NFTECHQ

Tuesday, 31 January 2017

பொருளாதார ஆய்வறிக்கை

இந்த 3 விஷயங்களும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும்! - பொருளாதார ஆய்வறிக்கை எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியை மூன்று காரணிகள் பாதிக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அந்த மூன்று காரணிகள்...

1. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் உள்ள நடை முறை சிக்கல். சிவில் விமானத் துறை, வங்கித் துறை, உரத் தொழில் போன்றவற்றில் மேலும் தனியார்மயம் தேவை.

2. அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், கல்வி போன்றவற்றை அளிப்பதில் மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டாதது. ஊழல், அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மை, வேண்டியவர்களுக்கு மட்டும் வேலைகளைச் செய்து கொடுப்பது போன்றவை பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

3. ஏழைகளுக்கான அரசின் மறு பகிர்வு முறை சுத்த மோசம். யாருக்காக திட்டங்கள் தீட்டப்படுகின்றனவோ, அவர்களுக்கு சரியாக அவற்றின் பலன்கள் போவதில்லை. இந்தக் குறையை சரி செய்ய அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment