NFTECHQ

Thursday, 24 December 2015

நபிகள் வாக்கும்

நடைபெறும் மனிதமும்



நபிகள் சொன்ன ஐந்து முக்கியமான அம்சங்கள்
1.ஏழைகளிடம் அன்பும் இரக்கமும் காட்டி துன்புறுவோருக்கு உதவ வேண்டும்.

2.இறைவனையும் நபியையும் நம்ப வேண்டும், 

3.ஐந்து முறை தொழ வேண்டும், 

4.ரம்ஜான் நோன்பு இருக்க வேண்டும், 
5.முடிந்தால் ஹஜ் செல்ல வேண்டும்.

எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அவர் எதையும் சொல்லவில்லை 
என்பதே சத்தியம்.

யூனுஸ் என்னும் இந்துக் குழந்தை


முகமது யூனுஸ் என்னும் இளைய “மனிதன்” சமீபத்திய மழையில் தனது உயிரைப் பணயம் வைத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணை வெள்ளத்தின் பிடியில் இருந்து காபாற்றியுள்ளான்.

அந்த இந்து மதப் பெண் சுகப்பிரசவத்தில் ஈன்ற தனது மகனுக்கு தன்னைக் காபாற்றிய “முகமது யூனூஸ்” நினைவாக
“யூனுஸ்”    என்று பெயர் சூட்டியுள்ளார்.

எல்லாவற்றையும் கடந்து மனிதம் வாழும்.

No comments:

Post a Comment