NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Wednesday, 25 January 2017

போராட்டங்க்களும்

படிப்பினைகளும்

ஒரு போராட்டத்தை திட்ட்மிட்டோ
திட்டமிடாமலோ துவக்குவது எளிது.

அந்தப் போராட்ட்டத்தை எப்போது எப்படி முடிப்பது என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இதற்கான படிப்பினையை  தோழர் குப்தா நமக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்போது அடையாளப் போராட்டங்களையே நாம் நடத்தி வருகிறோம். தோழர் குப்தா காலத்தில் நீண்ட நெடிய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு போராடத்தையும் எப்போது எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடித்தவர் அவர்.

இது குறித்து சிலர் விமர்சனம் செய்தது உண்டு. ஆனாலும் இப்போது பாரபட்சமின்றி சிந்திதுப் பார்த்தால் அந்தப் போராட்டங்க்கள் அனைத்துமே நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன. அவற்றை ஊழியர்களும் ஓய்வு பெற்றவர்களும் அனுபவித்து வருகின்றனர்.

எந்த ஒரு போராட்டத்தையும் அரசு நசுக்க்கிவிடாமல் உடன்பாட்டொடு முடிக்கும்
வல்லமை பெற்ரவர் தோழர் குப்தா.

ஒரு போராட்டத்தை முடிப்பதில் போராடுவோருக்கும் பங்கு உண்டு. ஆள்வோருக்கும் பங்கு உண்டு.

1974ல் ரயில்வே ஊழியர் போராட்டம் அரசால் சிதைக்கப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட
போராட்டமாக அமைந்தது.

மாணவர் இளைஞர் போராட்டத்தைச் சிறப்பாக முடித்து வைத்து அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நல்ல பெயர பெறும் வாய்ப்பை அரசு தவறி விட்டது.

மாறாக போராட்டத்தை அமைதியாக முடித்து மாணவர்கள் பெருமை பெறுவதை அரசு விரும்பவில்லை.

ஒரு அமைதியான அறவழிப் போராடத்தைஅதிகாரத்தை வைத்து முறியடிப்பது என்ற அரசின் முடிவால் மாணவர்களுக்கு இழப்பில்லை.

ஜல்லிக்கட்டைச் சட்டம் போட்டு மீண்டும் கொண்டு வந்துவிட்டோம் என்று அரசு பெருமை கொண்டால் அந்தப் பெருமை மானவர்களால் கிடைத்தது என்பதே நிதர்சனமான சத்தியம்.

அண்ணாவின்   பெயரைக் கொண்ட கட்சியின் அரசு அண்ணாவின் வழியை ஏன் பின்பற்றவில்லை?

அதிகார உணர்வா?
மாணவர்களின் பெருமையைப் பறிப்பதா?
அல்லது நிர்ப்பந்தமா என்பது ஆள்வோருக்கே தெரியும்.

ஆகப்பெரிய கட்சியாக இருந்த காங்க்கிரஸையே 50 ஆண்டு காலமாக ஆட்சியிலிருந்து விலக்கி வைத்தது மானவர் சக்தி.

இந்த மாணவர் சக்தியின் விளைவைப் புரிந்து கொண்டு பாடம் கற்க வேண்டியவர்கள் தமிழக அரசிய்லவாதிகள்.

தொழிற்சங்கங்க்களும் இந்த்ப் மாணவர் போராட்டங்களிலிருந்து
பாடம் கற்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment