NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 21 September 2017

பாபு தாரபாதா உரை
1921 செப்டம்பர் 21. லாகூர். தபால் ஊழியர் சங்க அகில இந்திய மாநாடு. அதன் ஒப்பற்ற தலைவர்  பாபு தாரபாதா
தலைமை உரையாற்றினார். அவரின் அந்த பேச்சக்காக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்படி என்ன பேசிரிட்டார்?

" தொழிலாளர்கள் பிச்சைகாரர்கள் அல்ல. அவர்களே இந்த பூமியின் உயிர்ச் சத்து. உழைப்பின் முத்திரை விழுந்தாலன்றி எந்தப் பொருளும் செல்வமாவதில்லை. செல்வம் அனைத்தும் படைப்பவர்கள் அவர்களே. தொழிலாளர்கள் இல்லை என்றால் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைப்பு எங்கிருந்து வரும்?
தொழிலாளி வேலை செய்வதை நிறுத்தினால் என்ன ஆகும்
ஒரு 
தானிய மணி கூட விளையாது. ஒரு முழத் துணி நெய்யப்படாது. ஒரு செங்கல் இடம் பெயராது."
அநீதி கண்டு ஆர்பரித்து போராடாது அநீதி களைய முடியாது என்பத தாரக மந்திரமானது.
தபால் தந்தி ஊழியர் இயக்கம் வீரமிக்க இயக்கமாக இருந்ததற்கு அடித்தளம் அமைத்த தலைவருக்கு தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.


நன்றி தோழர் மாலி

No comments:

Post a Comment