NFTECHQ

Thursday, 15 November 2018


காலவரையற்ற வேலைநிறுத்தம்

03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
14.11.2018 BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்பின் (AUAB) தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அமைச்சரின் உறுதிமொழிகள் எதுவுமே நிறைபவேற்றப்படவில்லை.
DOT செயலர் அளித்த உறுதிமொழிகளிலும் முன்னேற்றமில்லை. மாறாக எதிர்மறையான நடவடிக்கைகளில் DOT ஈடுபட்டுள்ளது.

இவற்றைப் பரிசீலித்த தலைவர்கள்  03.12.2018 முதல் காலவரையர்ற வேலைநிறுத்தத்திற்கு
அறைகூவல் விடுத்துள்ளனர்.

கோரிக்கைகள்

1. ஜனவரி 2017 முதல் ஊதிய மாற்றம். கொடுக்கும் திறன் குறித்து அமைச்சரவைக்கு அனுப்பாமல்  DOT யே முடிவெடுக்க வேண்டும்.
2. BSNLக்கு 4G அலைக்கற்றை கொடுக்க வேண்டும்.
3. ஓய்வு பெறுவோர் பெறும் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில்தான் ஓய்வூதியப் பங்கீடு  செலுத்த வேண்டும்.

ஒற்றுமையைப் போற்றிக் காத்து,
விருப்பு வெறுப்பு அகற்றி விடுபட்ட அமைப்புகளையும் ஒன்றிணைத்து
களம் காண்போம்.
வெற்றி பெறுவோம்.





No comments:

Post a Comment