NFTECHQ

Thursday, 28 March 2019


கதவைத் தட்டும் பேரழிவு: கடலை கொல்லும் மனிதர்கள்!

கடலுக்கு ஏற்படும் அபாயம் மொத்த பூமிக்கும் ஏற்படும் அபாயம்!

எல்லையே இல்லாத ஆச்சரியங்களால் கடல்கள் நிறைந்துள்ளன. நம் பூமி 70% கடலால் சூழப்பட்டிருந்தாலும், மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் நம் கற்பனைக்கும் எட்டாத உயிரினங்களும் பல விந்தைகளும் புதைந்துள்ளன. இதில் என்ன நடக்கிறது என்பதையும் அவை சந்திக்கும் பிரச்சினைகளையும் தெரியப்படுத்த இதைவிட ஒரு முக்கியத் தருணம் வேறு இருக்க முடியாது.”
- இவ்வாறு டேவிட் அட்டன்பரோவின் வசீகரக் குரலில் தொடங்கும் பிபிசியின் தி ப்ளூ பிளானெட் – 2 (The Blue Planet : 2) ஆவணப்படம் கடந்த வருடம் பெரிதாகப் பொதுவெளிக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இயங்கிவந்த முன்னணித் திரை விநியோகஸ்தர்களின் உதவியுடன் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டது. 1,406 நாட்கள் பயணமும் 6,000 மணி நேரப் படப்பிடிப்பும் ஏழு பகுதிகளைக் கொண்ட தொடராகப் பகுக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் திரையிடப்பட்ட அந்தப் படத்தினைப் பார்த்தபோது மாயாஜால உலகுக்குள் சென்றுவந்ததைப் போன்ற ஓர் உணர்வு. ஆழ்கடல் அவ்வளவு அற்புதங்களைக் கொண்டதா என்று வியப்பாக இருந்தது. இயற்கை இவ்வளவு ஆச்சரியங்களைத் தன்னுள் வைத்திருப்பதைப் பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், தாம் செய்துவரும் சின்னச் சின்னத் தவறுகளால் அந்த அதிசயங்கள் அதிவேகமாக அழிந்துவருவதையும் பார்த்தனர்.
அதீத மீன் பிடித்தல், கட்டுப்பாடில்லாத வேட்டை, கொடூரமான அளவுகளில் கொட்டப்படும் குப்பைகள் என்று பொருளாதாரச் சுரண்டல் மற்றும் அதைச் சார்ந்த விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது கடல்.

மேற்குறிப்பிட்ட ஆவணப்படத்தின் ஒரு காட்சி இது. ஒரு தாய் திமிங்கலம் தன் இறந்த குட்டியின் உடலைப் பிரிய மனமில்லாமல் பல நாட்களாகச் சுமந்துகொண்டு அலைந்துவருகிறது. அதைப் பார்க்கும்போது அவ்வளவு கனமாக இருந்தது. அந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், திமிங்கலத்தின் தாய்ப்பாலிலிருந்த விஷம்! கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக், குப்பையால் நீரின் நச்சுத்தன்மை அதிகமானதால் தாய்ப்பால் விஷமாக மாறிவிட்டதே குட்டியின் இறப்புக்குக் காரணம் என்றது பத்திரிகைச் செய்தி.
மிகப் பெரிய அளவில் நிகழ்ந்துவரும் கடல் உயிரின உயிரிழப்புகளின் மிகச் சிறிய வெளிப்பாடு இது. இந்தச் சங்கிலி கடல்வாழ் உயிர்களை மட்டுமல்ல; அதனைச் சார்ந்து வாழும் துருவக் கரடிகள், பெங்குயின்கள், நீர் நாய்கள், கடற்பறவைகள் போன்ற பல்வேறு விலங்குக் குழுக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மிகப்பெரிய அளவில் துடைத்தழித்திருக்கிறது.
கடல் உயிரிகளின் அழிவால் உணவு கிடைக்காமல் ரஷ்யாவின் ஜெம்லியா தீவுக்குள் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் புகுந்ததும், அதை அவசர நிலையாக அந்நாட்டு அரசு அறிவித்ததும், பொருளாதாரத்துக்காகச் சுரண்டப்பட்ட கடல் அழிவின் நேரடி சாட்சியங்கள். மனிதச் செயல்பாடுகளின் விளைவால் கடல் அழிக்கப்படுகிறது என்பதை நிறுவுவதற்கான அறிவியல் வாதங்களைவிட ஆயிரம் மடங்கு அதிக வீரியம் கொண்ட ஆதாரங்கள் அவை.
இது அவ்வப்போது நிகழ்வதுதான் என்ற வழக்கமான வாதத்தை முன்வைத்துத் தப்பிக்க முடியாது. ஏனெனில் பனிக்கரடிகளின் இந்தப் படையெடுப்பு குறித்து அந்நகராட்சித் தலைவர் ஜிகன்ஷா முசின் கூறுகையில், 1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவிலான பனிக்கரடிகள் ஊருக்குள் புகுந்ததை தான் கண்டதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காட்டுக்குப் புலி, கடலுக்குத் திமிங்கிலம்
நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கவியலாத வாழ்வியல் அற்புதங்களைக் கொண்டிருக்கிறது கடல். அந்தக் கடலை ஆள்பவை திமிங்கலங்கள். எப்படி ஒரு புலியின் இறப்பு காட்டின் ஒரு பகுதியை அழிவுக்கு வழிவகுக்குமோ அப்படியே ஒரு திமிங்கலத்தின் இறப்பும் கடலுக்கு. சமீப காலங்களில் வரலாற்றில் என்றும் பதிவு செய்யப்படாத அளவில் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. அவற்றால் கடலில் வாழ முடியவில்லை. அவற்றின் வாழ்விடத்தை நாம் அப்படி அசிங்கப்படுத்தியிருக்கிறோம். அவ்வளவு சீர்குலைத்திருக்கிறோம்.
திமிங்கலங்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக இறந்து போவதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம். இதை நாம் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாது. கடலின் வெப்பநிலை உயர்வு, புவி வெப்பமயமாதலால் புவியில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் கடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், குப்பைகளாலும் கழிவுகளாலும் கடலின் நீர்த்தன்மையில் ஏற்படும் மாற்றம் ஆகியவைதான் திமிங்கலங்களின் இறப்புக்குக் காரணம். அவை ஒலி உணர்வின் வழி (Eco-location) வழிநடத்தப்படுபவை. சிறிய மாற்றங்கள்கூட அவற்றின் பாதைகளிலும் அன்றாடச் செயல்பாடுகளிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அப்படிப் பாதையிழந்து உணர்விழந்து தவிக்கும் திமிங்கலங்கள் கடைசியில் இறந்துவிடுகின்றன.” - இதுதான் கடல்சார் விஞ்ஞானிகளான டிபானி சுடாரியா, கில் பிரௌலிக், ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட் (Dipani Sutaria, Gill Braulik, J K Patterson Edward) ஆகியோர் வெவ்வேறு தளங்களில் வெளியிட்ட ஆய்வுகளின் சுருக்கம்.
அத்தனை அழிவுகளையும் பொருளாதார வளர்ச்சி எனும் பூதத்தின் வாயில் நின்றுகொண்டு இந்த மனிதகுலம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த பூதம் மனிதகுலத்தையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது.
வேடிக்கை பார்க்கத்தான் ஆள் இல்லை!
நன்றி  நரேஷ்


Saturday, 9 March 2019


COMGRTULATIONS

We are extremely happy to express our congratulations to the following comrades who have passed the JTO LICE examinations held on 20.01.2019

1.VASANTHAKUMAR.J
2.SARAVANAKUMAR B
3.SHARMILABANU.J
4.RAMESH C
5.SUKANYA K M
6.SUDHAKARAN P
7.MARUDHAKUMAR M.V
8.SIVASANKARI-D

We wish all the above comrades for  all success in their carrier.

Friday, 8 March 2019

               அன்பார்ந்த
              தோழியர்கள்
            அனைவருக்கும்
               மகளிர்தின
             வாழ்த்துக்கள்

Wednesday, 6 March 2019


வளர்ச்சிவேண்டுமா,

வாழ்க்கை வேண்டுமா?

கதவைத் தட்டும் பேரழிவு: இயற்கை அன்னையின் மடிக்குத் திரும்புவோமா?

நரேஷ்
வெறும் இரண்டு நூற்றாண்டுகளுக்குள்ளாக, மனிதர்கள் இந்தப் பூமியை 50 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பருவ நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். அப்போது பூமியில் உயிர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
- தேசிய அறிவியல் அகாடமி மாநாட்டில் வெளிப்பட்ட கருத்து கட்டுரைக்குள் செல்லும் முன்பு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட நம்ப முடியாத சில தகவல்களைப் பார்த்துவிடலாம். ஏனென்றால்விரைவில் பூமி பேரழிவைச் சந்திக்கப்போகிறதுஎனும் வாதம்இயற்கை ஆர்வலர்களின்கூச்சல் அல்ல என்பதையும், இயற்கை ஆர்வலர்களைவிட அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும்தான் இந்தப் பேரழிவைக் குறித்து அரற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
* மனிதச் செயல்களால் வெளிப்படும் சீரழிவுகள் இதே போலத் தொடர்ந்தால், 2030க்குள் புவியின் பருவநிலையிலும் வடிவமைப்பிலும் மிகப் பெரிய மாற்றம் நிகழும்.
* அந்த மாற்றம் என்பது 30 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பருவநிலையை ஒத்ததாக இருக்கும். அந்தக் காலகட்டத்தினை ‘Mid-Pliocene Era' என்று வகைப்படுத்தியிருக்கிறோம்.
* Mid -Pliocene Era எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொண்டால், 2030 ஆண்டு என்ன மாதிரியான அழிவுகள் நிகழும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 30 லட்சம் ஆண்டுகளுக்கு
முந்தைய பூமியின் பருவநிலை மாற்றம் என்பது

1) பனிப்பாறைகளின் அதீத உருக்கம்
2) பூமியின் நிலமண்டல தட்டுகளின் நகர்வு
3) வளிமண்டலத்தில் அதீத அளவிலான கரியமில வாயுப் பொதிவு
ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றங்கள் ஆகும்.
* இந்தக் காலகட்டத்தில்தான் உயிரினப் பரிமாற்றத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் மனிதர்களின் பரிணாமம் விரைவானது. இப்போது அந்தக் காலத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இது என்ன மாதிரியான அழிவுகளை உண்டாக்கும் என்பதைக் கணிக்க முடியாது.
* இதே நிலை நீடித்தால் 2150 ஆண்டின் பருவநிலை என்பது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பருவநிலை போன்றதாக மாறும்.
* 50 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பருவநிலை - ‘Eocene era’ எனப்படும். தற்போதைய வளிமண்டல வெப்பநிலையைவிட 8-13 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பநிலை நிலவிய காலகட்டம் அது.
இவை வெறும் கணிப்புகள் அல்ல. மேற்குறிப்பிட்ட அழிவுகள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உறுதியானவை என்பதைப் புரிந்துகொள்ள ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறேன். இந்த ஆய்வு முடிவுகள் ஒரே ஓர் ஆய்வகத்தைச் சார்ந்த பொதுவான முடிவல்ல. National academy of science உடன் இணைந்து University of Bristol, Columbia University, University of Leeds, NASA Goddard Institute for Space Studies, The National Center for Atmospheric Research போன்ற உலகத் தரம் வாய்ந்த அதிநவீன தொழிற்கூடங்களில் கண்டறியப்பட்ட தகவல்கள் இவை.
அறிவியல், முன்னேற்றம் என்று அதிவேகத்தில் முன்னேறிச் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்தமுன்னேற்றத்துக்காக நாம் பல்வேறு அழிவுச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறோம். இப்போதும் ஈடுபடுகிறோம். நாம் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் அழிவுகளுக்கும்முன்னேற்றத்தைக் காரணம் காட்டி அக்கறையின்றி நகர்ந்தோம். அதன் விளைவுகள் உண்மையில் நம்மை அதிவேகமாகப் பின்னோக்கி இழுத்து வந்திருக்கின்றன.
திரும்பிச் செல்ல இயலாத தொலைவுக்கு வந்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. திரும்பிச் செல்வதற்கான கதவுகளும் திறந்தே இருக்கின்றன. வளர்ச்சிக் கதவுடன் முட்டி மோதிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக அரவணைக்கக் காத்திருக்கும் இயற்கையின் மடிக்குத் திரும்புவோம்.

Monday, 4 March 2019


மயான அமைதி மாயுமா?

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என நாட்கள் மட்டுமே நகர்கின்றன.

நாளெல்லாம் உழைத்த உழைப்புக்கு ஊதியத்தை
இன்னும் ஊழியர்கள் பெறவில்லையே என்ற கவலை, வருத்தம், ஆதங்கம் இவை கூட தென்படவில்லையே.

நிறுவமத்தின் தலைவர் சம்பளம் பெற்று விட்டார். தொழிற்சங்கத்த் தலைவர்கள் ஓ..ய்..வூ..தியம் பெற்று விட்டனர். தொழிற்சங்கத்த் தலைவர்களுக்கு  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பலவேறு அதிமுக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவே நேரம் போதவில்லை. இந்நிலையில்  ஊழியர்களுக்கு சம்பளம் வராதது பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லை. கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்யச் சொல்லிவிட்டார்கள்.

அபாவித் தொழிலாளர்களும் அதைச் செய்து விட்டார்கள்.

அநீதி கண்டு ஆர்ப்பரித்து அதிகாரிகளின் அறைகளில் புகுந்து அநீதி களைந்த காலம் நினைவில்லையா?

ஊழியர் உரிமை காத்திட தங்கள் உடலை வருத்தி உண்ணாநோன்பிருந்து உரிமைகள் காத்திட்ட தலைவர்களின் தியாக வரலாறுகள் நினைவில்லையா?

"கலங்காதிரு மனமே" என்று ஒருவரி கூட சொல்ல இயலாத தலைவர்கள்.

உழைத்த உழைப்புக்கு  ஊதியம் தராமல் ஊழியர்களை உதாசீனப்படுத்தி ஊழியர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு மருந்து தடவ தலைவர்கள் தவறியது ஏன்?

இந்த மயான அமைதி கலைடயுமா?

ஊழியர்களின் கவலை தீருமா?           

Friday, 1 March 2019


வாழிய பல்லாண்டு
28.02.2019 அன்று பணி ஓய்வு பெற்ற
தோழர்கள்
1.G.முகமது ஹுசைனி  TT ஈரோடு
2.தோழர் M.விஜயகுமார் TT வெள்ளகோவில்
3.தோழர் C.சின்னண்ணன் TT கவிந்தப்பாடி
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்
 பல்லாண்டு வாழ  வாழ்த்துகிறோம்.