NFTECHQ

Sunday, 17 June 2018


சூடுபிடிக்கும் வர்த்தகப் போர்!


அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, ஜூன் 16ஆம் தேதியன்று 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சரக்குகள் மீது கூடுதலான வரியை சீனா விதித்துள்ளது.
ஜூன் 15ஆம் தேதி சீனாவின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 விழுக்காடு வரியை விதித்தார். இதற்கு அடுத்த நாளே (ஜூன் 16) அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சரக்குகள் மீது சீனா வரி விதித்துள்ளது. இதனால் உலகின் இரண்டு மிகப்பெரும் பொருளாதாரங்கள் இடையே முழுமையான வர்த்தகப் போர் மூண்டுள்ளது. ட்ரம்ப் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது 25 விழுக்காடு வரியை விதித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 25 விழுக்காடு கூடுதல் வரியை விதிக்க சீன அரசு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எந்தெந்த அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என்ற பட்டியலையும் சீன அரசு வெளியிட்டுள்ளது. வேளாண் பொருட்கள், வாகனங்கள், நீர்வாழ் சரக்குகள் உள்ளிட்ட 34 பில்லியன் டாலர் மதிப்பிலான 545 பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீனாவின் சுங்க வரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மின்சக்திப் பொருட்கள் உள்ளிட்ட 114 பொருட்களுக்கான கூடுதல் வரி அமல்படுத்தப்படுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


Saturday, 16 June 2018


ரம்ஜான் வாழ்த்துக்கள்





அனபு
ஈகை
மனியதநேயம்
சகோதரத்துவம்
இவற்றை உணர்த்தும்
ராம்ஜான் திருநாள் இன்று

அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

Friday, 15 June 2018


12.06.2018
National Council Meeting
Chairperson, Director (SR)
Expressing hearty welcome to all she told her unhappiness for not holding meeting as per schedule. In two years only two meetings could take place. In present situation it is difficult for the BSNL to become model employer. Revenue is declining and there is huge deficit and an alarming situation has developed. Management and employees are close to each other during this turbulent period. The employees are sensitized. The revenue in last year has been worst. The employees have to defer their many aspirations. She promised for 3rd PRC. The DOT is processing for Cabinet note regarding relaxation in affordability clause. She expected wage revision by year end but Company’s finance should not go down further. Reasonableness has to be there even after relaxation. With the cooperation of all operation of Tower Company is deferred but cant dilate if it is good or bad.

Thursday, 14 June 2018


ஜூன் 14
சே குவேரா பிறந்த நாள்
இன்று சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த நாள்.

 சேஎன்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்
உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள். ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர். ஆம் உலகில் விடுதலை வீரர்கள் அனைவரும்
தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகத்தான் போராடினார்கள் ! ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடி அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு தனக்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து மற்றுமோர்

தேசத்திற்காக போராட சென்று துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன். சே குவேரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது தனது வாழ்நாள் முழுவதும் அநீதிக்கெதிராகவும் அடிமை மக்களின் விடியலுக்காகவும் போராடியவர் - இன்று உலகத்தின் இளைஞர்கள் அனைவராலும் புரட்சி என்கிற வார்த்தைக்கு ஒரே அடையாளமாக அறியப்படும் தோழர் சே குவேரா

Tuesday, 12 June 2018


தோழர் விச்சாரே நினைவு தினம்
ஜூன் 12
NFTE இயக்கத்தின்
மராட்டிய
மாநிலச் செயலராக,
இயக்கத்தின் பொதுச் செயலராக,
எளிமையின் இலக்கணமாக,
நேர்மையின் இருப்பிடமாக,
இயக்கதின் வெற்றிக்கு மணிமகுடம் பதித்திட்ட
வரலாற்று நாயகன்
தோழர் விச்சாரே நினைவு தினம் இன்று.

Monday, 11 June 2018


கடை விரித்தார் கொள்வாரில்லை

ஏர் இண்டியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என மத்திய அரசு முடிவு செய்தது. முடிவை அமலாக்கும் ஸ்கல முயற்சிகளும் முடிந்தன. ஆனால் வாங்க யாரும் முன்வரவில்லை. எனவே ஏர் இண்டியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட ரூ 2000 கோடிக்கான கடன் பெற விண்ணப்பித்துள்ளது.

Thursday, 7 June 2018


வாழும் தலைவன்
ஜூன் 7
தோழர் ஜெகன் நினைவு தினம்.

வாழும்போதும்
வாழ்ந்து முடித்த பின்னும்
வாழ்க்கை ஒரு  அர்த்தமுள்ளதாக இரூக்க வேண்டும் என்பதன் இலக்கணமாய் வாழ்ந்திட்ட தோழர் ஜெகனை என்றும் நினைவில் கொள்வோம்.


ஊழியர்களுக்கு ப்ரிபெய்டு இணைப்பு

BSNL     நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு புதிய திட்டத்தின் கீழ் ப்ரிபெய்டு இணைப்பு வழங்க கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது மாதம் தோறும் ரூபாய் 200க்கு ரீசார்ஜ் செய்யும் முறைக்கு மாற்றாக இந்த இணைப்பு வழங்கப்படும்.

சிம்கார்டு விலை      ரூ 600
காலக்கெடு             90 நாட்கள்
டேட்டா பயன்பாடு    நாள் தோறும் 1 GB

குரல் அழைப்புகள்

லவசமான எல்லையற்ற அளவில் நாடு முழுமையும் (ரோமிங்கிலும்டெல்லி மற்றும் மும்பை உட்பட)

எஸ் எம்   எஸ் ஒரு நாளைக்கு 100 இலவசம்


மாற்றல் கொள்கை அமலாக்கம்
2018ஆம் ஆண்டிற்கான மாற்றல் கொள்கை அமலாக்கம் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

சுமுகமான அடிப்படையில் நிறைவேறும் என நம்புகிறோம்.

Wednesday, 6 June 2018


அஞ்சலி
தோழர் G.டதார் மறைந்தார். டெல்லி மத்திய அரசு தலைமை செயலக ஊழியர் சங்க பொதுச் செயலராக பல் லாண்டுகள் பணியாற்றி பல அரும் பெரும் போராட்டங்களின் மூலம் அவர்களுக்கு பல உரிமைகளைப்பெற்றுத் தந்தவர்.

1968 மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்தில் ஒரு பெரும் உந்து சக்தியாக டெல்லியில் செயல்பட்டவர். காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போதும் அஞ்சாமல் எதிர்கொண்டு போராட்டம் நடத்திய பெரும் போராளி.
A| TUC மத்திய தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் தேசீய செயலர்களில் ஒருவராக கடைசி வரை செயல்பட்டவர்.
NFTE இயக்கத்தின் அகில இந்திய மாநாடுகள் மற்றும் செயற்குழுக் கூட்டங்களில்  பங்கேற்று வழிகாட்டி உரையாற்றிய தோழர்.

அவர் மறைவு இந்திய தொழிலாளி வர்கத்திற்கும்  AITUC அமைப்பிற்கும் பேரிழப்பாகும்.நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.