NFTECHQ

Thursday, 5 October 2017

எதிர்காலத் தலைவர்கள்

ஓர் உற்பத்தி நிறுவனம் அல்லது சேவை நிறுவனம், தனது வளர்ச்சிக்காகத் தரத்தினை உறுதி செய்தல், அதனை இடைவிடாது மேம்படுத்துதல், தனது சேவையை - உற்பத்தியை விரிவாக்குதல், சந்தையில் போட்டி மற்றும் அதனை சமாளிக்கும் திட்டங்கள், ஊழியர்களின் நலன், அவர்களுக்கு பயிற்சியளித்தல், லாபம் ஈட்டுதல், இவை தொடர்பான அடுத்த சில ஆண்டுகளுக்கான திட்டங்கள் போன்றவற்றை அந்நிறுவனங்களின் உயர்நிலை தலைவர்கள் மூலமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் .
இன்னொருபுறம், களத்தில் - உற்பத்திக்கூடத்தில், அந்தப் பணிகளை, பொருள்களை உருவாக்குவது, சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தருவது எனக் கடைசி மட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் செயல்படுத்துவர்.
இவ்விரண்டு பெரும் பிரிவுகளுக்கு இடையில் ஒரு மிக முக்கியமான இணைப்புச் சங்கிலியாக இரண்டாம் கட்ட நிர்வாகம் செயல்படும்; இந்த இரண்டாம் கட்ட நிர்வாகம் என்பது மிக மிக முக்கிய அம்சம் ஆகும்.
எந்த ஒரு நல்ல நிறுவனமும், தனது வளர்ச்சியின் அங்கமாக, இந்த இரண்டாம் கட்ட அதிகாரிகளை, அடுத்த கட்டதுக்குத் தயார் படுத்தும்.
சில நிறுவனங்களில்- 'எதிர்காலத் தலைவர்கள்' என ஒவ்வொரு துறையிலும் சிலரைக் கண்டெடுத்து சவாலான பணிகளில் ஈடுபடுத்துவது, முக்கிய பேச்சு வார்தைகளில், திட்டங்களில் இணைத்துக் கொள்ளுவது என, ஒரு செயல் திட்டத்தோடு, அவர்களது திறமையை வளர்ப்பார்கள்
அவர்களை அதிக பொறுப்புக்களை ஏற்கவும், எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் மாற்றங்களுக்கும் - போட்டிகளுக்கும் ஈடு கொடுப்பவர்களாகவும் அருகில் இருந்து பயிற்றுவித்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, தலைமை பொறுப்புக்கு தயார் செய்வர்.
இத்தகைய திறமைசாலிகள் - ஊக்கப்படுத்தப்படும்போது, நிறுவனத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யத் தவறினால், ஒரு நிறுவனம், தனது எதிர்கால திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாது, உற்பத்தி வீழ்ச்சி - தரம் குறைவு படுதல் - நஷ்டம் - வாடிக்கையாளர் அதிருப்தி போன்றவை ஏற்படும்
மேலும், இவற்றைவிட முக்கியமாக, மூப்பு - மரணம் - பணி ஓய்வு போன்றவற்றின் காரணமாக அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் விலகும்போது - வெற்றிடம் ஏற்படாத வண்ணம் இத்தகைய இரண்டாம் கட்டத் தலைவர்கள் - எதிர்காலத் தலைவர்கள் - அந்த இடத்தை நிரப்புவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட தலைமை - 'எதிர்காலத் தலைவர்கள்' - என்பது, தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல - அரசியல் கட்சிகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது
லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனத்தையும், மக்கள் தொண்டு, அரசு நிர்வாகம் என வேறு தளத்தில் செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகளையும் ஒப்பீடு செய்வது தவறல்ல.
ஓர் அரசியல் கட்சியின் தலைமை, கொள்கைகளை வகுப்பது - அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டங்களை வகுப்பது, தேர்தலில் போட்டி, வெற்றிக்கு வழி வகுப்பது என செயல்படும்.
கட்சியின் கொள்கைகளால் - தலைமையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள், வாக்காளர்கள் என ஒரு சாராருக்கும் தலைமை என இன்னொரு சாராருக்குமிடையில் ஒரு முக்கியமான இணைப்பு சங்கிலியாக அக்கட்சியை சார்ந்த பேச்சாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் - எழுத்தாளர்கள் - தொழிற்சங்கவாதிகள் - கட்சியின் அடுத்த மட்ட நிர்வாகிகள் என்ற பல்வேறு நபர்கள் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருப்பார்கள்
தன்னம்பிக்கையும் திறமையும் மிக்க தலைவர்கள், இவர்களை எதிர்காலத்தில் அதிக பொறுப்புகளை ஏற்கும் திறமையான தலைவர்களாக உருவாக்குவார்கள். ஆனால் இன்று இவை எல்லாம் பழைய கதை
அரசியலில் கொள்கைப்பிடிப்பு - சேவை மனப்பான்மை போன்றவை பெருமளவில் நீர்த்துப் போயிருக்கும் நேரமிது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் அறிவும் தீர்க்க தரிசனமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக திகழ்வதும் அரிதாகி வருகிறது
இவர்களில் பலர், தங்களது தலைமையைத் தக்க வைத்துக் கொள்ளுவதில் மட்டுமே நாட்டம் காட்டுவதால், அடுத்த தேர்தலை தாண்டி சிந்திப்பதுமில்லை; அடுத்த கட்டத் தலைமையை உருவாக்குவதுமில்லை
சில கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களை தயார் செய்வதனைவிட, கட்சி வளர்ச்சியின் செலவில் தனது வாரிசுகளை உருவாக்குவார்கள். சில கட்சிகளில், தன்னால் உருவாக்கப்படுபவர்களால், அரசியலில் தனது இடத்தையே இழப்பவர்களும் உண்டு. எனவே, பெருமளவு கட்சிகளில், இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்குவதே இல்லை
சில கட்சிகளில், கவலை தரும் இன்னொரு அம்சம், திறமையைவிட விசுவாசம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, திறமையற்ற விசுவாசிகளையே இரண்டாம் கட்டத் தலைவர்களாக - எதிர்காலத் தலைவர்களாக -அடையாளம் காட்டும் போக்கு ஆகும். இத்தகையோரால், ஒரு நெருக்கடியான சூழலில், கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது போய்விடும்.
இத்தகைய, சரியான இரண்டாம் கட்டத் தலைமை அற்ற ஒரு நிலை, ஆளும் கட்சியில் ஏற்படும்போது சிக்கல் அதிகமாகும். இவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பொறுப்புகளை ஏற்கும்போது,சரியான பயிற்சி மற்றும் திறமையின்மையால் கட்சி மட்டுமின்றி ஆட்சியும் பாதிக்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கும்.
இவற்றை நோக்கும்போது, அடுத்த கட்டத் தலைவர்களை - எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது, தொழிற்கூடமாக இருப்பினும் - சேவை நிறுவனமாக இருப்பினும் - அரசியல் கட்சியாக இருப்பினும், எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்று உணர முடிகிறது.
இத்தகைய முக்கிய பொறுப்பு, ஒரு நிறுவனத்திற்கோ - அரசியல் கட்சிக்கோ மட்டுமல்ல. இவை இரண்டையும்விட ஒவ்வோர் ஆசிரியருக்கும் - பெற்றோருக்கும் அதிகமாக உள்ளது. இவர்கள்தான், நாட்டுக்கு நல்ல குடிமக்களை - நல்ல தலைவர்களை உருவாக்க, சரியான அடித்தளம் அமைப்பவர்கள்.
 

நன்றி தினமணி 05.10.2017
உதவும் உள்ளங்கள் விழா
NFTE BSNL ஈரோடு மாவட்டம்
உதவும் உள்ளங்கள் சார்பாக உதவி வழங்கும் விழா
                       நாள் 11.10.2017
               காலம் காலை 11 மணி 
இடம் தோலைபேசி நிலையம் சத்தியமங்கலம்
அனைவரும் வருக
ஆதரவு தருக
இயன்றதைத் தரும்

ஈகை உள்ளத்துடன் வருக 

Saturday, 30 September 2017

வாழ்த்துகிறோம்
இன்று இலாகா பணி நிறைவு பெறும்,
தமிழகத்தில் NFTE இயக்கத்தின் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த
தோழர்கள்
பாலகுரு, திருச்சி
சென்னகேசவன், வேலூர்

ஆகிடோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
தோழர் சுப்ரமனியன்

"சத்தி சுப்பு" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய சத்தியமங்கலம் கிளைச் செயலர் தோழர் சுரமணியன் இன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

மிகச்சிறந்த
ஒரு முன்மாதிரியான
கிளைச் செயலராக
இயக்கத்தின் மீது அளவற்ற பற்றுடனும் விசுவாசத்துடனும்  செயல்பட்டவர் அருமைத் தோழர் சுப்ரமனியன்

இவரது பணிநிறைவுக்காலம்
நலமுடனும்,
மகிழ்வுடனும்
பயனுடனும்

அமைய வாழ்த்துகிறோம்.
வாழிய பல்லாண்டு

இன்று பணி ஓய்வு பெறும்

தோழர் A.சுப்ரமணியன் OS
தோழியர் S.உஷா OS
தோழர் G.ராஜேந்திரன் JE
தோழர் R.குணசெகரன் TT

ஆகியோர் நலமுடனும்
 மகிழ்வுசனும்  

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
5.3

01.10.2017 முதல்
விலைவாசிப்படி

5.3 சதம் உய்ரும்.

Wednesday, 27 September 2017

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்

"பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது."
“பொருளாதாரத்திற்கு அருண் ஜேட்லி செய்ததை நான் இப்போது கூட வாயைத் திறக்காமல் இருந்தால் நான் எனது தேசியக் கடமையிலிருந்து தவறுபவனாகி விடுவேன், நான் கூறப்போவது பாஜகவில் உள்ளவர்களுக்கே நன்கு தெரிந்ததுதான், ஆனால் இவர்கள் பயத்தின் காரணமாக வெளிப்படையாகப் பேசுவதில்லை” என்று ஆரம்பித்து நடப்பு பொருளாதாரக் கொள்கைகளின் முகமூடியைக் கிழித்து எறிகிறார்.
இன்று இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம் என்ன?  என்று பலரும் தங்கள் கருத்தைக் கூறிவருகையில், அத்தகைய எதிர்க்கருத்துகளை ஊர்ஜிதம் செய்யும் விதமாக உற்பத்தித் துறை, கட்டுமானம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறைகள், ஏற்றுமதி அனைத்தையும் விட விவசாயத்தின் நிலை ஆகியவை கடும் சரிவுக்குள்ளாகி எண்ணற்ற லட்சக்கணககானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்"

"பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடும் முறை 2015-ம் ஆண்டில் நடப்பு அரசினால் மாற்றியமைக்கப்பட்டது என்றும் இந்தக் கணக்கீட்டின் படி கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.7% என்று நிர்ணயிக்கப்பட்டது"
2015-க்கு முன்பாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணக்கிடும் முறைப்படி பார்த்தால் கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.7% தான் என்று ஒரே போடாகப் போட்டார்.
புதிய ஜிஎஸ்டியின் கீழ் வரி உள்ளீட்டு வரவு (input tax credit) தற்போது ரூ.95,000 கோடி என்றால் அந்தந்த தொழிற்துறையினர் கட்டிய கூடுதல்வரியை அரசு அவர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை மிகப்பெரிதான ரூ.65,000 கோடியாக உள்ளது"  ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஆய பயன் என்ன என்று சூசகமாகக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும்,  2019 மட்டுமல்ல 2023 வரை பாஜகவை அசைக்க முடியாது என்று அமித் ஷா உள்ளிட்டவர்கள் கூறி வரும் நிலையில்  "அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் பொருளாதாரம் மீள்வது சாத்தியமல்ல" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஏழ்மையை மிக அருகில் இருந்து தான் பார்த்ததாகவும் அதனால் ஏழ்மை பற்றி தனக்கு அதிகம் புரியும் என்று பிரதமர் மோடி வானொலி உரை  உள்ளிட்ட உரைகளில் கூறிவருவதைக் கண்டு பலரும் நெகிழ்ந்துள்ள நிலையில்
"அனைத்து இந்திய மக்களும் ஏழ்மையை அருகில் இருந்து நெருக்கமாகப் பார்ப்பதற்காக ஓவர்-டைம் பணியாற்றி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இப்படியெல்லம் சொல்வது வேறு யாருமல்ல.
முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா.

(நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.09.2017)

Monday, 25 September 2017

NFTE தூத்துக்குடி
மாவட்ட மாநாடு
25.09.2017ல்
NFTE தூத்துக்குடி மாவட்ட  மாநாடு
சிறப்புடனும்
எழுச்சியுடனும்
நடைபெற்றது.

ஒற்றுமையாய் நடைபெற்ற சிறப்பான மாநாடு.
கீழ்க்கண்டோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் தோழர் தங்கவேலு
செயலர்  தோழர் பாலக்கண்ணன்
பொருளர் ஜான்சன்சாமுவேல்
ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.


செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு
24.9.2017ல்
விழுப்புரத்தில்
NFTCL கடலூர் மாவட்ட  மாநாடு
எழுச்சியுடனும் சிறப்புடனும் நடைபெற்றது.


தோழர்கள் மதி, ஜெயராமன், பாபு, அசோகராஜன், மாரி, ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி சிறப்பித்தனர்.

கீழ்க்கண்டோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் தோழர் அரிகிருஷ்ணன்
செயலர்  தோழர் மஞ்சினி
பொருளர் மணிகண்டன்
ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.

செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
வெல்லட்டும்
சிறக்கட்டும்
இன்று
25.09.2017 நடைபெறும்
NFTE தூத்துக்குடி மாவட்ட மாநாடு
சிறப்பாகவும்,
வெற்றிகரமாகவும்
 நடைபெற

வாழ்த்துக்கள்.

Saturday, 23 September 2017

நேற்று கேட்ட செய்தி

2040ஆம் ஆண்டில் நிலவில் 100 பேர் வ்சித்து வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சர்வதேச அறிவியலாளர்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்.
2030ஆம் ஆண்டு 10 அறிவியலாளர்கள் நிலவுக்குச் செல்ல உள்ளனராம். பவீடு கட்டுதல், விவசாயம் செய்தல் மற்றும் பல பணிகளை அந்த 10 பேர் செய்வார்களாம். 10 ஆண்டுக்களுக்குள் பணி முடித்து 2040ஆம் ஆண்டு முதல் 100 பேர் நிலவில் வாழ்க்கை நடத்துவார்களாம்.


மத்திய சங்க செய்தி

BSNL அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம்
(Management Committee) நடைபெற்றது.

01.01.2017 முதல் BSNL ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு வழங்குவதற்கான முடிவை அக்குழு எடுத்துள்ளது.

தற்போது பெறும் அலவண்ஸ்களில் கூடுதல் இருக்காது.

இந்த முடிவை மேலும் ஒரு  குழு ஆ ராயும்.

பின்னர் BSNL வாரியத்தின் ஒப்புதலுக்கு
அனுப்பாப்படும்.

அதன் பின் DOT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
************************************************************
நமது கருத்து

மேலே  கூறப்பட்ட  அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னரே இறுதியான முடிவுகள் வரும்.

இதுவரை BSNLEU  வின் குரல் ஒலித்த வித்த வேறு.
தற்போது ஒரு நாள் வேலைநிறுத்தத்தின் விளைவே இந்த முடிவு என்கிறது அந்தக் குரல்.


இப்படியும் சில பச்சோந்திகள்...
வாழ்த்துக்கள்

நாளை 24.09.2017
நடைபெறவுள்ள
கடலூர் மாவட்ட
NFTCL மாநாடு

சிறக்க வாழ்த்துகிறோம்.

Thursday, 21 September 2017

 

ஜியோவுக்கு சாதகமான டிராயின் முடிவு..

ஜியோ  நெட்வொர்க் சேவை அறிமுகம் ஆனதில் இருந்தே
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையில் இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
ஜியோ மற்றும் டொக்கோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் இண்டர்கனக்ட் கட்டணங்களை நாங்கள் அளிக்க மாட்டோம், அதே போன்று எங்களது போட்டி நிறுவனங்களும் அதனை அளிக்கத் தேவையில்லை என்று கூறிவந்தன.

தற்போது அதற்கான கட்டணத்தைக் குறைத்து டிராய் அறிவித்து உள்ளது.

முன்பு ஒரு அழைப்பிற்கு 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜியோ    

போட்டி நிறுவனங்களிடம் இண்டர்கனக்ட் கட்டணங்களை அளிக்க மாட்டோம் என்று கூறி வந்த ஜியோ நிறுவனம் இது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பயன் அளிக்கும் என்பதால் முழுமையாக நீக்க வேண்டும் என்று டிராய் கோரிக்கை வைத்து இருந்தது.

டெர்மினேஷன் கட்டணங்கள் 2020 ஜனவரி 1 முதல் உள்நாட்டு அழைப்புகளுக்கு முழுமையாக நீக்கப்படும் என்றும் டிராய் தெரிவித்தது.
பாபு தாரபாதா உரை
1921 செப்டம்பர் 21. லாகூர். தபால் ஊழியர் சங்க அகில இந்திய மாநாடு. அதன் ஒப்பற்ற தலைவர்  பாபு தாரபாதா
தலைமை உரையாற்றினார். அவரின் அந்த பேச்சக்காக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்படி என்ன பேசிரிட்டார்?

" தொழிலாளர்கள் பிச்சைகாரர்கள் அல்ல. அவர்களே இந்த பூமியின் உயிர்ச் சத்து. உழைப்பின் முத்திரை விழுந்தாலன்றி எந்தப் பொருளும் செல்வமாவதில்லை. செல்வம் அனைத்தும் படைப்பவர்கள் அவர்களே. தொழிலாளர்கள் இல்லை என்றால் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைப்பு எங்கிருந்து வரும்?
தொழிலாளி வேலை செய்வதை நிறுத்தினால் என்ன ஆகும்
ஒரு 
தானிய மணி கூட விளையாது. ஒரு முழத் துணி நெய்யப்படாது. ஒரு செங்கல் இடம் பெயராது."
அநீதி கண்டு ஆர்பரித்து போராடாது அநீதி களைய முடியாது என்பத தாரக மந்திரமானது.
தபால் தந்தி ஊழியர் இயக்கம் வீரமிக்க இயக்கமாக இருந்ததற்கு அடித்தளம் அமைத்த தலைவருக்கு தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.


நன்றி தோழர் மாலி

Wednesday, 20 September 2017

அஞ்சலி
தாராபுரத்தில் டெலிகாம் டெக்னிசியனாக பணியாற்றி வந்த
தோழர் V.ராஜ்
உடல்நலகுறைவால் இன்று காலமானார்.

அவரது  மறைவுக்கு நமது மாவட்டச் சங்கம் சார்பாக இதயபூர்வ அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.