NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Wednesday, 1 July 2015

எட்டு ரூபாயும் 60 கோடியும்

சாதாரண ஏழை எளிய மக்கள் தேநீர் அருந்த குறைந்தபட்சம் எட்டு ரூபாய் செல்வாகிறது.
அந்த ஏழை எளிய மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் ஓயாது உழைத்திடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு கேண்டீன் உள்ளதாம். அதில் டீ, காபி, டிபன், சாப்பாடு (சைவம் மற்றும் அசைவம்) ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படுகிறதாம்.
இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபாய் 60 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளதாம்.
மக்களுக்கான மானியத்தைக் குறைக்க அல்லது ஒழிக்க மாபெரும் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
நாடாளும் மன்ற உறுப்பினர்கள் குறைந்த விலையில் சாப்பிட ஆண்டு தோறும் மானியம் கூடிக் கொண்டே வருகிறதாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எல்லாமே மானிய மயம்.
மக்களுக்கோ எல்லாமே நாம மயம்.

(கடந்த 27.06.2015 அன்று இரவு 10.30 மணிக்கு புதிய தலைமுறையில் கேட்ட செய்தி இது. இந்த செய்தியை அவர்கள் RTI மூலம் பெற்றார்களாம்)  

No comments:

Post a Comment