NFTECHQ

Tuesday, 23 January 2018

வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் அதற்கு சரியான நேரமாம்

மக்களே உஷார்


 எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் ஏடிஎம் எண்ணைக் கேட்க மாட்டோம், ஓடிபி எண்ணைக் கேட்க மாட்டோம் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனாலும், வங்கி மோசடி குறித்த செய்திகள் ஒருநாளும் தவறுவதில்லை. விதவிதமாக மோசடிச் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (71) என்ற மூதாட்டி, வங்கி மோசடியில் ரூ.90 ஆயிரத்தை இழந்த அதிர்ச்சியில் மரணம் அடைந்ததுதான்.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறிய மோசடி நபர்கள், ஜெயலட்சுமியின் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டு தேதி முதிர்வடைந்துவிட்டதாகவும், அட்டை எண்ணைக் கூறினால் அதனை புதுப்பித்துக் கொடுப்பதாகக் கூறி, ஏடிஎம் கார்டின் எண் மற்றும் ஓடிபி எண்ணையும் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர். சிறுக சிறுக சேமித்த தொகையை இழந்த அதிர்ச்சியில் ஜெயலட்சுமி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
பண மோசடியில் பணத்தை இழந்த எத்தனையோ குடும்பங்கள் வாழ்க்கையை இழந்திருந்தாலும், முதல் முறையாக ஒரு உயிரும் பறிபோயுள்ளது.
இது குறித்து பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஜெயராஜ் கூறுகையில், சமீபகாலமாக செல்போன் மூலமாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுவது அதிகமாக நடக்கிறது. எனவேதான், புதிதாக ஏடிஎம் அட்டையைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களிடமும், எந்த காரணத்தைக் கொண்டும் ஏடிஎம் அட்டையின் எண்ணையோ, ஓடிபி எண்ணையோ யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
இதுபோன்ற மோசடிகள் குறித்தும் அவர் சில குறிப்புகளை எடுத்துரைத்தார்.
அதாவது, வழக்கமாக வங்கிகளிடம் இருந்து அழைப்பு வந்தால் அது இலவச அழைப்பு எனப்படும் டோல் ஃப்ரீ எண்களில் இருந்தே வரும். ஆனால், இந்த மோசடியாளர்களின் அழைப்பு டோல் ஃப்ரீ எண்களைப் போல் அல்லாமல், சாதாரண செல்போன் எண்களில் இருந்துதான் வரும்.
அடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில்தான் இதுபோன்ற மோசடி செல்போன் அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவும் குறிப்பாக பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள். ஏன் என்றால், வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை இதுபோன்ற மோசடியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அப்பாவிகள், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து உடனடியாக வங்கிக்குச் சென்றால் கூட, வங்கி மூடப்பட்டிருக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருப்பதால், வாடிக்கையாளர் வங்கியைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
அதேபோல இதுபோன்ற மோசடிகளைப் பார்த்தால் பாய்ண்ட் - ஆஃப் - ஸ்கேல் எனப்படும் POS என்ற பரிமாற்றம் மூலமாகத்தான் பணம் களவாடப்பட்டிருக்கும். பாய்ண்ட் - ஆஃப் - ஸ்கேல் மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் அதனை மீட்பது என்பது முடியாத காரியம். எனவே, இதுபோன்ற வங்கி மோசடியில் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே தற்காத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஜெயராஜ்.

நன்றி :  தினமணி
போராட்ட விளக்கக் கூட்டம்

30.01.2018 முதல் நடைபெறவுள்ள
சத்தியாகிரகம் மற்றும்
விதிப்படி வேலை குறித்து
அனைத்துச் சங்கத் தலைவர்கள்
 பங்கேற்கும்
விளக்கக் கூட்டம்.

இடம் பொதுமேலாளர் அலுவலகம்
நாள் 25.01.2018
காலம் மாலை 4 மணி

அனைவரும் வருக.
ஜனவரி  23
நேதாஜி சுபாஷ் சந்ர போஸ்

பிறந்த தினம் இன்று
வாழ்த்துகிறொம்
வரவேற்கிறோம்

ஈரோடு மாவட்டத்தில் மற்ற சங்கங்களிலிருந்து விலகி நமது NFTE பேரியக்கத்தில் பத்து தோழர்கள் ஜனவ்ரி 2018ல் இணைந்துள்ளனர்.

அந்த பத்து தோழர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.


இதற்கான முயற்சியில் ஈடுபட்ட கிளைச்செயலர்களையும்                  மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.

Monday, 22 January 2018

விலைவாசிப்படி உயர்வு


01.01.2018 முதல் 2.6 சத விலைவாசிப்படி உயர்வுக்கான உத்தரவை BSNL நிறுவனம் வெளியிட்டுள் ளது. ஆக 01.01.2018 முதல் மொத்த விலைவாசிப்படி 126.9 சதவிகிதமாகும்.

Thursday, 18 January 2018

ஜனவரி 18
தோழர் உயிரின்பன்
 நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரர்.
கந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளின் மீது தாக்கம் கொண்டவர்.
பெரியாரின் ஆலோசனையை ஏற்று "நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்று பகத்சிங் பற்றிய நூலை எழுதியவர்.
காந்தியம்,
காங்கிரஸ்,
சுயமரியாதை இயக்கம்
இப்படிப்பட்ட இய்க்கங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.
உடன் நின்ற தோழர் ராமமூர்த்தியையும் இணைத்து
ஒன்றுபட்ட பொதுவுடைமை இயக்கத்தில்
இணைந்தார்.

தமிழ்மொழி மீது எல்லையற்ற காதல் கொண்டவர்.

இலக்கியங்கள் மீது பற்றும் அவை குறித்த அறிவும் பெற்றவர்.

பொதுவுடைமை இயக்கக் கூட்டங்க்களில் முதன்முதலில் இலக்கியம் பேசியவர்.

தொழிலாளர்களுக்காக,
விவசாயிகளுக்காக்,
விவசாயத் தொழிலாளர்களுக்காக
பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராளி.

ஏறத்தாழ பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்.

சுரண்டலுக்கு எதிராக போராடியவர்.

ஆயிரக்கணக்கானோருக்கு  மார்க்சியம் கற்றுத் தந்த ஆசான்.

மார்க்சிய வழியில் போராடும் முறைகளைதொழிலாளிகளுகுக் கற்றுத் தந்தார்.

எளிமைக்கு முதல் உதாரணமாய்த் திகழ்ந்தவர்.
18.01.1963ல் சென்னை தாம்பரத்தில் உயிரின்பனின்உயிர் பிரிந்த்து.
அவரது இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சத்திற்கு  மேல் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தமிழ்மொழியின் மீதிருந்த காதலால் சமஸ்கிருதப் பெயரான ஜீவானந்தம்  என்பதை "உயிரின்பன்"  என மாற்றிக் கொண்டார்.
உயிருள்ள வரை
உயிரின்பன் பாதையை

உள்ளத்தில் ஏந்தி வாழ்வோம்.

Wednesday, 17 January 2018

சத்தியாகிரகம்

அரசின் பணிகளுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது,
அரசின் ஆணைகளை ஏற்க மறுப்பது,
அரசின் அடக்குமுறையை அமைதி வழியில் எதிர்கொள்வது,
நோக்கங்கள் நிறைவேறும் வரை உறுதி கொண்ட நெஞ்சோடு
அற வழியில் அமைதியாகப் போராடுவது  

இதுவே சத்தியசோதனையில் சத்தியாகிரகம் பற்றி அண்ணல் சொல்லியுள்ளதன் சுருக்கமான சாராம்சம்.


31.01.2018 முதல் BSNL   அனைத்து அமைப்புகளின் சத்தியாகிரகம் துவங்குகிறது.
ஜனவரி 17
எம்.ஜி.ஆர் பிறந்த தினம்

தமிழக அரசியலில்
தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய,
ஏழை மக்களின் அன்பையும்
ஆதரவையும் பெற்ற
எம்.ஜி.ஆர்

பிறந்த தினம் இன்று.

Tuesday, 16 January 2018

இரங்கல்
பத்திரிக்கையாளர்,
ஓவியர்,
நாடக ஆசிரியர்,
பதிப்பாளர்,
அரசியல் விமர்சகர்,
தனது கருத்தை எவ்விடத்திலும் துணிச்சலுடன் சொல்லும் ஆற்றல் படைத்தவர்
என பன்முகத்தன்மையாளராக வாழ்ந்த
திரு ஞாநி
மறைந்தார்.

அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்

Saturday, 13 January 2018

இனிய
பொங்கல்

நல்வாழ்த்துக்கள்
ஜனவரி 13

தோழர் அஜாய்குமார் கோஷ்  நினைவு தினம்


ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக  சிறப்பாக பணியாற்றிய தோழர் அஜய் குமார் கோஷ்  நினைவு தினம் இன்றூ.

Friday, 12 January 2018

ஜனவரி 12
விவேகானந்தர் பிறந்த தினம்.


மதம், கடவுள், மனிதம் பற்றி விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இன்றைய சமூகமும், சமூகத்த்தை ஆளுபவர்களும்  மீண்டும் மீண்டும் அறிந்து புரிந்து நடப்பது சமூகத்துக்கு நன்மை விளைவிக்கும்.  

Thursday, 11 January 2018

ஜனவரி 11
திருப்பூர் குமரன் நினைவு தினம்

சென்னிமலையில் பிறந்து
செங்குருதி தந்து
செய்தற்கரிய தியாகங்கள் செய்த
கொடிகாத்த குமரனின் நினைவு தினம் இன்று.

குமரனின் நினைவு தினத்தை அரசு சார்பில் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று அத்தகைய நிகழ்வு எதையும் அரசு நடத்தவில்லை என சென்னிமலை மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


குமரனின் தியாகம் போற்றுவோம்.

Tuesday, 9 January 2018

அனைத்து சங்க அறைகூவல்

BSNL நிறுவனத்த்ன் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டம் 08.01.2018 அன்று டெல்லியில் FNTO சங்க அலுவலகத்தில் FNTO பொதுச்செயலாலர் தோழர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கருத்து பரிமாற்றங்களுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஒரு மனதான முடிவுகள்

மகாத்மாவின் மறைவு தினமான ஜனவரி 30 அன்று (30.01.2018) அண்ணலின் சமாதியில் அனைத்துச் சங்கத் தலைவர்களும் அஞ்சலி  செலுத்துதல்.

அன்று முதலே ஐந்து நாட்கள் தொடர்ந்து சத்தியாகிரகம்.


30.01.2018 அண்ணல் காந்தியடிகள் வழியில்
அதிகாரிகளும் ஊழியர்களும் லா;அவரையற்ற ஒத்துழையாமை இயக்கம் மற்றும் விதிப்படி வேலை

28.02.2016 டெல்லியில் சஞ்சார் பவன் (DOT அலுவலகம்) முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம்.
ருவார காலத்திற்குள் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துதல்.
தனிடவர் நிறுவன அமைப்பு பிரச்னையை சட்ட ரீதியாக அணுகுதல்

கோரிக்கைகள்

01.01.2017 முதல் மூன்றாவது ஊதிய மாற்றத்தை 15 சத உயர்வுடன் அமல்படுத்து.

01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து.

தனி டவர் நிறுவன முடிவைக் கைவிடு.

ஓய்வு பெறும் வயது 60 என்பதை 58 ஆகக் குறைக்கும் முயற்சியைக் கைவிடு.

ஒன்றுபட்டு போராடுவோம்.
ஓரணியாய் எழுவோம்.

வெற்றி பெறுவோம்.
போக்குவரத்து ஊழியர் போராட்டம்.

இதைப் படித்தால்....
"நெஞ்சு பொறுக்குதிலையே" 
என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன

படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Monday, 8 January 2018

அகில இந்திய மாநாடு

நமது சங்கத்தின் அகில் இந்திய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்
எதிர்வரும் 2018 மார்ச் 14 முதல் 16 வாரை
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளைகளின் பொதுக்குழு நடத்தி சார்பாளர் தேர்வுகள் போன்ற பணிகளை விரைந்து முடித்திடல் வேண்டும்.


பயணத்துக்கான டிக்கெட் பதிவுகளை இதுவரை செய்யாதவர்கள் விரைந்து செய்ய வேண்டுகிறோம்.  

Sunday, 7 January 2018

ஜனவரி 7


தோழர் ஞானையா பிறந்த தினம்

Friday, 5 January 2018

ஓ.பி.குப்தா எனும்
ஒளிபவிளக்கு

ஜனவரி 6 - தியாக வரலாற்றின் நினைவு நாள்


அச்சம்  அகற்றிய தலைவன்.
ஆற்றல் ஊற்றெடுத்த  தலைவன்.
இடர்களைத் தடுத்திட்ட  
ஈடற்ற தலைவன்.
உண்மையை மட்டுமே உரைத்து
ஊழியர்களை முன்னேற்றிய தலைவன்.
எழுபது ஆண்டுகள் உழைத்து
ஏற்றங்ககள் பல தந்த தலைவன்.
ஐந்தாண்டு காலம்  ஓடிவிட்டன--நீயின்றி
ஒப்ப்ற்ற சிந்தனையாளனாய்
ஓங்கு புகழுடன் வாழும் தலைவன்  நீதானே... நீதானே...

இன்று பணியில் உள்ள 75 சத ஊழியர்களுக்கு வாழ்வென்ற ஒன்றை வழங்கிட்ட தோழர் குப்தாவின் ஐ ந்தாவது நினைவு தினம் இன்று.

ஓய்வு பெற்ற லட்சக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் பெற்றுத் தந்த இலட்சியத் தலைவன் தோழர் குப்தாவுக்கு  மீண்டும் மீண்டும் நன்றி சொல்வோம்

மீண்டும் ஆர்ப்பாட்டம்
தனி டவர் நிறுவனம் அமைக்கும்
முடிவை எதிர்த்து 08.01.2018 அன்று ஆர்ப்பாட்டம்.


அனைத்துச் சங்க   அறைகூவல்
வாழ்த்துக்கள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
நிகழ்வுகள்

06.01.2018- தமிழ் மாநிலச் சங்கம் நடத்தும் மாவட்டச் செயலர்கள் கூட்டம்

06.01.2018- சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் நடத்தும் தோழர் குப்தாவின் ஐந்தாவது நினைவஞ்சலிக் கூட்டம்


08.01.2018  - BSNL அனைத்துச் சங்கத் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்

Wednesday, 3 January 2018

விரைந்த செயல்பாடு தேவை

தனி டவர் கம்பெனி துவக்கும் அரசின் முடிவை எதிர்த்து டிசம்பர் 12, 13 தேதிகளில்
இரண்டு நாட்கள்  லட்சக்கணக்கான ஊழியர்களும் அதிகாரிகளும்
வேலைநிறுத்தம் செய்தனர்.

போராடியவர்களின் உணர்வை சிறிதும் மதிக்கவில்லை இந்த அரசு.

தனிடவர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு (CMD) திரு. அமித்   யாதவ் என்பவரை நியமனம் செய்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆழமாக விவாதித்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம்.


தோழர் குப்தா சில அனுபவங்களை விட்டுச் சென்றுள்ளார். அவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்.
தினமும் ஒருலட்சம் அபராதம்



Tuesday, 2 January 2018

புத்தாண்டுப்பரிசு?!?!

தரைவழித்தொலைபேசியில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவச அழைப்புகள் தரப்பட்டு வந்தன.

இந்த வசதியை ஒரு காரணியாக வைத்தே கணிசமான வாடிக்கையாளர்கள்   தரைவழித்தொலைபேசி  இணைப்பை பயன்படுத்தி வந்தனர்.

இந்த வசதியை ஒரு காரணியாக வைத்தே புதிய இணைப்புகளையும் பெற்றனர்.

இந்த வசதியை ஒரு முக்கிய காரணியாக வைத்தே அதிகாரிகளும் ஊழியர்களும் புதிய இணைப்புகளுக்கான மார்க்கெட்டிங்க் செய்தனர்.

தற்போது இநத வசதி 01.01.2018 முதல் இரவு 10.30 மணியிலிருந்து காலை 6 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

இதுதான் ஒருவேளை புத்தாண்டுப் பரிசோ?


இதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதே நமது கணிப்பு.
தோழர் பரதன்
15 வயதில் கம்யூனிஸ்ட் ஆகி,
மாணவர் பெருமன்றத்தில் பொறுப்பேற்று, முதுகலைப் பட்டமும் பிறகு சட்டமும் பயின்று,
1952
ம் ஆண்டிலேயே மகாராஷ்ட்ரா எம்எல்ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டு, தொழிலாளர்களைத்திரட்டி, போராடி, தொழிற்சங்கத் தலைவராகி, 
மார்க்சிய மெய்யியலில் நுண்புலமை கொண்டு சித்தாந்தவாதியாகி, 
வர்க்கம்-சாதி பிரச்சினைகளில் பெரும் பங்களிப்பைத் தந்து, 
கவித்துவமும் நையாண்டியும் தரவுகளும் எளிமையும் கொண்ட 
தீவிரச் சொற்பொழிவாளராக எழுத்தாளராகச் சலிக்காமல் உழைத்து, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஏஐடியூசிக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து, உலகத்திலேயே 21ஆம் நூற்றாண்டில் முதலாவதாக கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தை எழுதித் திருத்திக் கொடையாகத் தந்த

தோழர் பரதனின்
2
ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

Sunday, 31 December 2017

2018
அனைவருக்கும் இனிய ஆங்கில்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதுவரை கேட்கப்பட்ட பல கேள்விகளில் சிலவ்ற்றிற்கேனும் விடை தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.

இதுவரை உருவான அல்லது உருவாக்கப்பட்ட பிரச்னைகளுக்கு  தீர்வு தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.

நம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வோம்.

தன்னம்பிக்கையுடன் தளராத உள்ளத்தோடு பயணிப்போம்.


அனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  

Saturday, 30 December 2017

வாழிய பல்லாண்டு
31.12.2017 அன்று பணி ஓய்வு பெறும்
தோழர் C.துரைசாமி OS
தோழர் P.M.ராஜன் TT

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.
ஒரு கணக்கு
BSNL நிறுவனத்தின் வருமானம் 2016-17 நிதியாண்டில்
ரூ 31533 கோடி.
2015-16 நிதியாண்டைக் காட்டிலும் வருமானம் ரூ 878 கோடி குறைந்துள்ளது.

தொழில் மற்றும் சேவைப் பிரிவுகளில் 2016-17ல் வருமானம் கணிடமாகக்  குறைந்துள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2016-17ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனைத்து தொழில்களையும் எவ்வளவு பாதித்தது  என்பது குறிப்பிடத்தக்கது.


BSNL நிறுபவனத்தின் சொத்து  மதிப்பு ரூ 1.15 லட்சம் கோடி  என மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2.6
01.01.2018 முதல் விலைவாசிப்படி 2.6 சதம் உயரும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வுக்குப்பின்  
விலைவாசிப்படி 126.9 சதமாக

Wednesday, 27 December 2017

விழா சிறக்க வாழ்த்துக்கள்

NFTE தமிழமாநிலச் சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும்,
NFTCL தமிழ்மாநில அமைப்பின் உதவித் தலைவருமான 
தோழர் 
N. அன்பழகன்
அவர்களுக்கு கடலூரில் 28.12.2017 அன்று நடைபெறும் பணிநிறவு பாராட்டுவிழா சீரோடும் சிறப்போடும் அமைய ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Monday, 25 December 2017

இனிய
கிருஸ்துமஸ்

நல்வாழ்த்துக்கள்

Sunday, 24 December 2017

பெரியார் நினைவு தினம்
டிசம்பர் 24
"உணவில்லாவிட்டாலும் தன்மானத்தை இழக்காதே.

உயிரே போனாலும் சுயமரியாதையை இழக்காதே"-பெரியார்

Saturday, 23 December 2017

கக்கன் நினைவுதினம்
டிசம்பர் 23


அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை

Friday, 22 December 2017

JE தேர்வு

தோழர்களின் கவனத்திற்கு

JE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.01.2018 என 16.10.2017 தேதியிட்ட உத்தரவு தெரிவிக்கிறது.

ஆனால் 20.12.2017 தேதியிட்ட உத்தரவு JE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைநாள் 15.12.2017 என்பது  03.01.2018 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழப்பத்திலிருந்து விடுபட ஒரே வழி  நேரம் பார்க்காமல், நாள் பார்க்காமல் உடனடியாக விண்ணப்பிக்க் வேண்டுகிறோறோம்.


இரண்டு உத்தரவுகளும் இங்கே தரப்பட்டுள்ளது



Saturday, 16 December 2017

உணர்வுகள் மதிக்கப்படுமா?
ஒரு போராட்டம் நடைபெற்றால் அது தீர்வைத் தருவதாக இருக்கும் என்பதே நமது வரலாறு.

சமீபத்திய இரு நாள் வேலைநிறுத்தம் ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தப்படவில்லை.

DOT மற்றும் BSNL  நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.

ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்து தலைவர்கள் உடனடியாக வினையாற்ற   

வேண்டும்.

Thursday, 14 December 2017

90 சதவிகிதம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.

இதில் 90 சதவிகிதம் பேர் 13.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளை விட இரண்டாம் நாளில் எட்டு பேர் அதிகமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Tuesday, 12 December 2017

ஒரு வரலாற்று நிகழ்வு

இந்திய நாடு சுதந்திரம் பெறும் முன்பே 1920ஆம் ஆண்டில் (31.10.1920) துவக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் AITUC.

விடுதலைப் போராட்டத்தில் AITUC அமைப்பின் தலைவர்கள் சீரிய பங்காற்றினர்.

உழைக்கும் மக்களின் உரிமைக்கும், வாழ்வுக்கும், தேசத்தின் நலன் காக்கவும் உன்னதமான இலட்சியங்களோடு  இயங்கும்
AITUC இயக்கத்தின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் 9.12.2017 முதல்  11.12.2017 வரை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.

தோழியர் அமர்ஜித் கெளர்
 AITUC  அமைப்பின் தேசிய பொதுச்செயலராக ஒருமனதாக தேர்வு 11.12.2017 அன்று செய்யப்பட்டார்.




இந்திய நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு தோழியர் மத்திய சங்கம்  ஒன்றிற்கு பொதுச்செயலர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.


மிகச்சிறந்த அறிவாற்றலும், கொள்கைப்பிடிப்பும் மிக்க தோழியர் அமர்ஜித் கெள்ர் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
89 சதவிகிதம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.

இதில் 89 சதவிகிதம்  பேர் 12.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
வாழ்த்துக்கள்
வேலைநிறுத்தத்தைத்
துவக்கியுள்ள
தோழியர்கள்,
தோழர்கள்
 அனைவருக்கும்

வாழ்த்துக்கள்

Monday, 11 December 2017

பாரதி பிறந்த நாள்


டிசம்பர் 11

அச்சம் தவிர்
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஒற்றுமை வலிமையாம்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கொடுமையை எதிர்த்து நில்.
சிதையா நெஞ்சு கொள்.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்

டிசம்பர் 12-13
பாரதியின் வரிகளை மனதில் நிறுத்தி
அக்னிக் குஞ்சுகளாய்
களம் காண்போம்.
வேலைநிறுத்தமும்
வேலைநிறுத்த கோரிக்கைகளும் வெற்றிபெற

வாழ்த்துக்கள்