NFTECHQ

Friday, 15 August 2014

தில்லையாடி வள்ளியம்மை

காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டிய தில்லையாடி வள்ளியம்மை
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதுகெலும்பு அண்ணல் காந்தியடிகள். காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டியவர் தில்லையாடி வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக பல பரிமாணங்களில் இந்திய சுதந்திர தாக்கத்திற்கு வித்திட்டவர் தில்லையாடி வள்ளியம்மை. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் உயிர் விட்ட முதல் பெண்மணியும் அவரே.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி முதலியார். நெசவுத் தொழிலாளியான இவர் பிழைப்புத் தேடி தென்னாபிரிக்காவின் ஜோகனாஸ்பர்க் சென்றார். அங்கு 1898-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி பிறந்தவர் வள்ளியம்மை.
கனவுகளோடு தென்னாபிரிக்கா சென்ற இந்தியர்கள் வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். தனியார் நிறுவனம் ஒன்றின் வழக்குகளை முடிக்க அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்த காந்தியடிகள், இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு மனம் வெதும்பினார். இதனை எதிர்த்து போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத்தரவும் துணிந்தார்.
இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் சிறுமி வள்ளியம்மை தவறாமல் கலந்துக்கொண்டார். காந்தியடிகளின் சொற்பெழிவுகளால் பெரிதும் கவரப்பட்ட வள்ளியம்மை பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படையில் அங்கமானார்.
தென்னாபிரிக்காவிற்கு வரும் இந்தியர்களை தடுத்து நிறுத்த ஆங்கிலேயர்கள் கடுமையான சட்டங்களை அமல்ப்படுத்தினர். இதனை எதிர்த்து 1913 -ம் ஆண்டு, ஜோகனாஸ்பர்க்கில் நடைபெற்ற போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வள்ளியம்மை.

போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறையில் எண்ணிலடங்கா கொடுமைகளை அனுபவித்தார் வள்ளியம்மை. சுகாதாரமற்ற சூழல் வள்ளியம்மையை நோய் தாக்குதலுக்கு உட்படுத்தியது. அபராத தொகையை கட்டி விட்டு சிறையிலிருந்து செல்லும் படி ஆங்கிலேயர்கள் கூறியதை பொருட்படுத்தாத வள்ளியம்மை, சிறையிலேயே உயிர் விடவும் துணிந்தார்.
வள்ளியம்மையின் உடல் நிலை மோசமாவதை கண்ட ஆங்கிலேயே போலீசார், அவரது தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவித்தனர். விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த வள்ளியம்மை என்னும் தீபம் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து அணைந்து போனது.
இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம் என அண்ணல் காந்தியடிகள் மனம் உருகினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயர்நீத்த முதல் பெண் போராளி ஒரு தமிழர் என்பது நமக்கும் பெருமை தானே.


சுதந்திரம்

நமது தேசத்தின் விடுதலைக்கு வயது 68
மக்கள் ஜனநாயகம் நிலைத்து நீடிப்பது பெருமைக்குரியது.
சமூக ஜனநாயகமும் முழுமையாக மலர்ந்தால் பெருமை கூடும்

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் 

Thursday, 14 August 2014

ஆகஸ்ட் 14


ஆகஸ்ட் 14  இன்று உலக உறுப்பு தான தினம்
உலகம் முழுவதும் இன்று உடல் உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாற்று உறுப்புகள் வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது.
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் அளிக்கலாம் என்ற போதிலும், 1954 ஆம் ஆண்டு முதல் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. விபத்தில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தால், அந்த நபருடைய நெருங்கிய உறவினரின் ஒப்புதலின் பேரின் 25 வகையான உறுப்புக்களையும், திசுக்களையும் தானமாக பெற்றுகொள்ளலாம்.
 தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு, மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு உறுப்புகளை தானமாக அளிப்போரின் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்துள்ளதாக, திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 14, 1947, பாகிஸ்தான் சுதந்திரம்
சுதந்திரப் போராட்டத்தின்போது, மத வேறுபாடுகள் இன்றி தொடக்கத்தில் ஒற்றுமையுடன் போராடிய இந்தியர்களிடையே 1910-க்குப் பிறகு, தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் 1940-ம் ஆண்டு லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில்தான், முகமது அலி ஜின்னா இரு நாட்டுக் கொள்கையை முதன் முதலாக அறிவித்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைய, சர்வதேசச் சூழலும் சுதந்திரம் அளிக்க வேண்டிய நெருக்கடியை பிரிட்டனுக்கு ஏற்படுத்தியது.
அதன்படி, 1947-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, மௌன்ட் பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடாக மலர்ந்தது.

Wednesday, 13 August 2014

கைவிளக்கேந்திய காரிகை



 ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்த தினம்
 1820-ல் இத்தாலியின் ஃப்ளாரன்ஸில் பிறந்த நைட்டிங்கேல், நவீன செவிலியியல் முறையை உருவாக்கியவர். 1853-ல் ஏற்பட்ட கிரிமிய போரின்போது, காயமடைந்த வீரர்களுக்கு இரவு நேரத்தில்கூட கையில் விளக்குடன் சென்று ஓய்வின்றி மருந்துவ உதவிகள் செய்தவர்.
இதனாலேயே கைவிளக்கேந்திய காரிகை என்று நைட்டிங்கேல் அழைக்கப்படுகிறார். செவிலிகளுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலில் துவங்கினார். பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம், அனைத்துத் செவிலிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் நைட்டிங்கேல்.
இவரின் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. விக்டோரியா மகாராணியிடமிருந்து செஞ்சிலுவை விருது பெற்ற நைட்டிங்கேல், 1907-ல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. செவிலியர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய நைட்டிங்கேல், 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் இதே நாளில் தான் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 13
மாயன் நாட்காட்டி தொடக்கம்
ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய அமெரிக்க நாடுகளில் வாழ்ந்த மாயா இனத்தவர்கள், சோல்டன், சோலப், சோல்கிஜ் என்ற 3 வகை நாட்காட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவற்றுள்சோல்டன்எனப்படும் நீண்ட கால அளவு நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டுமொத்த அசைவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்த நாட்காட்டிக்காக, இவர்கள் பயன்படுத்திய அச்சு இயந்திரம் முழுவதுமாக ஒரு சுற்று சுற்ற 5125 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு 5 சுற்றுகள் முடிந்தால் பூமி அதன் இறுதிக் காலத்தை அடையும் என மாயன்கள் கணித்திருந்தனர்.
அதன்படி, 5-வது சுற்று, கி.மு. 3114-ம் ஆண்டில் இதே நாளில்தான் தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நாட்காட்டிபடிதான், 2012-ம் ஆண்டு உலகம் அழியும் என நம்பப்பட்டது.

Tuesday, 12 August 2014

விழாக் காலச் சலுகை



14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு
ரூபாய் 100க்கு டாக்டைம் ரூபாய் 100
ரூபாய் 150க்கு டாக்டைம் ரூபாய் 150
ரூபாய் 250க்கு டாக்டைம் ரூபாய் 250
ரூபாய் 350க்கு டாக்டைம் ரூபாய் 350
ரூபாய் 550க்கு டாக்டைம் ரூபாய் 575
ரூபாய் 750க்கு டாக்டைம் ரூபாய் 790
டேட்டா சலுகை
14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு

ரூ561   5 GB  60 நாட்கள்
ரூ821   7 GB  90 நாட்கள்
ரூ1011  10 GB  90 நாட்கள்
ரூ1949 20 GB  90 நாட்கள்

Monday, 11 August 2014

மாவட்டச் செயற்குழு



13.08.2014 அன்று மாவட்டச் செயற்குழு நடைபெறும்.
02.09.2014 அன்று நடைபெறவுள்ள பணிக்குழு பயிலரங்கம் மற்றும் உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பான விழா

ஆகியவற்றைச் சிறப்பாக நடத்துவது பற்றி திட்டமிடப்படும்.

Saturday, 9 August 2014

வி ஆர் எஸ் VRS



பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு

பிஎஸ்என்எல் செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்

Wednesday, 6 August 2014

கோரிக்கைகள்




கூட்டுப் போராட்டக் குழு



07.08.2014
 ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள்


1.போனஸ்  வழங்கு 2.01/01/2007க்குப்பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஊதிய நிர்ணயத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளைக் களை
3ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை பிரஸ்னைக்கு தீர்வு காண்
4.பரிவு அடிப்படையிலான பணி நியமனத்தில் விதிகளை தளர்த்து
5.மருத்துவப்படி,
L TC  க்காக விடுப்பைக் காசாக்குதல் ஆகியவற்றை மீண்டும் கொடு
6.BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
7.  01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்கு.
8.அனைத்து அலவண்ஸ்களையும்  உயர்த்தி வழங்கு.
9.பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் வழங்கு
10.SRTOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
11.பதவிகளுக்கான பெயர் மாற்றம் செய்
12.JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்து
13.இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு செய்
14.JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்
15. ஆளெடுப்பு மூலம் புதிய ஊழியர்களை நியமனம் செய்
16.விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்
17.ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
18.MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கு
19.TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
20.மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்கு.
21.SC/ST இட ஒதுக்கீட்டில்  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்பு
22.SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்து
23. 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதி.
24.ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை இனியும் தாமதமின்றி வழங்கு
25.முதலாம் சம்பள மாற்றத்தில் உருவான அனாமலிகளை நீக்கு
26.JTO/JAO/TTA/TM தேர்வுக்கான தகுதிகளைத் தளர்த்து.
27.அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்து.
28. ஊழியர்கள் அனைவருக்கும்க் இலவச சிம் கார்டு வழங்கு
29.TELECOM FACTORYகளை மறு சீரமைப்பு செய்
30.01.10.2000 க்கு முன் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருது.

Tuesday, 5 August 2014

சொத்து



நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின்  அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர்.

நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த தகவல்

Saturday, 2 August 2014

விற்பனை நிலவரம்



ஜூலை 2014ல் ஈரோடு மாவட்டத்தில் 5045 புதிய ப்ரி பெய்டு மொபைல் இணைப்புகள் வழங்க்கப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக 3045 (60.4%) இணைப்புகளும் FRANCHISEE மூலாமாக் 2045 (39.6) இணைப்புகளும் வழங்க்கப்பட்டுள்ளன.
ஈரோடு MCCC 1134 இணைப்புகள் வழங்கி முதலிடம் பெறுகிறது.
66 புதிய போஸ்ட்பெய்டு இணைப்புகள் ஜூலை 2014ல் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக் மட்டுமே வழங்க்கப்பட்டுள்ளன.
இதிலும் 36 இணைப்புகள் வழங்கி ஈரோடு MCCC  முதலிடம் பெறுகிறது.
டேட்டா கார்டு, டம்மி சிம், GSM FWP கருவி விற்பனையிலும்
ஈரோடு MCCC  முதலிடம் பெறுகிறது.
கோபி வெங்க்கடேஸ்வரா FRANCHISEE  637 ப்ரிபெய்டு இணைப்புகள் வழங்க்கியுள்ளது.
ஈரோடு MCCC யில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. மேலும் 3 ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டால் செயல்பாடுகள் மேலும் சிறக்கும். இது குறித்து ந்மது மாவட்டச் சங்கம் பொது மேலாளரிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

Friday, 1 August 2014

நல்ல செய்தி



நமது நாட்டின் மிகப் பெரிய
பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) நமது BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளைப் பெறுவதற்கான ஒப்பந்த்ம் உருவாகியுள்ளது. இந்த  
ஒப்பந்தத்ம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.
மற்ற பொதுத்துறை நிறுவனங்க்களும் அரசுத் துறைகளும் இப்படி ஒரு முடிவை எடுத்தால், மகிழ்ச்சி கூடும்.
அதற்கான முயற்சியை ந்மது நிறுவனமும் எடுக்க வேண்டும். அனைத்து மத்திய் சங்க்கங்களும் இதற்கான முற்சியை மேற்கொள்ள வேண்டும்.


Thursday, 31 July 2014



நலமுடன்  வாழ்க

1.திரு R.சாமிநாதன் DGM
2.தோழியர் G.பெர்சி தாராபாய் SDE
3.தோழர் P.சென்னியப்பன் STSO
4.தோழர் K.கிருஷ்ணசாமி TM
5. தோழர் K.பழனிசாமி SSSO
6. தோழர் M.ராஜேந்திரன் SSSO
7. தோழர் P.சுப்ரமணியன் STSO
8. தோழர் K.V.வெங்கடேசன் TM

ஆகியோர் இன்று 31.07.2014 பணி நிறைவு பெறுகின்றனர். அவர்களது பணி நிறைவுக் காலம் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு அமைய மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்

Wednesday, 30 July 2014

இந்தியாவில் எப்போது?



உலகெங்கும் பெரும்பாலான அரசுகள் முதலாளிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்போது, தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருக்கிறது ஜெர்மனி. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், வரும் ஜனவரி 1 முதல் மணிக்கு 8.5 யூரோக்களாக (சுமார் ரூ.700) இருக்கும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை செய்தால் சுமார் ரூ.5,600. ஒரு மாத ஊதியம் சுமார் ரூ.1.5 லட்சம்.
ஜெர்மனி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு.
பிரிட்டனிலும் 1998 முதல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலும் சமூகநலத் திட்டங்களிலும் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியான பிரிட்டனும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறது. பிரான்ஸும் ஐரோப்பா முழுமைக்கும் பொதுவான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பதை இத்தாலி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அதிபர் ஒபாமா முயற்சி மேற்கொண்டார். ஆனால், நாடாளுமன்றம் அதைத் தடுத்துவிட்டது.
வளர்ந்த நாடுகளிலாவது தொழிற்சங்கங்கள் வலிமையுடன் உள்ளன. அந்த நாடுகளிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊதிய உயர்வின் அவசியத்தை உணர்ந்துள்ளன. வளரும் நாடுகளில் தொழிற்சங்கங்கள் வலிமையாக இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாமல், வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கின்றனர். சட்டங்கள் பல இருந்தும் அவற்றை முறையாக அமல்படுத்தி, தொழிலாளர் நலனைக் காப்பதில் வளரும் நாடுகளின் அரசுகள் முயற்சி எடுப்பதில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அரசுகளும், செல்வாக்குள்ள முதலாளிகளும் ஏற்றுக்கொள்வதேயில்லை. இதனால், உற்பத்திச் செலவு கூடும், லாபம் குறையும் என்றே வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல. தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டும் இல்லை, அவர்கள்தான் பிரதானமான நுகர்வோர்கள். தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் முழுக்க மீண்டும் செலவிடப்பட்டு, பொருளாதாரத்தை வளர்ச்சியடையவே செய்கிறது. அவர்கள் செய்யக்கூடிய முதலீடும் சமூகத்துக்கே பயன்படுகிறது.
அரசுப் பணிகள், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களைவிட அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட தொழிலாளர்களை வெகு காலமாகப் புறக்கணித்துக்கொண்டிருக்க முடியாது; சமூகத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் பிளவு மேலும் மோசமாகிவிடும். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுதான் வளர்ச்சியின் முதல் படியாக இருக்குமே தவிர, சந்தையையும் பொருளாதாரத்தையும் வரம்பில்லாமல் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதல்ல என்பதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.

35000 ரூபாய்



01.01.2004 முதல் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஓய்வூதியம்  கிடையாது.
ஏழை எளிய மக்களின் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய். 1000.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய ஓய்வூதியம் ரூபாய் 20000. இதை 75 சதம் உயர்த்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை எடுக்க உள்ளதாம். இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூபாய் 35000 ஆக உயரும்.

Monday, 28 July 2014

ரம்ஜான் வாழ்த்துக்கள்




மாவட்டச் சங்கத்தின்
இதயம் நிறைந்த
ரம்ஜான் வாழ்த்துக்கள்

சிறக்கட்டும்



அந்தியூர் கிளையின் மாநாடு 27.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட AITUC சங்க்த்தின் செயலர் தோழர் செல்வராஜன், மாநிலத் துணைச்செயலர் தோழர் யாசின், மாவட்டச் செயலர் தோழர் பழனிவேல் தோழர் பங்காரு மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள்  பங்க்கேற்று சிறப்பித்தனர்.
தோழர் v.நாகராஜன் ™) தோழர் S.சந்தானம்,
தோழர் S.A.முருகவேல் TTA  ஆகியோர் தலைவர், செயலர், பொருளாளர் பொறுப்புகளுக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டன்ர்.
அனுபபவம் மிக்க தோழர் M.P.ராமலிங்க்கம் உதவிச் செயலரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோழர் நல்லுசாமி மாநட்டுக்கான ஏற்பாடுகளச் சிறப்புடன் செய்திருந்தார். பணி ஓய்வு பெற்ற முன்னாள கிளைச் செயலர் தோழர் வெங்க்கடேசன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
அந்தியூர் கிளையின் செயல்பாடு சிறக்க மாவட்டச் சங்க்கத்தின் வாழ்த்துக்கள்

Saturday, 26 July 2014

தண்ணீருக்கு வெற்றி



24.07.2014 அன்று பவானி தொலைபெசி நிலையத்திலும் ஊழியர் குடியிருப்பிலும் தண்ணீர் வசதி கோரி  பவானி கிளைத் தோழர்களும் தோழியர்களும்  குடியிருப்பில் உள்ள மகளிரும் திரண்டிருக்க பவானி கிளைச் செயலர் தோழர் நாகராஜன் மற்றும் மாவட்ட உதவிச் செயல்ர் மெளனகுருசாமியும் காலை 10 மணிக்கு காலவரையற்ற பட்டினிப் போரைத் துவக்கினர். கோட்டப் பொறியாளருடன் அவரது அறையில் அனைவரும் திரண்டு பிரச்னை  குறித்து விவாதிக்கப்பட்டது. துணைப்பொது மேலாளர் (DGM EB) திரு சாமிதாஸ் அவர்கள் தொடர்பு கொண்டு தானும்
துணைப்பொது மேலாளர் (DGM CFA) திரு ராமச்சந்திரன் அவர்களும் மதியம் ஒரு மணிக்கு பவானி வருவதாகத் தெரிவித்தார்
சொன்னபடி
அவர்கள் இருவரும் பவானி  வருகை தந்தனர். தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் 25.07.2014 அன்று துவங்கும் என்று பட்டினிப் போர் நடைபெற்ற இடத்திற்கே வருகை தந்து வாக்களித்தனர். பட்டினிப்போரை முடித்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
நகராட்சி குடிநீர் குழாய்களில் உள்ள பழுதுகளைச் சரி செய்ய  நகராட்சி அதிகாரி ஒருவரும் ஊழியர்களும் வந்தனர். பழுதுகளை ஓரிரு நாட்களில் சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.
நமது அதிகாரிகள் தந்த உறுதிமொழி நம்பிக்கை தரும் வகையில் அமைந்ததால் பட்டினிப் போர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராடிய பவானி கிளையின் தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
ஊழியர் குடியிருப்பிலிருந்து பங்கேற்ற தோழியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வுக்கு உதவிய துணைப் பொதுமேலாளர்கள் இருவருக்கும் நமது  நன்றி.
பிரச்சினை தீர்வில் அக்கறை காட்டிய கோட்டப் பொறியாளர்,   துணைக் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கும் நன்றி.
உறுதிமொழியின் அடிப்படையில் தண்ணீர்ப் பிரச்னை தீர்வுக்கான பணிகள் துவங்கி  நடைபெற்று வருகின்றன.