NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 22 March 2018


மார்ச் 22
உலக தண்ணீர் தினம்
அந்நாளில் நீர்நிலைகளை உயிரெனக் காத்தனர். இந்நாளில் ஏரி மூடி வீடு கட்டி பணம் பார்க்கிறார் கள். வெப்பமும் வறட்சியும் கைகோர்த்து நீரின்றி வாட்டுகிறது.

தண்ணிரைச் சேமிப்போம் என்பது மக்களுக்கான அறிவுரை.

ஆனால் மழை நீரைச் சேமிக்கும் திட்டம் உண்டா?

மழையால் மடியும் மக்களும் உண்டு. மழையின்றி மடியும் மக்களும் உண்டு. இந்த அவல நிலையை உருவாக்கியோர் தண்டனைக்குரியவர்களே.
நதிகளை இணைக்கும் திட்டம் என்பது தேர்தலின்போது மட்டும் வாக்குறுதிகளாய் வலம் வருகிறது.

குடிநீருக்காகவே ஒரு நாளின் பெரும்பகுதியச் செலவிட்டு வாழும் நிலை இங்கே.    

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தண்ணீரை தாரைவார்த்து பகல் கொள்ளையடிக்கும் பாதகர்களும் இங்கெ.

வீட்டுக்கு வீடு
கெருவுக்குத் தெரு
ஊருக்கு ஊர்
நாட்டுக்கு நாடு
என பிரச்னை உண்டாகி
மூன்றாவது உலகப்போர் உருவானால் அது தண்ணிருக்ககவே இருக்கும் என்கின்றனர் புவிசார் வல்லுநர்கள்.

என்ன செய்ய? இருப்பதைக் காத்து வாழ்பவதைத்தவிர வெறென்ன வழி நமக்கு.

No comments:

Post a Comment