NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 20 April 2017

GPF
பிரச்னை தீருமா?

இந்த மாதம் GPF பணம் கிடைக்குமா என்று ஒவ்வொரு மாதமும் கேள்விகள் எழுகின்றன்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யும் DOT CELL அமைப்பே இனி GPF பட்டுவாடாவையும் செய்யும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும். 

இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள்  12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம்  பெற
முடியுமா என்பதற்குக் காலம்தான்  விடை காணும்.

No comments:

Post a Comment