NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Tuesday, 15 January 2013



பெயரில் இல்லை!

கடந்த 5 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு ரூ.1600 கோடி. அதற்கு ஆண்டுக்கு 12 சதம் வட்டி கட்ட வேண்டும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாமல் உள்ளது எனவே ரூ.1600 கோடி என்பது ரூ.2500 முதல் ரூ.3000 கோடி என உயரும் வாய்ப்பு உள்ளது.

வருமான வரி துறையின் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை மற்றும் குர்கானில் உள்ள அதன் தலைமையகத்தில் அதிரடி சோதனைகள் நடத்தினர். சரியான நேரத்தில் அவர்களைப் பிடித்து விட்டோம். ஒரு பைசா இழப்பு கூட இழப்பு இல்லாமல் தடுத்துவிட்டோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

2006-07 இல் சென்னை தொழிற்சாலை நிறுவப்பட்டது. நெரடி மற்றும் மறைமுக வரிகளை ஏய்ப்பதற்காக கணக்குகளில் தில்லு முல்லு செய்யும் முயற்சி நடைபெற்றது. கைபேசி வைத்திருப்போர் அறிந்துள்ள பெயர் "நோக்கியா". அது பின்லாந்து நாட்டு நிறுவனம். இந்தியாவை வாழ வைக்க தொழில் துவங்குவாதாக நம்மை நம்பவைக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? மத்திய மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள் போதாதா? வரி ஏய்ப்பு ஏன்? இந்திய நாட்டை கொள்ளை அடிப்பதுதானே நோக்கம் நோக்கியாவிற்கு? பெயரில் இல்லை அதன் நேர்மை!

No comments:

Post a Comment