NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Monday, 21 July 2014

தீர்வுக்கான போராட்டம்



பவானி தொலைபேசி நிலையத்திலும் ஊழியர் குடியிருப்பிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாயினர்.

தலமட்டத்தில் கிளைச் சங்கம் தீர்வுக்காக வேண்டியது. மாவட்டச் சங்கமும்  மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டியது. நமது வேண்டுதல்கள் உரிய தீர்வைத் தரவில்லை.

ரெளத்திரம் பழகு என்ற பாரதியின் வழியில் இனியும் பொறுப்பதில்லை என நமது பவானி கிளைச் சங்கம் போராட்ட அறிவிப்பு கொடுத்துள்ளது.
22.07.2014 அன்று ஆர்ப்பாட்டம்
24.07.2014 முதல் காலவரையற்ற பட்டினிப்போர் என்ற காந்தியடிகள் வழியில் ஒரு அறப் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இது விளம்பரம் தேடும் போராட்டம் என்பவர்கள்
தண்ணீர் இல்லாமல் வாழ முடியும் என்பதைக் கற்றுக் கொடுத்து அப்படி ஒரு வாழ்வை சில மணி நேரங்கள் வாழ்ந்து காட்டினால் இப்போராட்டத்தை  உடனடியாக விலக்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment