NFTECHQ

Friday, 30 June 2017

உயர்கிறது விலைவாசிப்படி
01.07.2017 முதல்
1.9 சதவிகிதம்
விலைவாசிப்படி

 உயர்கிறது.
வாழிய பல்லாண்டு

இன்று (30.06.2017) பணி நிறைவு பெறும்
1.தோழர் C.பெரியசாமி  CAO
2.தோழர் G.கருப்புசாமி SDE
3.தோழர் N.தங்கவேல் SDE
4.தோழியர் G.பிரேமா OS
5. தோழர் V.அங்குராஜ் TT
6.தோழர் K.முத்துசாமி  TT
7. தோழர் V.ராஜேந்திரன் TT
8. தோழர் M.நடராஜன் TT
9. தோழர் S.ஆரிப் சாஹிப் TT
10. தோழியர் S.சண்முகவடிவு  ATT
11. தோழர் A.ராஜமாணிக்கம் ATT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
 பல்லாண்டு வாழ
மாவட்டச் சங்கம் சார்பாக

வாழ்த்துகிறோம்.

Monday, 26 June 2017

நல்வாழ்த்து
நாம் சொல்வோம்

அனைவருக்கும்
இனிய
உள்ளம்
நிறைந்த

ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

Saturday, 24 June 2017

மாவட்டச் செயற்குழு
நாள் 28.06.2017
காலம் காலை 10 மணி
இடம் ஆண்கள் ஓய்வறை டெலிபோன்பவன் ஈரோடு

ஜூலை 3,4 தேதிகளில்  பட்டினிப்போர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட,
உதவும் உள்ளங்கள்
விழாவைச் சிறப்புடன் நடத்திட,
செப்டம்பர் மாதம் பணி  ஓய்வு பெறும் சத்தி கிளைச்செயலர் அன்புத் தோழர் சுப்ரமணியம் அவர்களின் பணி நிறைவு விழாவைச் சிறப்புடன் நடத்த திட்டமிட
ஊழியர் பிரச்னைகளை  விவாத்திட
நடைபெறும் செயற்குழுவில்
அனைவரும் காலத்தே பங்கேற்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்
N.பழனிவேலு

மாவட்டச் செயலர்
கண்ணதாசன்
பிறந்த தினம்
ஜூன் 24

திரையுலகின் திருவள்ளுவராக
கனவுத்தொழிற்சாலையின் கம்பனாக
இன்னிசைப் பாடலின் இளங்க்கோவடிகளாக
வாழ்ந்த கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.

"கலங்க்காதிரு மனமே" என்ற வரியுடன் துவங்கும் பாடலே அவரது முதல் திரைப்படப் பாடல்.

"எல்லாரும் "எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"
என்ற வரிகள் பொதுவுடைமைக் கொள்கையின் அடிநாதத்தை
உணர்த்தும் வரிகள்.

கண்ணதாசன்
நிரந்தரமானவர்.

எந்னிலயிலும் அவருக்கு மரணமில்லை. 

Thursday, 22 June 2017

பாஜகவின் குறியீட்டு

மூலதனக் கொள்ளை!

  T+  
குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்கு பாஜக தள்ளியிருக்கிறது.
தலித் என்பது சாதிய வகைமை என்றுதான் நாம் கருதிக்கொண்டிருக்கிறோம். அதற்கும் மேல் அதுவொரு குறியீட்டு மூலதனமும் (Symbolic Capital) ஆகும். குறியீட்டு மூலதனத்துக்கு அம்பேத்கர், காந்தி, பெரியார் முதலான ஆளுமை களையும்; தமிழ், தலித் போன்ற சமூகக் குழுக்களையும் உதாரணங்களாகச் சொல்லலாம். அத்தகைய குறியீட்டு மூலதனத்தை அளப்பரிய இழப்புகளும், போராட்டங்களுமே உருவாக்குகின்றன.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார மூலதனத்தைக் கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடுவ தில்லை, குறியீட்டு மூலதனத்தையும் அபகரிக்க முனைகிறார்கள். தமக்கேற்ற மரபான குறியீடுகளை உயர்த்திப் பிடிப்பதோடு, தமக்கு எதிரான கலகக் குணம் வாய்ந்த குறியீடுகளைத் தன்வயப்படுத்தி அவற்றை மதிப்பழிப்புச் செய்கிறார்கள்.
படேலுக்கு அமைக்கப்படும் பிரம்மாண்டமான சிலை மரபான குறியீட்டை உயர்த்திப் பிடிப்பதற்கும், டெல்லியில் அம்பேத்கருக்கு அமைக்கப்படும் தேசிய நினைவிடம் கலகக் குறியீட்டைத் தன்வயப்படுத்துவதற்கும் பாஜக எடுக்கும் முயற்சிகளுக்கு உதாரணங்கள். தலித் என்ற குறியீட்டு மூலதனத்தை அபகரிப்பதற்கு பாஜக இரண்டு விதமான உத்திகளைக் கையாள்கிறது. ஒன்று, அம்பேத்கர் என்ற ஆளுமையை அபகரிக்க முயற்சித்தல். இரண்டு, பலவீனமான பிம்பங்களைக் குறியீடுகளாக உயர்த்திப் பிடித்தல். இரண்டாவது உத்தியின் வெளிப்பாடுதான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த்.
தலித் குறியீட்டு மூலதனத்தை அபகரிக்க முயற்சித்துக்கொண்டே இன்னொரு புறம், தலித் மக்களுக்கான திட்டங்களை ஒழித்துக் கட்டிக்கொண்டிருக்கிறது பாஜக. மூன்றாண்டு கால ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டத்தின் (SCSP) அடிப்படையில் தலித் மக்களின் நலத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய தொகையில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் வஞ்சித்தது, ‘ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ என அழைக்கப்படும் தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ரூ.882 கோடியிலிருந்து வெறும் 50 கோடியாகக் குறைத்தது என அதைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
தலித் மக்களை சமூக, பொருளாதாரத் தளங் களில் அடிமை நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கும் வகுப்புவாத வன்முறையை ‘தலித் குடியரசுத் தலைவர்’ என்ற நெகிழ் திரை கொண்டு மறைக்கப் பார்க்கிறது பாஜக. நிச்சயம் அதன் நோக்கம் நிறைவேறாது.
ரவிகுமார், எழுத்தாளர், விசிக துணைப் பொதுச் செயலாளர்.

நன்றி இந்து தமிழ்

Wednesday, 21 June 2017

சமூக பாதுகாப்புத் திட்டம்

நமது நிறுவனத்தில் பணியில் உள்ள
ஊழியர்கள் பணிக்காலத்தில்
உயிர் இழக்க நேர்ந்தால்
அவர்களின் குடுபம்பத்துக்கு
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ உதவித்தொகவழங்கும் திட்டம்
குறித்து அனைத்து சங்கங்களும்
ஆலோசனைகளை வழங்குமாறு
 நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது..

விருப்பம் உள்ள ஊழியர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இதற்கான கடைசி தேதி 30.06.2017.

கருத்துக்களை அனுப்ப
வேண்டிய ம்ன்னஞ்சல் முகவரி
restg@bsnl.co.in

Tuesday, 20 June 2017

இரங்கல்
அன்பு
அடக்கம்
அறிவு
ஆற்றல்
இவற்றின்
உருவமாகத் திகழ்ந்த்
NFTE இயக்கத்தின்
முன்னணித் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த
தோழர் வாதிராஜன்
அவர்களின் மறைவுக்கு

நமது இரங்கலைக் காணிக்கையாக்குகிறோம்.

Monday, 19 June 2017

பட்டினிப் போர்
NFTE
TEPU
SEWA
PEWA
BTEU (BMS)
ஆகிய அமைப்புகள் இணைந்து
03.07.2016
04.07.2016 ஆகிய்
இரு
தினங்களில்
பட்டினிப்போர் இய்க்கத்தை
தலைநகரிலும்
மாநில தலைநகரங்களிலும்
மாவட்ட தலைநகரங்களிலும்
பட்டினிப்போர்
இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளன.
         கோரிக்கைகள்
மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டுதலை உடனே வெளியிட வேண்டும்.

மூன்றாவது ஊதிய மாற்ரத்துக்கான பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும்.

சிறப்புற  நடத்திடுவோம்.

திரளாகப் பங்கேற்போம்.