NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Monday, 1 April 2013

தினம் ஒரு கேள்வி – நான்கு

 78.2 சத அகவிலைப்படி இணைப்பை நிர்வாகம் ஏற்றுக் கொண்டாதாக உரக்கக் கூவி ஜூன் 12,2012 வேலை நிறுத்த அறைகூவலை ஒத்தி வைத்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். 10 மாதங்கள் கழிந்து விட்டது. ஆனால் இன்று வரை ஊழியர்களுக்கு 78.2 சத இணைப்பு கிடைக்கவில்லை. ஊழியர்கள் இது வரை இழந்தது மொத்தமாக ரூ.6000 கோடி. ஏற்கனவே பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் 78.2 சத அகவிலைப்படி இணைப்பு பெறாமல் ஓய்வூதிய பலன் இல்லாமல் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். ஆசை வெட்கமறியாது. அதனால் தான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் தேர்தல் அறிவிப்புகளில் 78.2 சத இணைப்பு தீர்வு காணப்பட்டுவிட்டது / பெற்றுவிட்டோம் / உறுதி செய்யப்பட்டுவிட்டது என அறிவித்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது. ஒரு தொழிற் சங்கம் இப்படிப்பட்ட பட்டவர்த்தனமான பொய்யான பிரச்சாரத்தை அதுவும் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யலாமா?
நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment