NFTECHQ

Thursday, 7 April 2016

வழி காட்டும் குழு
06.04.2016 அன்று NFTE,TEPU,SEWA BSNL அமைய்புகளின் ஈரோடு மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

NFTE கூட்டணியின் வெற்றிக்கு வித்திடும் கூட்டமாக இது அமைந்தது.

மாவட்ட அளவில் வழ்காட்டும் குழு அமைக்கப்பட்டது.
அகில இந்த்ய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர் என முடிவு செய்யப்பட்டது.

வழிகாட்டும் குழு
1.தோழர் ஆனந்தராஜ்
அகில இந்த்திய அமைப்புச் செயலர் TEPU
2.தோழர் பூசப்பன் மாநில உதவிச்செயலர் TEPU

3.தோழர் யாசின்
மாநில உதவிச்செயலர் NFTE

4.தோழர் பழனிசாமி மாநில அமைப்புச் செயலர் SEWA BSNL

5.தோழர் சதாசிவம் மாவட்டச் செயலர் SEWA BSNL

6.தோழர் ஷாஜகான் மாவட்டச் செயலர் TEPU

7.தோழர்  பழனிவேலு மாவட்டச் செயலர் NFTE

8.தோழர் காசிராஜன் TEPU

9.தோழர் குமார் NFTE

10.தோழர் மோகன் மாவட்டத் தலைவர் TEPU

ஆகியோர் வழிகாட்டும் குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். 
முடிவுகள்

NFTE கூடணியின் வெற்றிக்கு எல்லா முயற்சிகளையும் ஒன்றுபட்டு ஒரு முகமாய் உழைத்திட  வேண்டும்.

மாவட்டம் முழுமையும் உள்ள ஊழியர்கள் அனைவரையும் சந்திப்ப்தற்கான சுற்றுப்பயணத்திட்டம் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு பகுத்திக்கும் வழிகாட்டும் குழுக்களை அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

09.04.2016 முதல் சுற்றுப்பயனத்தைத் துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.

மகிழ்ச்சி தரும் துவக்கம்.

மன நிறைவான துவக்கம்.

இணைந்து பணியாற்றி இணைந்த கரங்களின் வெற்றியை உறுதி செய்வோம்.

Wednesday, 6 April 2016

தோழர் நாகராஜன் பணி சிறக்கட்டும்

மாவட்ட உதவிச் செயலராக சிறப்பாகவும், கடமை உணர்ந்து விசுவாசத்துடன் பணியாற்றிய தோழர் மௌனகுருசாமி  பெருந்துறை கிளையின் செயலராக தேர்வு செய்யப்ப்பட்டார்.

இதனால் தானே மனம் உவந்து  
மாவட்ட உதவிச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்தார். இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது அபூர்வமானது.

அவரது பதவி விலகல் வேண்டுகோள் ஏற்கப்பட்டு தோழர் நாகராஜன் மாவட்ட உதவிச் செயலராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தோழர் நாகராஜனின் அனுபவமும், திறமையும் மாவட்டச் சங்கத்தின் செயல்பாட்டுக்கு செழுமை சேர்க்கும்.

இந்த நிகழ்வுகள் 02.04.2016 அன்று நடைபெற்ற மாவட்டச் செயற்குழுவில் நடைபெற்றது.

தோழர் மௌனகுசுசாமிக்கு நன்றி.  
தோழர் நாகராஜன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
பெருமித்ம் தந்த

பெருந்துறை செயற்குழு

02.04.2016 அன்று  மாவட்டச் செயற்குழு
பெருந்துறை தொலைபேசி நிலையத்தில் மிக்ச் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்து நிர்வாகிகளும் கிளைச் செயலர்களும் முன்னணித் தோழர்களும் பங்கேற்றனர்.

செயற்குழுவை தோழர் யாசின் துவக்கி வைத்து உரையாற்றினார்.

TEPU  இயக்கத்தின் முன்னோடித் தலைவர்  தோழர் காசிராஜன், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் ஆனந்தராஜ், மாவட்டச் செயலர் தோழர் ஷாஜகான் SEWA BSNL  அமைப்பின் மாவட்டச் செயலர் தோழர் சதாசிவம், தோழர் மாலி, தோழர் செல்வராஜன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையும் வெற்றிக்கான ஆலோசனைகளையும் வழங்கி உரையாற்றியது மிகுந்த நம்பிக்கை அளித்தது.

செயற்குழு முடிவுகள்

தேர்தல் செலவுக்கான நிதி பெறும் பணியை 10.04.2016க்குள் முடித்திட வேண்டும்.

மாநில மாநாட்டு நிதி வசூல் பணியையும் விரைந்து முடித்திட வேண்டும்.

பூத் கமிட்டிக்கான பொறுபாளர்கள் தங்கள் பணியை சிறப்புடன் செய்திட வேண்டும்.

ஊழியர்கள அனைவரையும் சந்தித்து NFTE இயக்கத்துக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிட வேண்டும்.

கூட்டணி அமைப்புகளுடன் மனம் ஒன்றி இணைந்து பணியாற்றிட வேண்டும்.


நம்பிக்கை தந்திட்ட மாவட்டச் செயற்குழு

இந்த செயற்குழுவை சிறப்புடன் நடத்த உதவிட்ட பெருந்துறை கிளைச் செயலர் தோழர் மௌனகுருசாமி, கிருபாகரன், சம்பத் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின்  நண்றியும் பாராட்டுக்களும்.

Tuesday, 5 April 2016

பெருமை சேர்த்திட்ட்ட

பெருத்துறை கிளை மாநாடு

02.04.2016  அன்று பெருந்துறை கிளை மாநாடு மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

தோழர் டேணியல் கிருபாகரன் தலைமையில்,
மாநாடு சிறப்புடன் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு துவக்கவுரையாற்றினார்.

மாநாட்டை SNEA சார்பாக தோழர்கள் செல்வசுதர்சனன்,  குணாளன் BSNLEU சார்பாக தோழர் மணி ஆகியோப்ர வாழ்த்துரை வழங்க்கினர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                         தோழர் டேனியல் கிருபாகரன் TM
துணைத்தலைவர்        தோழர் ஜெகனாதன் TM

செயலர்                           தோழர்  மௌனகுருசாமி TTA

உதவிச் செயலர்          தோழர் சோமசுந்தரம் TM

பொருளர்                        தோழர் நல்லசாமி TM

உதவிப்பொருளர்     தோழர் ரத்தினவேல் TM

அமைப்புச் செயலர்கள்
1.தோழர் தோழர் மகேந்திரன் TM
2.தோழர் அர்ஜுனண் TM


தணிக்கையாளராக தோழர் பெருமாள்சாமி TM
நியமிக்கப்பட்டர்.


புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

வாழ்த்துக்கள்

தோழர் S.தங்கவேல் sss அவர்கள் 01.04.2016 அன்று விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

BSNLEU  இயக்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலர். பழகுவதற்கு இனிய தோழர்.
அவரது பணி ஓய்வுக் காலம் நலமுடனும் மகிழ்வுடனும் அமைய வாழ்த்துகிறோம்.

Friday, 1 April 2016

முட்டாள்களாகும் தினம்

ஏப்ரல் ஒன்று.
வழக்கமாக முட்டாள்கள் தினம் என்று சொல்வார்கள்.
ஆனால் தோழர் அபிமன்யூ 2016 ஏபரல் ஒன்றை
பி.எஸ்.என். எல் ஊழியர்களை முட்டாள்களாகும் தினமாக மாற்றியுள்ளார்.
ஆறு வருடங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் பொழுதைக் கழித்து, பொன்னான போனசைப் பறிகொடுத்தது BSNLEU.
லாபமோ நட்டமோ 10000 ரூபாய் போனஸ் உறுதி செய்து சாதனை படைத்து விட்டோம் என்று சொல்லி ஊழியர்களை ஏமாற்றியது BSNLEU.
உற்பத்தியுடன் இணைந்த போனசை லாபத்துடன் கூடிய இன்செண்டிவ் ஆக மாற்றி உடன்பாடு கண்டு துரோகம் இழைத்தது BSNLEU.
உயிரிழந்த போன்சுக்கு மீண்டும் உயிர் கொடுக்க் வைத்த்து NFTE இயக்கம்தானே.

போன்சுக்காக கமிட்டி அமைக்க வைத்தது NFTE இயக்கம்தானே.

2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் போனசுக்காக இயக்கம் நடத்தியது NFTE இயக்கம் மட்டும்தான்.
இனி போனஸ் என்பதை எவராலும் பெற முடியாது என்று சென்னையில் பேசியது அபிமன்யூ அல்லவா?
30.03.2016 போன்ஸ் கமிட்டி கூட்டத்தைப் புறக்கணித்தது யார்?
புறக்கணித்தது மட்டுமல்லாமல் வாக் அவுட் செய்து விட்டோம் என்று வாய் கூசாமல் பொய் சொன்னது யார்?
புறக்கணித்தது மட்டும் அல்லாமல் NFTE இயக்கம் மீது பழி சுமத்தும் தோழர் அபிமன்யூ அவர்களே உண்மை வெளி வரும் போது உங்கள் சாயம் வெளுக்கும்.
போனசே கிடையாது என்று சொன்ன நிர்வாகத்தை போனஸ் தருவோம் என்று சொல்ல வைத்த NFTE இயக்கத்தின்  பெருமையை பொய்களால் குலைக்க முடியாது.
போனஸ் என்பது மீண்டும் கிடைக்கும் என்ற நிலை உருவானதை, சகித்துக் கொள்ள முடியாமல்  ஆர்ப்பாட்டம் அதுவும் ஏப்ரல் ஒன்று  அன்று அறிவித்து ஊழியர்களை முட்டாளாக்கும் முயற்சியை மே 10 அன்று ஊழியர்கள் முறியடிபார்கள் 

Thursday, 31 March 2016

வாழிய பல்லாண்டு
31.03.2016 அன்று பணி ஓய்வு பெறும்

1..தோழர் M.. மணிவாசகம் STS
2.தோழர் C.தினகரன் SSS
3.தோழர் M.குருசாமி TECH SUPERVISOR
4.தோழர் K. ஜனகராஜன் TM
5.தோழர் R.கிருஷ்ணமூர்த்தி TM
6.தோழர் D.குணசேகரன் TM
7.தோழர் M.மாணிக்கம் TM
8.தோழர் A.கதிர்வேல் TM

ஆகிய தோழர்கள் நலமுடனும், மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்..
போனசில் பொய் சொல்லாதீர்

30.03.2016 அனறு போனஸ்
சாரி
இன்செண்டிவ் கமிட்டி கூட்டம் நடைபெற்ற்து.
உயர் அதிகாரிகள் பங்கேறறனர்.

தொழிற்சங்கம் சார்பாக நமது இயக்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் மட்டும் பங்கேற்றார்.
மற்றோரு உறுப்பினரான தோழர் அபிமன்யு பங்கேற்கவில்லை. ஏதோ   ஒரு நொண்டிச் சாக்கைக் கூறி பங்கேற்காமல் தவிர்த்து விட்டார். அவருக்கு எனன தவிப்போ நாம் அறியோம்.

நிர்வாகம் கொடுப்பதாகக் கூறிய தொகை குறைவாக  இருப்பதாக தோழர் இஸ்லாம தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

இத்தோடு கூட்டம் நிறைவுற்றது.

ஆனால் தோழர் அபிமன்யு கூட்டத்திலிருந்து வாக் அவுட் செய்து விட்டதாக சிலர் சொல்கின்றனர்.

பாவம் அவ்ர்கள்.

ஏனெனில் போனஸ் என்ற வார்த்தையையே வாக் அவுட்  செய்ய வைத்து லாபத்துடன் கூடிய இன்செண்டிவ் என்று ஒப்பந்தம் போட்டு அதையும் காலி செய்தவர்கள் கூறும் பொய்க் கதைகளை நம்ப வேண்டாம் என்பதே நமது அன்பு வேண்டுகோள்.  


பரவசம் தந்திட்ட

பவானி கிளை மாநாடு

30.03.2016  அன்று பவானி கிளையின் மாநாடு மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

தோழர் ரகுநாராயணனின் சீரிய தலைமையில்,
கிளைச் செயலர்
தோழர் M. நாஜகராஜனின் வரவேற்புரை,
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலுவின் காலத்திற்கேற்ற எழுச்சிமிகு துவக்கவுரை,
மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள் நல்லுசாமி, புண்ணியகோட்டி, மாவட்ட உதவித் தலைவர் தோழர் ரங்க்கனாதன்  அந்தியூர் கிளைச் செயலர் தோழர் சந்தானம ஆகியோரின் வாழ்த்துரை,
நல்ல ஆண்டறிக்கை,
சரியான வரவு செலவுக் கணக்கு,
ஈரோடு எக்ஸ்டர்னல் கிளைச் செயலர் தோழர் கதிர்வேலு கவிந்தப்பாடி கிளைச் செயலர் தோழர்
செங்கோட்டையன் ஆகியோர் பங்க்கேற்பு என நமக்கே உரிய சிறப்புக்களுடன் மாநாடு சிறப்புடன் நடைபெற்ற்து.

TEPU  சங்க்கத்தின் மாவட்ட இணைச் செயலர் தோழர் சுப்ரமணியம் அவர்களின் வாழ்த்துரையும் வாக்குரையும் முத்தாய்ப்பாக அமைந்தது.

மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் பயனுள்ள சிறப்புரை தந்தார்.


மாநாட்டில் புதிய நிர்வாகிகள்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                தோழர் ரகுநாராயப்ணன் STS
துணைத்தலர்        தோழர் பரமசிவம் TM

செயலர்                  தோழர்  C. நாகராஜன் TM

உதவிச் செயலர்  தோழர் ரவிக்குமார் TTA

பொருளர்                 தோழர் சுப்ரமணியன் TM

செயற்குழு உறுப்பினர்கள்

1.தோழர் ராமகிருஷ்ணன் SRTOA
2. தோழர் மருதமுத்து TM


தணிக்கையாளராக தோழர் நல்லசாமி TM
நியமிக்கப்பட்டர்.

புதிய கிளைச்செயலர்தோழர் C நாகராஜனின்
தன்னம்பிலக்கையுடன் கூடிய உரை நம்பிக்கை அளித்தது.

தோழர் பரமசிவம் நன்றியுரை தந்தா.ர் நல்ல உரையும் தந்தார்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.


Wednesday, 30 March 2016

வெற்றிக்கு வித்திடும் ஏப்ரல் 2

02.04.2016 அன்று  
பெருந்துறை
தொலைபேசி நிலையத்தில்
பெருந்து4றை கிளை மாநாடு.


மாவட்டச் செயற்குழு.

கூட்டணிச் சங்கத்  தலைவர்கள் பங்க்கேற்பு.

வெற்றிக்கும், வெற்றிகரமான செயல்பாட்டுக்கும் திட்டமிடல்.

இப்படி முக்கிய  பணிகளும், சிறப்புகளும் நிறைந்த நிகழ்வில் பங்க்கேற்க வாரீர்.
SEWA  BSNL  அகில இந்திய மாநாடு

28.03.2016 அன்று  SEWA  BSNL  அமைப்பின் அகில இந்திய மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

மாநாட்டில் தலைவராக தோழர் பெருமாள்  அவர்களும் பொதுச்செயலராக தோழர் ராம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

செயல்பாடு சிறப்புடன் பரிணமிக்க வாழ்த்துகிறோம்

Tuesday, 29 March 2016

இரங்கல்

மது மாநிலச் சங்க அலுவலகத்தின் பராமரிப்பாளராகப் பணியாற்றிய தோழன் கார்த்திகேயன் 27.03.2016 மாலை அகால மரண்மடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

அந்த தோழனின் மறைவுக்கு நமது அஞ்சலி.


தோழன் கார்த்திகேயனின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, 23 March 2016

பகத்சிங்

இன்றும் இளையவர்களின்
ஆதர்ச சக்தியாக விளங்கும்
தோழன் பகத்சிங்கின்
85 வது நினைவு தினம்.
இன்று.


பவானி கிளை மாநாடு
நாள் 30.03.2016
தலைமை
தோழர் ரகுநாராயணன்

துவக்கவுரை

தோழர் பழனிவேலு
(மாவட்டச் செயலர்

சிறப்புரை

தோழர் யாசின்
மாநில உதவிச் செயலர்

வாழ்த்துஎரை

முன்னணித் தோழர்கள்

அனைவரும் வருக

Tuesday, 15 March 2016

ஒரு பிரச்னை தீர்வு

ஊழியர்களுக்கு CUG வசதியுடன் வழங்க்கப்ப்ட்டுள்ள மாதம் 200 ரூபாய்க்குப் பேசிக் கொள்ளும் ப்ரிபெய்டு இணைப்பில் இனி மாதம் 50 ரூபாய்க்கு மற்ற நிறுவனங்களின் மொபைல் இணைப்புகளுக்கும் பேசிக் கொள்ளலாம்.
இப்பிரச்னைக்கு தீர்வு கண்ட நமது மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்க்ள்  

Saturday, 12 March 2016

கனிந்த உடன்பாடு

நமது உள்ளம் மகிழும் வண்ணம் TEPU மற்றும் NFTE இயக்கங்களுக்கிடையில் 11.03.2016 அன்று உடன்பாடு உருவாகியுள்ளது.

உடன்பாட்டு அம்சங்கள்

ஏழாவது உறுப்பினர் சரிபார்ர்ப்புத் தேர்தலல் NFTE இயக்கத்துக்கு TEPU  இயக்கம் தனது முழு ஆதரவையும் நல்கும்.

தேர்தலுக்குப் பின்னும் கூட்டுச் செயல்பாடு தொடரும்.
இந்த உடன்பாட்டுக்கு வித்திட்டவருக்கும்,

உடன்பாட்டைக் கனிய வைத்த தோழர்களுக்கும் நன்றியும் பாராட்டும்.
சிறப்புச் செய்தி
15.03.2016 அன்று சேலத்தில் நடைபெறவுள்ள

நமது இயக்கத்தின் சிறப்பு நிகழ்வுக்கு சிறப்பு சிறு விடுப்பு (ஸ்பெஷல்  கேசுவல் லீவ்) வழங்க மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


FROM







TO

THE  GENETAL MANAGER
BSNL,ERODE

Respected Sir,

Sub: Request for sanction of Special Casual Leave- Reg

It is requested to kindly sanction ONE DAY SPECIAL CASUAL LEAVE on 15.03.2016 to attend the seminar on “REVENUE AUGMENTATION & SWAS” to be held at SALEM on 15.03.2016 organised by Circle Union of NFTE BSNL Tamilnadu Circle.

Thanking you

Station:                                              Yours faithfully,
Date:
 

Thursday, 10 March 2016

வெற்றிக்கு வித்திட்ட

மற்றும் ஓர் முடிவு
அங்கீகாரத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் கொடுத்திருந்த NFTBE சங்கம்  போட்டியிலிருந்து விலகுவதாக நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்துள்ளது. மேலும் தனது ஆதரவை NFTE
இயக்கத்துகு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதற்காக தோழர் மதிவாணன் கடந்த 12.02.2016 அன்று NFTBE இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் கோஹ்லி அவர்களைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.


இந்த் முடிவுக்கு முயற்சித்த
தோழர் மதிவாணன் அவர்களுக்கு
பாராடுக்களும் நன்றியும்.
JTO காலியிடங்க்கள்

22.05.2016 அன்று நடைபெறவுள்ளது. JTO தேர்வுக்கான திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்கள்
மாநில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம்   361
OC                  284
SC                      36
ST                      41


Tuesday, 8 March 2016

மகளிர் தின வாழ்த்துக்கள்


மார்ச் 8
சர்வதேச மகளிர் தினம்.

தந்தை, தாய், கணவன், மாமனார், மாமியார்,குழந்தைகள் இவர்களுக்கு ஒரு சேவகியாக மட்டுமே வாழ வேண்டும் என்று மதம் சொல்கிறது. எனவே அப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்க்கையை வாழ்ந்தனர்.

அனைத்துத் தடைகளையும் தாண்டி
இன்று
பட்டங்கள் பெற்று
சட்டங்கள் இயற்றி
மண்வெளியில் மட்டுமின்றி
விண்வெளியிலும்
சாதனைகள் படைத்து சரித்திரம் படைக்கும் நிலைக்கு மகளிர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

இந்த அளவுக்கு மகளிர் முன்னேற்றம் பெறுவதற்கு இடதுசாரி இயக்கங்களும்,  முற்போக்கு சிந்தனையாளர்களும் ஆற்றிய் பங்கு மகத்தானது.

மகளிர் மேலும் முன்னேற வேண்டும் என மனதார
வாழ்த்துகிறோம்.

Saturday, 5 March 2016

தேர்வுகள் அறிவிப்பு

JTO மற்றும் JAO தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ் மாநில நிர்வாகம் 04.03.2016 அன்று அறிவித்துள்ளது.

தேர்வு 22.05.2016 அன்று நடைபெறும்.

JTO    தேர்வுக்கு 2013-14 ஆம் ஆண்டுக்கு 541 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளண.


JAO    தேர்வுக்கு 95 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளண.
வாழ்த்துக்கள்
தோழியர் ஜெயலட்சுமி
தோழியர் தெய்வானை
தோழியர் மகேஸ்வரி
தோழியர் உதயா
தோழியர் ஈஸ்வரி

ஆகியோர் பரிவு அடிப்படையில் பணி நியமனம் பெற்று பணியில் இணைந்துள்ளனர்.


தோழியர்களுக்கு நமது வாழ்த்துகள்..

Tuesday, 1 March 2016

துவங்க்கியது வெற்றியின் பயணம்

இன்று மார்ச் 1. 2016.
பாட்னாவில் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் நமது மத்திய சங்கத்தின்   விரிவடைந்த செயற்குழு துவங்கியது.
TEPU சங்க்கத்தின் பொதுச்செயலர் தோழர் சுப்புராமன்,
SEWA BSNL பொதுச் செயலர் தோழர் ராம்,
BSNLMS பொதுச்செயலர் தோழர் சுரேஷ்குமார்
NFTBE பொதுச் செயலர் தோழர் கோஹ்லி
ஆகியோர் பங்க்கேற்று உரையாற்றினர்.

NFTBE  இயக்கத்தை NFTE பேரியக்கத்துடன் இணைப்பது என்ற முடிவை தோழர் கோஹ்லி அறிவித்தார்.

SEWA  BSNL    வரும் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் NFTE இயக்கத்தை ஆதரிக்கும் என்ற முடிவை அதன் பொதுச்செயலர் தோழர் N.D.ராம் அறிவித்தார்.

BSNL மற்றும் அதன் ஊழியர் நலனில் அக்கறை உள்ள இயக்கங்க்களிலிருந்து இது போன்ற அறிவிப்புகள் தொடரும்.

செயற்குழு தொடர்கிறது.