரிக்கை தரும் போராட்டமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்திற்கு இது பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. 

No comments:

Post a Comment