NFTECHQ

Tuesday, 25 December 2018



இனிய
கிருஸ்துமஸ்
நல்வாழ்த்துக்கள்

Monday, 24 December 2018


பெரியார்
ஜாதிகளும், மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது; பெண்களை அடிமைப்படுத்துகிறது, எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தவர் தந்தை பெரியார். 45 ஆண்டுகளுக்கு முன்பு (1973) இதே நாளில்தான் (டிசம்பர் 24) பெரியார் இந்த உலகை விட்டு மறைந்தார்.

Monday, 17 December 2018



மாவட்டச் செயற்குழு
நாள்    : 18.12.2018
காலம்   : காலை 10 மணி
இடம்    : டெலிபோன்பவன், ஈரோடு

ஆய்படு பொருள்

ஒத்திவைக்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தம்
மாவட்ட அளவிலான பிரச்னைகள்

அனைவரும் வருக.
உரிய நேரத்தில் வருக

வாழ்த்துக்களுசன்
N. பழனிவேலு
மாவட்டச்செயலர்

Tuesday, 11 December 2018


மகாகவி  பிறந்த தினம்- டிசம்பர் 11
தமிழ் மொழியை பாமரனும் உணரும் வண்ணம் பாருக்குக் கொடுத்த மகாகவி பாரதி பிறந்ததினம் இன்று.
புரட்சி என்ற வார்த்தையை முதல் முதலாக தமிழ் மொழியில் சொன்ன கவிஞன்.
பாப்பா பாட்டு முதல் தேசிய அரசியல், உலக அரசியல் வரை தமிழ் மொழியில் பாடிய அந்த மகாகவியின் புகழ் வாழும்.

Thursday, 6 December 2018


டிசம்பர் 6
அம்பேத்கார் நினைவு தினம்
போராளியாய் வாழ்ந்தவ்ர்.
போராட்டம் மூலமே விடியலை அடைய முடியும் என்று உறுதிபடச் சொன்ன மாபெரும் போராளி அன்ணல் அம்பேத்கார் நினைவு தினம் இன்று.

Tuesday, 4 December 2018


JTO தேர்வு காலியிடங்கள்
ஜனவ்ரி 2019ல் 2016-17ஆம் ஆண்டுக்கான JTO தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

OC/MBC - 176
SC           -     56
ST           -     55

Sunday, 2 December 2018


ஒத்திவைக்கப்பட்டது.
காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றும் இன்றும்  நடைபெற்றது பேச்சுவார்த்தை.
BSNL நிறுவனத்தின் CMD மற்றும் DOT செயலருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
சில கோரிக்கைகளில் முன்னேற்றம்.
ஊதிய மாற்றம் என்னும் முக்கியமான கோரிக்கையில் முன்னேற்றம் இல்லை.
அமைச்சருடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும்.
அமைச்சருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 10.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என BSNL நிறுவனத்தின்  தலைமை அதிகாரிக்கு (CMD) எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைநிறுத்தம் வெற்றி பெற வேண்டும்
03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றி பெற்ச் செய்ய வேண்டியது நமது கடமை.
இந்த வேலைநிறுத்தம் நம் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட ஒன்று.
01.01.2017 முதல் தர வேண்டிய ஊதிய மாற்றத்தை இரண்டு ஆண்டுகள் கடந்த் பின்னும் இழுத்தடிக்கும் அரசின் போக்கை மாற்றிட பல்வேறு இயக்கங்கள் நடத்திய பின்னும் அலட்சியப் பார்வை காட்டும் அரசின் மீது நாம் தொடுத்துள்ள கடைசி ஆய்த்மே இந்த வேலைநிறுத்தம். இனியும் போராடாமல் இருப்பது தவறான வரலாற்றை உருவாக்கி விடும்.

பணி ஓய்வு பெறுபவர்கள் போராடலாமா
என்ற கேள்வி வழக்கம் போல் எழுந்திள்ளது. ஓய்வூதியப் பலன்கள் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் எழும் கேள்வி இது. 2000 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் போராடி அரசு ஓய்வூதியத்தை நாம் பெற்றோம்.  
ஓய்வூதிய விதி சொல்வது என்ன?
ஒருவர் பணி ஓய்வு பெறும் மாதத்தில் அவர் பெறும் அடிப்படைச் சம்பளமே ஓய்வூதியப் பலங்களுக்கான அடிப்படை. ஆகவே போராட்டத்தில் பங்கேற்பதின் காரணமாக ஓய்வூதியப் பலன்களில் எந்த் ஒரு பாதிப்பும் வராது.
மேலும்இந்த்ப் போராட்டம் காரணமாக ஊதிய மாற்றம் பெறும்போது ஓய்வூதியப் பலன்களும் கணிசமாக உயரும்.
4கி அலைக்கற்றையை நமது நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் நடைபெறும் வேலைநிறுத்தம் இது. இதனால் நிறுவனம்  வளர்ச்சி பெறும். அதனால் நமக்கும் முன்னேற்றம் கிடைக்கும்.
நமது நிறுபவனம் 4ஜி சேவை கொடுத்தால் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியும் லாபமும் தடைபட்டு விடும் என்ற நோக்கத்துடன் அரசு தாமதிக்கிறது. அரசின் இந்த் போக்கை மாற்றி 4ஜி சேவையை நமது நிறுவனமும் வழங்குவதற்காகவும் இந்த போராட்டம்.

போராட்டங்களே நம்மை முன்னேற்றியிருக்கின்றன. இதுவே சரித்திரம் சொல்லும் பாடம்.

நாளை (03.12.2018) முதல் துவங்கும் வேலைநிறுத்தத்தில் உறுதியுடன் போராடுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம்.
இறுதியில் வெற்றி நமக்கே.

வாழ்த்துக்கள்