NFTECHQ

Friday 27 February 2015

நல்லகண்ணுவுக்கு விருது



அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையாக தொண்டாற்றியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் தீஸ்டா செடல்வாட் ஆகியோருக்கு தலா ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள காயிதே மில்லத் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிப்பவர்களுக்கு விருதுகள் வழங்குகிறது. முதல் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளரான தீஸ்டா செடல்வாட் ஆகியோர் பெறுகின்றனர்.
இது தொடர்பாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மற்றும் எஸ்.ஐ.இ.டி அறக்கட்டளையின் தலைவர் மூசா ராசா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வி.வசந்தி தேவி, டாக்டர்.தேவசகாயம், பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். தேர்வுக் குழுவினர் இரண்டு முறை கூடி, விருது பெறுபவர்களை இறுதி செய்தனர்.
ஜனநாயக மாண்புகளை பாதுகாப்பதற்காக 90வது வயதிலும் ஓயாது போராடி வரும் அரசியல் தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமைகள் எந்த வகையில் மீறப்பட்டிருந்தாலும் அதை எதிர்த்து போராடி வருபவரான நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்என்ற அமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் ஆகியோர் இந்த ஆண்டின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தலா ரூ.2.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.

இனியவன்

பொள்ளாச்சி- வேலைக்குப் போகும் வாலிபர்கள் தங்கும் அறையில் அவனது நண்பனுடன் தங்கியிருந்தான். அனைவருடனும் இனிமையாகப் பழகும் பண்பு  உடையவன். எனவே ஆண்,பெண்,இளையவர், மூத்தவர் என பாகுபாடு இல்லாமல் பழகினான். அவன் உடல் அழகும் அனைவரையும் கவருவதாக இருந்தது கூடுதல் சிறப்பு. திருமணம் ஆகாத இளம் வாலிபன் தொழிற்சங் கத்தின் மீது அவனுக்கு ஈர்ப்பு  இருந்தது. இது போதாதா? அவனை பொள்ளாச்சி கிளையின் செயலராக தேர்வு செய்ய. அந்த கிளையில் அரசியல் ரீதியாக செயல்படும் சிலர் இருந்தனர். ஒருவர் பின்னாளில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் இலாகா பணியில் இருந்தவரை NFPTE  சங்கத்தில் இருந்தார். மற்றொருவர் எம்.ஜி.ஆரின் அபிமானி. அவரும் NFPTE  சங்கத்தில்தான் இருந்தார். இவைகளுக்குக் காரணம் அனைவரையும் அணைத்துச் செல்லும் பாங்கு கொண்ட தோழர்
எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் தான்

அவர் விரும்பவில்லை என்றாலும் இயக்கத்தின் தேவை கருதி மாவட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொள்ளாச்சியில் இருந்து மாற்றல் பெற்று கோவை வந்தார். அவர் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக உளமார பாடுபட்டார். மாற்றுச் சங்கத்தின் பொதுச் செயலராக இருந்த ஒரு தோழரை அந்த பதவியை விட்டு விட்டு NFPTE சங்கத்தில் இணைய வைத்தார். அது அன்று ஒரு இமாலய சாதனை. தோற்றத்தில் சாது. ஆனால் பிரச்னை என்று வந்து விட்டால் நிர்வாகத்திடம் விட்டுக் கொடுக்காமல் போராடுவது அவரது இயல்பு. தலமட்ட போராட்டங்களில் போராடி விழுப்புண் பெற்றார். குன்னூர் மாவட்டத்தில் மாற்று தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு சென்று அதில் பங்கேற்று அதற்காக தண்டனை பெற்றார்.    

நிதானம், உறுதி இரண்டும் அவரது பண்புகள். அகில இந்திய சங்கத்தின் பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவை தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு என்பதாக அவர் எங்கும் வெளிக்காட்டிக் கொளளவில்லை. இது அவரின் தனிச் சிறப்பு.

அவர் 28.02.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். ஈரோடு மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த நீங்கா  நினைவுகளுடன் தோழர் கோபாபாலகிழுஷ்ணணை வாழ்த்துவோம்.
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.








11000 கோடி



பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்
வளர்ச்சிக்காக
ரூ.11,000/= கோடி முதலீடு செய்யப்படும் என தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
 நாடாளுமன்றத்தில் 25.02.2015 அன்று 
தெரிவித்துள்ளார்.
கூடுதலாக 14421- 2G செல் சேவை டவர்கள் 10605 -3G செல் சேவை டவர்கள் நிர்மாணிக்கப்படும்.
லேண்ட்லைன்சேவையை மேம்படுத்த  ரூ.600 கோடி செலவிடப்படும்.
 தொலைபேசி நிலையங்களை நவீனப்படுத்த ரூ.350 கோடி செலவிடப்படும்.
வாடிக்கையாளர்களின் தேவையறிந்து BSNL,MTNL சேவைகளை
அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்ற நடைபெற்ற தினத்தில் அமைச்சர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் நமது தலைவர்களைச் சந்தித்து மனுவைப் பெற்றுக் கொண்டு அவர்களிடம்
இந்தத் தகவலகளைத் தெரிவித்திருந்தால் அவர் போற்றுதலுக்கு உள்ளாகியிருப்பர்.

Wednesday 25 February 2015

ட்ராய் முடிவு

ஒரு தொலைத்தொடர்பு  நிறுவனத்தின் தொலைபேசி அல்லது மொபைல் இணைப்பிலிருந்து மற்றொரு தொலைத்தொடர்பு
நிறுவனத்தின் தொலைபேசி அல்லது மொபைல் இணைப்பைத் தொடர்பு கொண்டால் அதற்காக ஒரு நிறுனம் மற்றொரு நிறுவனத்திற்கு IUC எனப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தற்போது இந்தக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 20 பைசா. இதை 14 பைசாவாகக் குறைக்க ட்ராய் முடிவு செய்துள்ளது.
லேண்ட்லைனிலிருந்து
தொடர்பு கொண்டால் அதற்கு IUC கட்டணம் கிடையாது என்றும் ட்ராய் முடிவு செய்துள்ளது. இது பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குப் பலன் தரும்.  ஏனெனில் பி.எஸ்.என்.எல் 1.7 கோடி லேண்ட்லைன் இணைப்புகளுடன் அந்த சேவையில் முதலிடம் வகிக்கிறது.


இதன் மூலம் கட்டணங்கள் குறையலாம்.

CALL RATES MAY FALL



Call rates may fall as Trai cuts interconnection usage charges Interconnection usage charges reduced to 14 paise per minute from the current 20 paise Older operators with more subscribers and bigger networks tended to make money from this charge, while smaller operators ended up paying a charge, on a net basis. Photo: Mint New Delhi: In a move that could lead to lower call rates, the Telecom Regulatory Authority of India (Trai) on Monday reduced interconnection usage charges to 14 paise per minute from the current 20 paise. Interconnection usage charges are payable by a telco whose subscriber makes a call, to the telco whose subscriber receives the call. The charge is essentially payable by the first telco for using the second telco’s network. This means older operators with more subscribers and bigger networks tend to make money from this charge, while smaller operators end up paying a charge, on a net basis. The move is likely to be welcomed by smaller and newer operators, while the larger telcos are likely to contest the new tariff. Analysts had mixed reactions on the decision. “This move of Trai is very positive and healthy sign for the telecom industry. However, since the tariffs in India are lowest in the world, and in view of high spectrum costs and taxes faced by the telecom operators, they may not be able to pass on the benefit of reduced termination charges to the consumer in full,” said Hemant Joshi, partner at Deloitte Haskins and Sells. A Mumbai-based telecom analyst with a multinational brokerage firm said, “The operators will have to pass on the reduction, as smaller operators will have room to reduce tariffs and eat into customer market share. It is difficult to say that there could be a tariff war again as the overall debt of the sector is a little high.” Calls originating from and ending in land phones will not have any interconnection charges, Trai added. “To promote investment in, and adoption of, wireline networks, so that they may become an effective vehicle for the delivery of high-speed Internet in the country, the Authority has decided to prescribe FTC (fixed termination charge) as well as MTC (mobile termination charge) for wireline to wireless calls as zero,” Trai said in a statement on the new interconnection charges. Termination charges for international incoming calls have been increased to 53 paise per minute, from the current 40 paise. The number of fixed line connections in the country has been falling for several years now. The mobile subscriber base at the end of 2014 reached an all-time high of 943.9 million, while landline connections are only 27 million. State-run Bharat Sanchar Nigam Ltd (BSNL) has the most landline phone subscribers with 62.71% market share, followed by state-owned Mahanagar Telephone Nigam Ltd (MTNL) with 13.04%. Others with fixed line services include Bharti Airtel Ltd with 12.55% market share, Tata Teleservices Ltd with 5.98% and Reliance Communications Ltd (R-Com) with 4.39% market share. Videocon’s Quadrant, Vodafone India Ltd and Sistema Shyam TeleServices Ltd together account for 1.2% market share. In the mobile services segment, Bharti Airtel is leader with a 23.01% market share followed by Vodafone with 18.93%, Idea Cellular Ltd 15.95%, R-Com 11.26%, BSNL 8.62%, Aircel 8.33%, Tata Teleservices 7.01% and Uninor 4.62%. Sistema Shyam, Videocon Telecom and MTNL together account for about 2% mobile services market share. Trai reviews the interconnection charges every two-three years, but was unable to do it since the current interconnection regime came into place in April 2009, as the issue was pending in the Supreme Court. The new charges are a consequence of the consultation process started by the telecom regulator in November 2014.

Saturday 21 February 2015

உணர்வும் உணவும்

நமக்கு உணவும் உயிரும் தந்து நம்மை நேசித்த மண்.

உணவும் உயிரும் தந்ததால் நாம் நேசித்த மண். இந்த் மண்ணைப் பாழ்படுத்தி நம்மையும் பாழாக்கும்

மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சையில் 201.02.2015 அன்று பெருந்திரள் தர்ணா.

சிறப்பு அம்சங்கள்
தோழர் சி.கே.மதிவாணன் அவர்களின் சிறப்பான
தலைமை.
BSNL  தொழிலாளர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து பங்க்கேபு.
உனர்வாலும் அறிவாலும் உரைக்கபட்ட தலைவர்களின் பேச்சு.
தஞ்சைத் தோழர்களின் அற்புதமான ஏற்பாடுகள்.
காலை துவங்கியதிலிருந்து மாலை முடியும் வரை ஆளில்லாத நாற்காலியே இல்லை எனும் அளவுக்கு முழுமையாகப் பங்க்கேற்ற தோழர்கள்.
மண் காக்க,
மண்ணின் மைந்தர்களின்
 வாழ்வு காக்க,
இந்த மண்ணையே நம்பி உழைத்து, உண்டு, உறங்கி வாழும் விவசாய்த் தொழிலாளித் தோழர்களின்
வாழ்வு காக்க
நடைபெற்ற இப் போராட்டம்

ஒரு வரலாறு.

மனசு

இன்று நள்ளிரவு தாண்டிய பின் அந்த நிகழ்சி நிறைவு பெற்றது. குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி. இறுதியில் ஆறு குழந்தைகள் பங்கேற்றன. அதில் முதல் மூன்று குழுந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் புதிது என்ன எனக் கேட்கத் தோன்றுகிறதா? ஆம் இதில் புதுமை ஏதுமில்லை. இரண்டாம் பரிசு பெற்ற பெண் குழந்தை பெயர் ஜெசிக்கா ஜூட். கனடா வாழ் இலங்கை தமிழர். அந்த குழந்தைக்கான பரிசு ஒரு கிலோ தங்கம். அதை பெற்றுக் கொண்ட பின் அந்த குழந்தையின் தந்தை ஒரு அறிவிப்பினை உடனடியாக அறிவித்தார். அது தான் புதிது. நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாங்கள் ஒரு முடிவு செய்தோம் அதை முழு மனதுடன்  எங்கள் குழந்தை ஜெசிக்கா ஜூட் ஏற்றுக் கொண்டாள் என்று அவர் தங்கள் முடிவினை அறிவித்தார். பரிசு என்ன கிடைத்தாலும் அதில் பாதியை சென்னையில் ஜெசிக்கா ஜூட் அடிக்கடி சென்று வரும் அனாதை குழந்தைகள் இல்லத்திற்கும் மீதியை இலங்கையில் உள்ள அனாதை குழந்தை இல்லத்திற்கும் வழங்க முடிவு செய்ததாக அறிவித்தார். கிராம் ரூ.2500 என கணக்கிட்டால் ரூபாய் இருபத்தைந்து லட்சம் பரிசு தொகை. அது முழுவதும் குழந்தைகளுக்காக வழங்கப்படுகிறது. கேட்டதும் நெஞ்சு நெகிழ்து போனது.கனடாவிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள அவர்கள் வெறும் கையுடன் சென்னை வந்தார்கள். திரும்பிச் செல்கையில் மீண்டும் வெறும் கையுடன் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்லும் போது இந்திய மக்களின் சென்னை குழந்தைகள், இலங்கை குழந்தைகளின் அன்பை, பாசத்தை, வாழ்த்துக்களை சுமந்து செல்வார்கள் அது ஜெசிக்கா ஜூட் குடும்பத்தினருடன் அவர்கள் வாழ்நாள் முழுக்க நீடிக்கும். நாமும் வாழ்த்துவோம் அவர்களின் பரந்து விரிந்த மனதை

Thursday 19 February 2015

ஸ்பெக்ட்ரம் ஏலம்

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத்துக்கு 8 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 20,435 கோடியாகும்.
ஏலம் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் அதிகபட்ச காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளது.
மொத்தம் 8 நிறுவனங்களும் செலுத்திய தொகை ரூ. 20,435 கோடி என தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ரூ. 4,500 கோடி, பார்தி ஏர்டெல ரூ. 4,336 கோடி, ஐடியா செல்லுலர் ரூ. 4,000 கோடி, வோடபோன் ரூ. 3,700 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ. 1,500 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 1,175 கோடி, டெலிவிங்ஸ் (யுனிநார்) ரூ. 724 கோடி, ஏர்செல் ரூ. 500 கோடி செலுத்தியுள்ளன.
ஏல விற்பனை மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் லைசென்ஸ் 2015-16-ல் முடிகிறது.
ஐடியா செல்லுலர் 9 வட்டாரம், ஏர்டெல் 6, ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் தலா 7 வட்டாரங்களுக்கான தொலைத் தொடர்பு சேவைக்கு மறு விண்ணப்பம் செய்துள்ளன. ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகியன 3 ஜி சேவையை 22 தொலைத் தொடர்பு வட்டாரங்களில் அளிக்கின்றன. ஐடியா செல்லுலர் நிறுவனம் 11 வட்டாரங்களில் அளிக்கிறது. வோடவோன் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் 9 வட்டாரங்களில் அளிக்கிறது.
3ஜி சேவை இல்லாத பகுதிகளில் தங்களுடைய சேவையை விரிவுபடுத்துவதற்காக ஏலத்தில் இந்நிறுவனங்கள் பங்கு பெறும். இதன் மூலம் இந்தியா முழுவதற்குமான சேவையை அளிக்க முடியும்.

Wednesday 18 February 2015

விளையும் நிலம் வீணாவதோ


 தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்படும். காவிரி டெல்டா பகுதியில் சுமார் 20 லட்சம் ஏக்கர் விவசாயம் அழியும் நிலை ஏற்படும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைவார்கள்.
பூமியில் 2 ஆயிரம் அடி துளை போட்டு ரசாயனத்தை செலுத்தி பாறைகளை வெடிக்க வைத்து மீத்தேன் எடுக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு அடையும். எனவேதான் மேற்கத்திய நாடுகள் இத்திட்டத்தை நிறுத்திவிட்டன.

-      மேதா பட்கர்

TTA தேர்வு



TTA  தேர்வு 07.06.2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் மாநில அலுவலகம் இது குறித்து அறிவிப்பு வெளிடயிடும்.

Tuesday 17 February 2015

கோபி கிளை மாநாடு

14.02.2015 அன்று கோபி கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு மாநாட்டுத் துவக்கவுரையாற்றினார்.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் வாழ்த்துரை வழங்கினார். AITUC மாவட்டச் செயலர் தோழர் செல்வராஜன், தோழர் மாலி ஆகியோர் மாநாட்டுச் சிறப்புரையாற்றினர். தோழர்கள் ஆறுமுகம் (TSO), முருகசாமி(TM), கார்த்திகேயன் (TM) ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளர் பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பணி ஓய்வு பெற்ற தோழர் R.முத்துசாமி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் செயல்பாடு சிறக்க மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாநாட்டுச் செய்தி

மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும்.

Saturday 14 February 2015

அன்பு

இரண்டு தோழர்கள் அன்பு மற்றும் காதல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இருவருமே  அன்புதான் முதன்மையானது என்பதில் ஒன்றுபட்ட கருத்துடன் பேசினர். அப்போது ஒரு தோழர் “அன்புதான் பெரியது. அன்புதான் பொதுவானது” என்றார்.

அந்த இரண்டு தோழர்களில் ஒருவர் கேட்டார். “அப்படியென்றால் அன்பின அடிப்படையில் ஒற்றுமையை உருவாக்குக்கள்” என்றார். அப்போது வேறொரு தோப்ழர் சொன்னார்.
“அன்பின் அடிப்படையில்தானே அதிகாரத்தையே கொடுத்தோம். அதிகாரத்தை ப் பெற்றவர்கள் அன்பைக் காட்டுவத்ற்கு மாறாக அராஜகத்தை காட்டுகிறார்கள்” என்றார். “அன்பு பொதுவானது: என்று சொன்ன தோழர் சொன்னார் “அராஜகத்தைக் காட்டுகிறவர்களிடமும்
அன்பைக் காட்டுபவனே 
னிதன்” என்றார்

Thursday 12 February 2015

ஒரு குரல்

“நாங்கள் சித்தாந்த அரசியலுக்குள் அடைபட மறுப்பவர்கள், அதற்கு அப்பாற்பட்டவர்கள்  
என்று ஒரு குரல்   (ஆஆக) ஒலித்தூளது.
சித்தாந்த அரசியல் நிலைக்குமா?

சித்தாந்தம் இல்லாத அரசியல் நிலைக்குமா?

என்பதை காலமும் மக்களும் நிர்ணயிக்கும் சூழ்நிலை உருவாகும்.

Wednesday 11 February 2015

பிப்ரவரி 11

சிந்தனைச் சிற்பி என்று போற்றப்படும் ம.சிங்காரவேலர் மறைந்த தினம் இன்று. 1860 பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, வக்கீல் அங்கியை எரித்து, தன் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். இந்தியாவில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய முதல் தலைவர் சிங்காரவேலர். சென்னை தொழிலாளர் சங்கம் என்ற சங்கத்தை முதன் முதலில் இந்தியாவில் ஏற்படுத்தினார். 1925 ஆம் ஆண்டு சென்னை மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். சிங்கார வேலரின் விருப்பப்படி அவரின் 10ஆயிரம் நூல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிடம் வழங்கப்பட்டது.

*****************
பிப்ரவரி 11,1990 சிறையிலிருந்து மண்டேலா விடுதலை


தென்னாபிப்ரிக்காவின் காந்தி என்று போற்றப்படும் நெல்சன் மண்டேலா, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள் இன்று. 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொறுப்புக்கு வந்தார். இவரது போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட ஆங்கிலேய அரசு மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டியது. இதனால் 1964 ஆம் ஆண்டு ஜூன் 12ல் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இவரின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகியது. இதனால் அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெ க்ளார்க் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மண்டேலாவின் விடுதலையை அறிவித்தார். அதற்கடுத்த நாளே சிறையிலிருந்து மண்டேலா விடுவிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு வயது 71.

மாநிலச் செயற்குழுவில் நடந்தது என்ன ??

10-02-2015 அன்று 
தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழுவில் 
பொறுப்பின்மையோடும், சகிப்புத்தன்மையின்மையோடும் 
மாநிலச் செயலர் நடந்து கொண்டதால் நடந்த 

நிகழ்வுகளை அறிய ...
..கிளிக் செய்யவும்

ERP- விடுப்பு விண்ணப்பிப்பது எப்படி?



என்ற இணையதள்த்துக்குச் செல்லவும்.
User Id என்ற இடத்தில் HRMS எண்ணின் முதல் எண்ணைத் தவிர்த்து மீதி எட்டு எண்களை டைப் செய்யவும்.
(உதாரணம் 197600000 என்பதில் 97600000 என டைப் செய்ய வேண்டும்.
ரகசிய எண்ணை (Password) டைப் செய்யவும்.  
பிறகு ஒரு திரை வரும்.
அதில்  இடது பக்கத்தில் welcome என்ற இடத்தில் உங்கள் பெயர் வரும். அதற்குக் கீழ் உள்ள Employee Self Service என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் வலது பக்கத்தில் “Working time”  என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் இடது பக்கத்தில் “Leave Request”
என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் name of leave என்பதில் என்ன விடுப்பு  தேவை என்பதைத் தேர்வு செய்யவும்.
(Casual laeave, EL,Commuted Leave, RH)
அதன் பிறகு வலது பக்கத்தில் From என்பதில் தேதியை தேர்வு செய்யவும். பிறகு To  என்பதில் தேதியை தேர்வு செய்யவும்.
பிறகு Reason to leave என்பதில் Personal, Illness என தேவைக்கேற்றவாறு டைப் செய்யவும்.
பிறகு கீழே உள்ள Check என்ற பட்டனை கிளிக் செய்யவும். விடுப்பை அனுமதிக்கும் உரிய அதிகாரியின் பெயர், பதவி திரையில் வரும். அதன் பிறகு send என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் வேண்டுகோள் உரிய அதிகாரிக்குச் சென்று விடும்.
* குறியிட்ட இயடங்கள் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
பாஸ்வோர்டை மிகவும் கவனமாக கையாள வேண்டுகிறோம்.
பிறகு தவறாமல் திரையின் வலது பக்கத்தில் உள்ள LOGOFF என்ற பட்டனை கிளிக் செய்யவும். பிறகு வரும் திரையில் yes என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


Tuesday 10 February 2015

நிகழாத நிகழ்வு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில்

ஆம் ஆத்மி  மொத்த்ம் 70 தொகுகளில் 67 தொதிலகளில்வெற்றி பெற்று

சுத்ந்திர இந்தியாவில் இதுவரை நிகழாத ஒரு நிகழ்வை வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

மக்கள் கொடுத்த வாய்ப்பை மக்களுக்காக பயன்படுத்தாமல் “நானே சர்வ வல்லமை படைத்த சக்தி” என்ற எண்னத்துடன் நடப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதே ஜனநாயகத்தின் மாண்பு.

வெற்றிக்கான காரணங்கள் என்ன?

கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை நடத்தியது. முதலில், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெரிந்தாலும், வாக்குகள் வித்தியாசம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எதிர்மறை வாக்குகள் ஆம் ஆத்மி சார்பாக விழுந்துள்ளதாகக் கூற வாய்ப்பில்லை. 
இத்தகைய வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். குறிப்பாக டெல்லியில் உள்ள பெரும்பான்மை மக்கள், குறிப்பாக சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ளவர்கள் ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாட்கள் ஆட்சி தங்களுக்கு நல்லது செய்ததாக உணர்ந்தனர். குறிப்பாக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் சில்லறை லஞ்சம் ஒழிக்கப்பட்டது. மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் மக்களுக்கான முறையில் அமல் செய்யப்பட்டது. நல்லதைச் செய்யும் கட்சி என்ற நம்பிக்கையை அடித்தட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. 

இரண்டாவது மிக முக்கிய காரணம், லோக்சபா தேர்தல் முடிவுகளால் அந்தக் கட்சி ஒன்றும் ஆடிப்போய்விடவில்லை. அதன் பிறகு கட்சியை ஒருங்கிணைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒதுக்கப்பட்ட தொகைகளில் திட்டங்களை நடைமுறைப் படுத்தினர். இதனால் தொண்டர்களின் செயல்பாடுகள் புது உத்வேகம் பெற்றன. இதனால்  சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினர்களுடன் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.  பொதுவாகக் கூறவேண்டுமெனில், ஆம் ஆத்மியின் அரசியல் செயல்முறை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே. இதில் பயனடைந்தவர்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களே. வாக்களிப்பது என்பது தங்களது அன்றாட வாழ்வை  மாற்றியமைக்கும் ஒரு விஷயம் என்பதை ஆம் ஆத்மியின் செயல்பாட்டு அரசியல் எடுத்துரைத்துள்ளது..
ஆம் ஆத்மி பேசிய வர்க்க அரசியல் மொழி நடுத்தர வர்க்கத்தினரை அச்சுறுத்துவதாக இல்லை. தங்களது நிலைக்கு ஆபத்து வராத நிலையில் ஏழைகளுக்கான அரசியலை அவர்கள் ஆதரிக்கவே செய்தனர். அதாவது செய்து முடிப்பது என்ற இந்த நடைமுறை பல்வேறு வர்க்கத்தினரையும் ஒன்று திரட்டியுள்ளது.