NFTECHQ

Wednesday, 3 October 2018


தியாகம்

தியாகம் என்ற வார்த்தைக்கு, இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறையினரின் அகராதியில் அர்த்தம் கிடையாது. அதற்கென்று எந்த விலையும் கிடையாது. அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது, இன்று பலரது எண்ணமாக உள்ளது. வாழ்வின் அர்த்தத்தைப் புரியாதவர்களாகவும், அப்பாவிகளாகவும், மனநலம் குன்றியவர்களாகவும், இயலாமைகளைப் பொதுவில் மறைப்பவர்களாகவும் மட்டுமே, தியாகம் புரிந்தவர்கள் இன்றைய சமூகத்தில் மரியாதை பெறுகின்றனர்.
அடியும் உதையும் இல்லாமல் குழந்தைப் பருவத்தைக் கடப்பது, ஒரு தலைமுறையின் எண்ணத் தொடர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றம் என்பது இப்போது யாருக்கும் புரிவதில்லை. முந்தைய தலைமுறையின் கணக்கிலடங்கா தியாகங்களால் தான் இன்றைய சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.
அடுத்தவரின் எண்ணத்துக்கு மதிப்பளிப்பதில் இருந்து தொடங்குகிறது தியாகத்தின் பயணம். பட்டினி கிடந்து குழந்தைகளின் பசியாற்றிய பெற்றோர் குறித்த விவரணைகள், இன்று பலருக்குக் கட்டுக்கதை தான். தான் பறிகொடுத்த கல்வியைத் தனது மக்கள் பெறவேண்டும் என்று ஒருவர் விரும்புவது, மற்றவர்க்கு இன்று இயலாமையாக மட்டுமே தெரிகிறது. வெறுமனே தலைமுறை இடைவெளி என்று இதனைக் கடந்துவிட முடியாது. அப்படிக் கடந்து செல்கிறோம் என்றால், எண்ணற்ற தியாகிகள் மனங்களைச் சிதைத்துப் போகிறோம் என்பதே உண்மை.

Tuesday, 2 October 2018


அக்டோபர் 2
காமராஜர் நினைவு தினம்
கல்வி என்னும் சொல் இருக்கும் வரை காமராஜர் புகழ் வாழும்

Monday, 1 October 2018


அக்டோபர் 2
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம்
அண்ணலின் பெயரை அரசியல் சூதாட்டத்துக்கும் பயன்படுத்துவோர் மலிந்து விட்ட சூழல் இது. இச்சூழலில் அண்ணல் காந்தியடிகள் குறித்து இந்து தமிழ் இதழின் பதிவு இது.

தனது மனைவி கஸ்தூரிபாய் ஆஸ்ரம விதிமுறைகளுக்கு மாறாக 4 ரூபாயை மறைத்து வைத்திருந்தால் கோபப்பட்டு, நவஜீவன் பத்திரிகையில் தனது மனைவியின் செயலைக் குறிப்பிட்டு கட்டுரைஎழுதியுள்ளார்.
எப்போதும் நீதியையும், நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் ஒழுங்கையும், சுயஒழுக்கத்தையும் கடைப்பிடித்த மகாத்மா காந்தி, தனது மனைவி சிறிய தவறு செய்தபோதிலும் கூட அதை கட்டுரையில் குறிப்பிட்டு வருந்தினார்.
  
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாளை உலகம் முழுவதும் இந்தியர்கள் மட்டுமின்றி, அகிம்சையை விரும்புபவர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அண்ணல் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு கூறலாம்.
கடந்த 1929-ம் ஆண்டு மகாத்மா காந்தி நடத்திய “நவஜீவன்” வாரப் பத்திரிகையில் தனது மனைவி கஸ்தூரிபாய் குறித்து இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். “எனது சோகம், எனது அசிங்கம்” என்ற தலைப்பில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள காந்தியின் ஆசிரமத்தில் நடந்த சம்பவத்தை காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையின் முழு தாத்பரியமே, உண்மையையும், நீதிநெறிமுறைகளையும் தான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்பதையும், தனது விளக்கத்தையும் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் தனது மனைவி கஸ்தூரிபாய் குறித்து பல்வேறு பெருமைகளையும் கூறும் மகாத்மாகாந்தி, அவர் செய்த தவறுகளை ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை, அதை தவறு என்றும் உச்ச கட்டமாக “திருட்டு” என்றும் வன்மையாகச் சாடியுள்ளார்.
ஆசிரம விதிப்படி பணத்தை யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆசிரமத்துக்கு வந்து காந்தியையும், அவரின் மனைவி கஸ்தூரிபாயையும் சந்திக்க வருபவர்கள் கொடுக்கும் பரிசுகள், பணம் ஆகியவற்றை ஆசிரமத்துக்கு கொடுத்துவிட வேண்டும். எந்தப் பொருட்களையும் பணத்தையும் சொந்த பயன்பாட்டுக்குவைத்துக் கொள்ளக்கூடாது. திருடர்கள் ஆஸ்ரமத்துக்கு வந்தால்கூட ஏதும் இல்லை என்று ஏமாற்றமடைந்து செல்லவேண்டும். அதுபோன்று ஆசிரமம் அமைந்திருக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார்.
ஆனால், கஸ்தூரிபாயோ காந்திக்கு தெரியாமல் நூறு ரூபாயை மறைத்து வைத்திருந்தார். ஒரு நாள் திருடன் காந்தியின் அறைக்குள் நுழைந்துவிட்டான். ஆனால், காந்தி திருடன் நுழைந்துவிட்டான் என்றுசொன்னதும் அவர் பதற்றப்படாமல் இருக்க, கஸ்தூரிபாய் பதற்றத்துடன் இருந்தார். எந்தவிதமானபொருளும், பணமும் இல்லாதவர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்று காந்தி சிந்தித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரமத்துக்கு வந்து சென்றவர்கள் சிலர் அளித்த 4 ரூபாயையும் கஸ்தூரிபாய்ஆசிரமத்தில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு மகாத்மா காந்தி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி எழுதியிருப்பதாவது
எனது மனைவியிடம் ஏராளமான நல்ல குணங்கள் இருக்கின்றன. அதேசமயம், தவறான குணம் இருப்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆசிரம விதிப்படி ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்கள் யாரும் கையில் பணம் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருப்பது ஆசிரம விதிக்கு முரணானது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கஸ்தூரிபாய் தன்னிடம் 200 ரூபாய் வரை வைத்திருந்தார். இந்த பணம் அனைத்தும் ஆஸ்திரமத்துக்கு வருபவர்கள் பரிசாக அளித்தது. ஆனால், இந்த பணத்தை அவர் ஆசிரமத்துக்கு அளிக்காமல் தன்னிடமே மறைத்து வைத்திருந்தார்.
ஒருநாள் எங்களுடைய ஆசிரமத்துக்கு ஒரு திருடன் வந்து என் அறைக்குள் நுழைந்துவிட்டான். அங்கு என்ன பணமா இருக்கப் போகிறது என்று நான் அமைதி காத்தேன். அந்தத் திருடன் எதையும் எடுத்துச்செல்லவில்லை. ஆனால், என் மனைவியோ பதற்றத்தோடு இருந்தார். நான் அப்போதே என் மனைவி கடமையில் இருந்து தவறிவிட்டதை கண்டுபிடித்துவிட்டேன்.
மற்றொரு சமயம், சிலர் ஆசிரமத்துக்கு வந்து என்னைச் சந்தித்துவிட்டு கஸ்தூரிபாவிடம் 4 ரூபாயை அளித்தார்கள். ஆனால், அந்த பணத்தையும் கஸ்தூரிபா ஆசிரம அலுவலகத்திடம் ஒப்படைக்காமல், தானே வைத்துக் கொண்டார்.
என்னைப் பொருத்தவரை என் மனைவி செய்தது “திருட்டு” என்று குறிப்பிடுவேன். ஆசிரமத்தில் இருந்தவர்களில் ஒருவர் கஸ்தூரிபாவி்ன் செயலைக் குறிப்பிட்டார். அதன்பின் கஸ்தூரிபா தன்னிடம் இருந்த பணத்தை ஆசிரமத்துக்கு அளித்திவிட்டு வருத்தம் தெரிவித்து, இனிமேல் நடக்காது என்று உறுதியளித்தார்.
கஸ்தூரிபாய் தான் செய்த தவற்றுக்கு வருந்தினார். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடந்தால், நான் ஆஸ்திரமத்தை விட்டும், என்னை விட்டும் விலகிச் சென்றுவிடுவதாகத் தெரிவித்தார். கஸ்தூரிபாவின் உறுதிமொழியை ஆசிரமத்தில் உள்ளவர்கள் ஏற்றனர்.
இறுதியாக நான் சொல்வது என்னவென்றால், என் கடமையை நான் செய்யாவிட்டால் கூட அது கடமை தவறியது என்றுதான் அர்த்தம்.
இவ்வாறு மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய மனைவி செய்த தவறாக இருந்தாலும் அதை மறைக்க வேண்டும் என்ற துளி எண்ணமும் இல்லாமல், தனது கட்டுரையில் வெளிப்படையாகக் குறிப்பிட்டு கூறி பரிசுத்தமானவர் மகாத்மா காந்தி என்பதில் சந்தேகமில்லை. தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் வாழும் வரைக்கும் ஒழுக்க நெறி மாறாமல், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை விரும்பினார்.



Sunday, 30 September 2018


வாழிய பல்லாண்டு
30.09.2018 அன்று பணிநிறைவு  பெறும்
தோழர் S. ரங்கராஜன் SDE ஈரோடு
தோழர் P. ஈஸ்வரன் OS ஈரோடு
தோழர் K. செல்லப்பன் TT பவானி
தோழர் G.பன்னீர்செல்வம் TT  ஈரோடு
தோழர் மொகமது ரப்தீன் TT கோபி
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Saturday, 29 September 2018


அதிகபட்ச விலைவாசிப்படி உயர்வு
01.10.2018 முதல் 7.6 சதவ்கிதம் விலைவாசிப்படி உயரும். இதனால் மொத்த விலைவாசிப்படி 135.6 சதவிகிதமாக இருக்கும். யாம் அறிந்தவரை இதுவே அதிகபட்ச உயர்வு.
இந்த உயர்வுக்கான காரணமும் இதன் விளைவுகளும்
ஆள்வோரின் அவலட்சணத்தை உணர்த்துகின்றன. தனியொரு மனிதன் கொள்ளையடித்து உல்லாச வாழ்வு வாழ மக்கள் துன்புறுவதோ?
இந்நிலை என்று மடியுமோ?


ஆறாவது பேச்சுவார்த்தை
28.09.2018 அன்று நிர்வாகத்துடன் ஆறாவது முறையாக ஊதியமாற்றப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. NE4 மற்றும்  NE5 சம்பளவிகிதங்களில் தேக்கநிலையைத் தவிர்க்க அவற்றின் இறுதிநிலைகளைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பரிசீலிப்பதாக நிர்வாகம் ஒத்துக்கொண்டது. சம்பளவிகிதங்களில் அனேகமாக உடன்பாடு வரும் நிலை ஏற்படலாம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 09.10.2018 அன்று நடைபெறும. அந்தக் கூட்டத்தில் சம்பள விகிதங்கள் பற்றி இறுதி முடிவு வரலாம். அன்று அலவண்ஸ்கள் பற்றி பேசப்படும் என தெரிகிறது.  ஊதிய நிர்ணயத்தின் அடிப்படை குறித்து இன்னும் ஏன் தெளிவு வரவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

Monday, 17 September 2018


செப்டம்ப ர் 17
பெரியார் பிறந்ததினம்

சமூகநீதி,
சமத்துவம்,
சமதர்மம்,
அறியாமை,
மூடந்ம்பிக்கை
பெண்விடுதலை
சாதி மத பேதமற்ற சமுதாயம்
இவற்றை ஊர்முழுதும்
உரக்கச் சொன்ன
பெரியார் பிறந்ததினம் இன்று.






Sunday, 16 September 2018

அநீதியை அழிப்போம்
பாரபடசத்தை வேரறுப்போம்

அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்துப் போராடாமல்
அநீதி களைய முடியாது.
BSNL
நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 15 சதவிகித உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வை அமல்படுத்த லாம் என ஒத்துக் கொண்டு அதற்கான சிபாரிசையும், பரிந்துரையையும் 14.11.2017 அன்று CMD அவர்கள் DOTக்கு எழுத்துபூர்வாகத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வை நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த அநீதியை ஏற்கலாமா? அதிகாரிகளுக்கு கொடுக்கும் 15 சத ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு மறுக்கும் நிர்வாகத்தின் அப்பட்டமான, அநீதியான பாரபடசத்தை அனுமதிக்கலாமா? பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாகப் போராடிய NFPTE/NFTE இயக்கம் இந்த பாரபட்சத்தை அனுமதிக்கக் கூடாது. ஊழியர்களுக்கும் 15 சத ஊதிய உயர்வைப் பெற வாதிட வேண்டும். போராட வேண்டும். NFTE இயக்கம் தனது பாரம்பரியத்தை இழக்காமல் பாரபட்சம் களைய போராட வேண்டும்.
01.01.2017
முதல் 15 சத ஊதிய உயர்வை நிலுவையுடன் அமல்படுத்துவதை NFTE உறுதி செய்ய வேண்டும். புதிய சம்பள விகிதத்தின் அடிப்படையில் அலவ்ண்ஸ்கள் வழங்க்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் NFTE தலைமை உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரபட்சம் என்னும் பாதகச் செயலை அனுமதிக்கவே கூடாது. வெயில், மழை, இயற்கைச் சீற்றம் என அனைத்துத் தருணங்க்களிலும் கடமை உணர்வோடு அயராது கண்துஞ்சாது உழைக்கும் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பார்படசத்தை அனுமதிப்பது பாதகமான செயலாகும். இதை உணர்ந்து NFTE தகைமை செயல்பட வேண்டும். இந்த அநீதியை, பாரபட்சத்தை எதிர்த்து NFTE துணைக்கு வருவோரை இணைத்துக் கொண்டு களத்தில் கால் பதிக்க வேண்டும்.


                  வரலாற்றுத் தவறு நிகழலாமா?

அதை அனுமதிக்கலாமா?

மத்திய அரசு ஊழியர்களின் எந்த ஒரு சம்பளக்குழுவிலும் ஊதிய மாற்றம் நிகழும்போது புதிய ஊதிய நிர்ணய முறையில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வேற்பாடு இருந்ததில்லை. BSNL நிறுவனத்திலும் முதல் இரு சம்பள மாற்றத்திலும் ஊதிய நிர்ணய முறையில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வேறுபடு இருந்த்தே இல்லை. ஆனால் இம்முறை மட்டும் அதிகாரிகளுக்கு 15 சதம் என சிபாரிசு செய்துவிட்டு ஊழியர்களுக்கு 11 சதம் என்ற அடிப்படையில் புதிய சமபள விகிதங்களை உருவாக்க நிர்வாகம் முயலுகிறது.  சமத்துவம், சமதர்மம் என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும். மோசமான ஒரு வரலாற்றுத் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருக்கலாமா?
தேக்கநிலையை மட்டுமே அலசி ஆராய்ந்து கொண்டு தீராத வரலாற்றுப் பழிக்கு வித்திடலாமா?



அநீதியை அழிப்போம்
பாரபடசத்தை வேரறுப்போம்
அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்துப் போராடாமல்
அநீதி களைய முடியாது.

BSNL நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 15 சதவிகித உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வை அமல்படுத்த லாம் என ஒத்துக் கொண்டு அதற்கான சிபாரிசையும், பரிந்துரையையும் 14.11.2017 அன்று CMD அவர்கள் DOTக்கு எழுத்துபூர்வாகத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வை நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த அநீதியை ஏற்கலாமா? அதிகாரிகளுக்கு கொடுக்கும் 15 சத ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு மறுக்கும் நிர்வாகத்தின் அப்பட்டமான, அநீதியான பாரபடசத்தை அனுமதிக்கலாமா? பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாகப் போராடிய NFPTE/NFTE இயக்கம் இந்த பாரபட்சத்தை அனுமதிக்கக் கூடாது.
ஊழியர்களுக்கும் 15 சத ஊதிய உயர்வைப் பெற வாதிட வேண்டும். போராட வேண்டும். NFTE  இயக்கம் தனது பாரம்பரியத்தை இழக்காமல் பாரபட்சம் களைய போராட வேண்டும்.
01.01.2017 முதல் 15 சத ஊதிய உயர்வை நிலுவையுடன் அமல்படுத்துவதை NFTE உறுதி செய்ய வேண்டும்.
புதிய சம்பள விகிதத்தின் அடிப்படையில் அலவ்ண்ஸ்கள் வழங்க்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் NFTE தலைமை உறுதியுடன் செயல்பட வேண்டும்.
பாரபட்சம் என்னும் பாதகச் செயலை அனுமதிக்கவே கூடாது.
வெயில், மழை, இயற்கைச் சீற்றம் என அனைத்துத் தருணங்க்களிலும் கடமை உணர்வோடு அயராது கண்துஞ்சாது உழைக்கும் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பார்படசத்தை அனுமதிப்பது பாதகமான செயலாகும். இதை உணர்ந்து NFTE தகைமை செயல்பட வேண்டும். இந்த அநீதியை, பாரபட்சத்தை எதிர்த்து NFTE துணைக்கு வருவோரை இணைத்துக் கொண்டு களத்தில் கால் பதிக்க வேண்டும்.

Friday, 14 September 2018


ஐந்தாவது பேச்சு வார்த்தை
ஊதிய மாற்றம் குறித்து இன்று 14.09.2018 நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
விபரங்கள்
14.09.2018 அன்று நிர்வாகம் கொடுத்த புதிய விகிதங்களை ஏற்பதாக தொழிற்சங்கங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. எனினும் தேக்கநிலை வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை ஆழமாகப் பரிசீலிக்க தொழிற்சங்கம் சார்பாக நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்கப்பட்டது. நிர்வாகமும் கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை 28.09.2018 அன்று நடைபெறும்.
தொழிற்சங்கங்கள் 26.09.2018 அன்று அலவண்ஸ் பற்றிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கும்.
நல்லதொரு முடிவை நோக்கி நகர்வது மகிழ்வைத் தருகிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அந்த திசை நோக்கி நகர்வோம்.


தற்போதிய சம்பள விகிதங்ககளும்
நிர்வாகம் முன்மொழிந்த
புதிய சம்பள விகிதங்களும்
            `                      
                 


தற்போதிய சம்பள விகிதங்ககள்
நிர்வாகம் முன்மொழிந்த சம்பள விகிதங்கள்
ஊதிய விகிதத்தின்  காலம் (ஆண்டுகளில்)
NE-1
7760-13320
19000-45700
29
NE-2
7840-14700
19200-49900
32
NE-3
7900-14880
19300-53000
33
NE-4
8150-15340
19900-56200
34
NE-5
8700-16840
21300-59600
34
NE-6
9020-17430
22000-63200
35
NE-7
10900-20400
26600-69000
32
NE-8
12520-23440
30600-79600
32
NE-9
13600-25420
33200-86000
32
NE-10
14900-27850
36400-94500
32
NE-11
16570-30650
39700-104000
32
NE-12
16390-33830
39900-114600
35