மாவ்ட்டச் செயற்குழு
18.06.2016 அன்று மாவட்டச் செயற்குழு
நடைபெற்றது.
நடந்து முடிந்த உறுப்பினர் சரிபார்ப்புத்
தேர்தல் அதன் முடிவுகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
நமது மாவட்டத்தில் நாம் பெற்ற
வாக்குகள், நமது தோழர்களின் கடும் உழைப்பு இதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நமது கூட்டணி அனமைப்புகளின் தலைவர்கள்
மற்றும் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய உழைப்புக்கு உளமார்ந்த நன்றியை
மாவட்டச்
செயற்குழு தெரிவித்தது.
ஆரோக்கியமான, பயனுள்ள் கருத்துக்களைத்
தோழர்கள் தெரிவித்தனர்.
மாநில மாநாட்டுக்கு நமது
மாவட்டத்துக்கு தரப்பட்டுள்ள இலக்கை நிறைவேற்ற
அவசர நடவடிக்கைகைகள் எடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
நமது இயக்கத்தின் பாரம்பரியம்
காக்கப்படும் வகையில் வேலூரில் தமிழ் மாநில மாநட்டைச் சிறப்பாகவும்,
பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும், ஒற்றுமையாகவும், ஒரு மனதாகவும் நடத்த் வேண்டும்
என்ற விருப்பத்தைத் தோழர்கள் தெரிவித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
மாவட்ட மாநாட்டை 31.08.2016க்குள்
நடதி முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாற்றல் கொள்கை அமலாக்கத்தை விரைந்து
முடித்திட வேண்டும் என
முடிவெடுக்கப்பட்டது.
நமது இயக்கத்தின் மாநில அலுவலகமாம்
தோழர் ஜெகன் இல்லத்தில் பணியாற்றி மறைந்த தோழன் கார்த்தி குடும்ப நிவாரண நிதி
குறித்த வேண்டுகோளுக்கு தோழர்களின் பங்களிப்பு நிறைவாக இருந்தது.
நமது மாநிலச் சங்கம் சார்பாக
வழங்கப்படவுள்ள நிவாரண நிதிக்க்கான நமது மாவட்டச் சங்கத்தின் பங்கை விரைந்து அனுப்பிட வேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டது.
போணஸ், மருத்துவத்திட்டம் போன்ற பிரச்னைகளுக்கு
மத்திய சங்கம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என செயற்குழு வலியுறுத்தியது.