NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Saturday, 26 October 2019


மூன்றாவது ஊதிய மாற்றம்?
25.10.2019 அன்று தலைவர்கள் DOT செயலரைச் சந்தித்தனர். புத்தாக்க முடிவுக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி செலுத்தினர்.
"உச்சபட்ச அரசியல் முடிவால் மட்டுமே புத்தாக்க முடிவு நிறைவேறியதாக DOT செயலர் தெரிவித்துள்ளார்.
அரசின் புத்தாக்க முடிவுகள் குறித்து செயலர் விளக்கியுள்ளார்.
மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த தலைவர்கள் வேண்டினர்.
"BSNL நிறுவனத்தின்சந்தைப் பங்கு தற்போது 10 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அது குறைந்தபட்சம் 17 தவிகிதமாக
உயர்ந்தால் மட்டுமே சம்பள மாற்றம் சாத்தியம். அப்போதும் கூட ஊதிய மாற்றம் என்பது செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்" என்று DOTசெயலர் தெரிவித்தார்.
ஓப்வூதிய   மாற்றத்தை அமல்படுத்த தலைவர்கள் வேண்டினர்.
"ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அமலாகாமல் ஓய்வூதிய மாற்றம் சாத்தியம் இல்லை" என்றார் செயலர்.
ஓய்வூதிய மாறறத்தை  ஊதிய மாற்றத்திலிருந்து வில்லக்களித்து (DELINK) ஓய்வூதிய மாற்றத்தை அமலாக்க தலைவர்கள் வேண்டினர்.
இது குறித்து ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பேசுமாறு DOT செயலர் தெரிவித்தார்.
ஓய்வூதியப் பங்களிப்புக்காக BSNL நிறுவனம் அதிகமாகச் செலுத்திய 2500 கோடி ரூபாயை திருப்பித் தர வேண்டினர் தலைவர்கள். விதிகளின் படி ஊழியர் ஓய்வு பெறும்போது பெறும் அடிப்படைச் சம்பளத்தின் படி ஓய்வூதியபங்கீடு செலுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் வேண்டினர்.
"நிதி மற்றும் செலவினம் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் இது குறித்து விவாதித்து விட்டோம். இந்த கோரிக்கைகளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
இந்த செய்திகள் பல்வேறு சங்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்டவை.
சரிபார்ப்புத் தேர்தல் நடத்தாவிட்டால் அரசும் நிர்வாகமும் தான் நினைத்ததையெல்லாம் செய்யும். அதைத் தடுக்கவே தேர்தல் என்றார்கள்.
தேர்தல் முடிந்து விட்டது.   சங்கங்களை மதிக்காமல், சங்கங்களின் கருத்தைக் கேட்காமல் அனைத்தும் நடக்கிறது.
அரசு தான் நினைத்ததையே செய்கிறது. நிர்வாகம் அதற்கு பொழிப்புரை தருகிறது.
பொழிப்புரை கேட்டு தலைவர்கள் ஏன் பொங்கி எழவில்லை. ஒரு வேளை கலந்தாலோசித்த பின் வினையாற்றுவார்களோ!  

No comments:

Post a Comment