NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Saturday, 11 October 2014

எதற்கு? ஏன்?



செய்ய வேண்டிய காரியத்தை,
செய்ய வேண்டிய நேரத்தில்
செய்யாமல் இருப்பதும் குற்றம்.

செய்யக் கூடாத காரியத்தை,
செய்யக் கூடாத நேரத்தில்
செய்வதும் குற்றம்.


வரும் 27.11.2014 அன்று JAC  சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்தம் என நிர்வாகத்துக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பூஜாவுக்கு முன்னர் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கு என்பது முப்பதில்  முதல் கோரிக்கை.

பெற வேண்டிய உரிமையை உரிய காலத்தில் பெற்றுத் தர வேண்டியது கடமை.
பெற்ற உரிமையை இழப்பதை மெளனமாக வேடிக்கை பார்ப்பது வெட்கம்.
இழந்த உரிமையைப் பெற முடியாமல் இருப்பது அவமானமாகும்.
போனஸ் என்பது ஒரு உரிமை என்பதைக் கூட உரக்கச் சொல்லாமல் நஷ்டம் என்றும் சம்பளம் அதிகமாகப் பெறுகிறோம் என்றும் சமாதானம் சொல்வதும் சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்று.
இது ஊழியர்களின் குற்றமா?
தலைமையின் குற்றமா?
ஊழியர்களின் குற்றம் என்று சொல்வது உளறல்.
தலைமையின் குற்றம் என்பது சத்தியம்.

No comments:

Post a Comment